MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • இரவில் தலை வாரினால் செல்வம் சேராதா? சாஸ்திரம் சொல்ற உண்மை என்ன?

இரவில் தலை வாரினால் செல்வம் சேராதா? சாஸ்திரம் சொல்ற உண்மை என்ன?

Women Comb Hair At Night : பெண்கள் இரவில் தலைமுடி சீவக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகின்றது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Kalai Selvi
Published : Jan 28 2025, 07:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
இரவில் தலை வாரினால் செல்வம் சேராதா? சாஸ்திரம் சொல்ற உண்மை என்ன?

இரவில் தலை வாரினால் செல்வம் சேராதா? சாஸ்திரம் சொல்ற உண்மை என்ன?

இந்துமத சாஸ்திரங்களில் பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை நிச்சயம் நிஜ வாழ்க்கையுடன் சில தொடர்புகளையும் கொண்டுள்ளது. அதாவது இரவு நேரத்தில் நகம் வெட்டக்கூடாது, குளிக்க கூடாது, வீடு பெருக்கக் கூடாது, தானம் செய்யக்கூடாது முடி வெட்டக்கூடாது இது போன்ற பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூட இந்த விஷயங்களை செய்யக்கூடாது என்று அடிக்கடி சொல்லுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனெனில் இவை வீட்டிற்கு சுபமல்ல.

27
பெண்கள் இரவில் ஏன் தலைமுடியை சீவக்கூடாது?

பெண்கள் இரவில் ஏன் தலைமுடியை சீவக்கூடாது?

இதுபோன்ற பல விஷயங்களை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள் மற்றும் அதற்கான உண்மையான காரணங்கள் தெரியாமல் பின்பற்றுகிறோம். ஏனெனில் அவை அனைத்தும் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் இரவில் பெண்கள் தலை முடியை வாரக்கூடாது என்று வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லும் மற்றொரு விஷயமாகும். உண்மையில், இது குறித்து சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. எனவே அவற்றை பின்பற்றி வந்தால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. இப்போது சாஸ்திரங்கள் படி பெண்கள் இரவு நேரத்தில் தலைமுடியை ஏன் சீவுவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

37
பெண்கள் இரவு நேரத்தில் தலை முடியை ஏன் வாரக்கூடாது?

பெண்கள் இரவு நேரத்தில் தலை முடியை ஏன் வாரக்கூடாது?

ஜோதிட சாஸ்திரங்கள் படி, இரவு நேரத்தில் எதிர்மறை சக்திகள் உலாவும். இந்த நேரத்தில் பெண்கள் தலைமுடியை சீவினால் எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழைந்து விடும். இதன் காரணமாக தான், சாஸ்திரத்தில் பெண்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தலை முடியை சீவுவது தடை செய்யப்பட்டுள்ளது.

47
லக்ஷ்மி தேவி வரும் நேரம்:

லக்ஷ்மி தேவி வரும் நேரம்:

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டிற்கு லட்சுமி தேவி வருவதற்கான நேரம். எனவே இந்த நேரத்தில் லட்சுமி தேவியை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் பெண்கள் லட்சுமி தேவியை வரவேற்காமல் தலைமுடியை வாரினால் லட்சுமிதேவி உங்கள் மீது கோபப்படுவாள். எனவே இந்த நேரத்தில் லட்சுமி தேவியை வழிபடுங்கள். முக்கியமாக முடியை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரே கட்டிவிடுங்கள்.

57
இந்த நாளிலும் முடியை சீவுவது அசுபம்:

இந்த நாளிலும் முடியை சீவுவது அசுபம்:

சாஸ்திரங்கள் படி பௌர்ணமி நாளில் இரவு நேரத்தில் தலை முடியை மாறினால் அது சந்திரனை அவமதிப்பதற்கு சமம் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், பௌர்ணமி இரவு நேரத்தில் தான் எதிர்மறை சக்திகள் உச்சத்தில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இந்த இரவு பெண்கள் முடியை வாரினால் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையும்.

இதையும் படிங்க:  காரை மறந்தும் 'இந்த' திசையில் நிறுத்தாதீங்க.. மோசமான விளைவுகள்!!

67
தரையில் உதிர்ந்திருக்கும் முடியை என்ன செய்வது?

தரையில் உதிர்ந்திருக்கும் முடியை என்ன செய்வது?

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தலைமுடியை சீவுவது தவிர, வீட்டின் தரையில் இருக்கும் உதிர்ந்த முடியை அகற்றுவது பற்றிய சில நம்பிக்கைகளும் உள்ளன. அதாவது உதிர்ந்த முடியை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வீச வேண்டும் என்பது நம்பிக்கை. வீட்டில் உதிர்ந்த முடி இருந்தால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க:  வீட்டின் வாசலில் 'இந்த' பொருட்களை வைக்காதீங்க.. ஒரு நல்லதும் நடக்காது!

77
இரவில் தலைமுடியை வாரக்கூடாது என்பதற்கான அறிவியல் காரணம்:

இரவில் தலைமுடியை வாரக்கூடாது என்பதற்கான அறிவியல் காரணம்:

பண்டைய காலத்தில் இருந்தே இரவு நேரத்தில் தலை முடி வாரக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்தக் காலத்தில் வீடுகளில் மின்சாரம் வசதி இல்லை என்றும் பெண்கள் இரவில் கூடிய சீவினால் முடி உதிர்ந்து அது உணவு விழுந்து விடும். இதன் காரணமாக தான் பெண்கள் இரவு நேரத்தில் முடியை சீவக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved