MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • புரட்டாசி 3வது சனிக்கிழமை வழிபாடு! கடன் தீர்க்கும் தெய்வீக ரகசியம் இதுதான்!

புரட்டாசி 3வது சனிக்கிழமை வழிபாடு! கடன் தீர்க்கும் தெய்வீக ரகசியம் இதுதான்!

புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. இந்த நாளில் செய்யப்படும் சிறப்பு வழிபாடுகள், வெல்லம் பரிகாரம் போன்றவை கடன் சுமையைக் குறைத்து, மன அமைதியைத் தரும். குலதெய்வத்தின் அருளைப் பெறவும் இந்த வழிபாடு உதவும்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Oct 03 2025, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கடன் சுமையை குறைக்கும் மன அமைதி கிடைக்கும்.!
Image Credit : Twitter

கடன் சுமையை குறைக்கும் மன அமைதி கிடைக்கும்.!

புரட்டாசி மாதம் தொடங்கினாலே பெருமாள் அருள் உலகம் முழுவதும் நிரம்பி வழியும். கோவிந்தா முழக்கம் உலகத்தையே சுபிக்ஷம் ஆக்கும். புரட்டாசி மாதம் தமிழர் வாழ்க்கையில் ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் மூன்றாவது சனிக்கிழமை பெருமாள் வழிபாடு சிறப்பான பலன்களை தரும் நாளாகும். குறிப்பாக நவராத்திரி காலத்துடன் சேர்ந்து வரும் இந்த நாள், குடும்பத்தில் ஆன்மீக உற்சாகத்தை எழுப்பும் நேரமாகும். நம்பிக்கையுடன் செய்யப்படும் வழிபாடு, கடன் சுமையை குறைக்கவும், மன அமைதியை பராமரிக்கவும் உதவுகிறது.

27
அத்தனையும் அள்ளித்தரும் பெருமாள் வழிபாடு.!
Image Credit : our own

அத்தனையும் அள்ளித்தரும் பெருமாள் வழிபாடு.!

வீட்டில் பெருமாளை வழிபட விரும்புவோர்  முதலில் மாவிளக்கு அல்லது தளிகை வைத்து வழிபாடு செய்யலாம். இதை செய்யும்போது, வீட்டில் நவராத்திரி கொலு அல்லது கலசம் இருந்தாலும் பெருமாளுக்கு தளிகை போடுவதற்கு தடையில்லை. வழிபாட்டிற்கு தேவையான பொருட்கள் – துளசி மலர், தீம், பூஜை பொதி, எண்ணெய் விளக்கு – அனைத்தும் பயன்படுத்தி, மனதை சுத்தமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பெருமாள் வழிபாடு செய்யும் போது மனதில் நம்பிக்கையுடன், கடன் சுமை குறையட்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

Related Articles

Related image1
Purattasi: புரட்டாசியில் அருளை அள்ளிக்கொடுக்கும் பெருமாள்.! புரட்டாசி விரதம் எப்படி இருக்க வேண்டும்.?! முழு விவரம் இதோ.!
Related image2
Astrology: புரட்டாசி மாத ராசிபலன்.! இனி எல்லோருக்கும் பொற்காலம்தான்.! பெருமாள் அருளால் பணவரவு கட்டாயம்.!
37
ஆலயம் செல்வது சாலமும் நன்று.!
Image Credit : Instagram

ஆலயம் செல்வது சாலமும் நன்று.!

வீட்டில் வழிபாடு செய்ய முடியாவிட்டால், அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறந்தது. கோவிலில் சென்று துளசி மாலை அணிந்து, தீர்த்தம் குடித்து, சடாரியை தலையில் வைத்து வழிபாடு நிறைவு செய்யலாம். இதனால் ஆன்மீக சக்தி அதிகரித்து, கடன் பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்பது நம்பிக்கை. கோவிலில் வழிபாடு செய்யும்போது மனதை முழுமையாக அமைதியாக வைத்துக் கொள்வது அவசியம்.

47
கடன் சுமையை குறைப்பதற்கான வெல்லம் பரிகாரம்.!
Image Credit : our own

கடன் சுமையை குறைப்பதற்கான வெல்லம் பரிகாரம்.!

கடன் சுமையை குறைப்பதற்கான வெல்லம் பரிகாரம் மிகவும் பிரபலமானது. முதலில் 1 கிலோ வெல்லம் வாங்கி, அதை தானமாக கோவிலில் அர்ச்சகருக்கு அல்லது பிராமணருக்கு கொடுக்க வேண்டும். இதை செய்தால் கடன் சுமை குறையும் என்று நம்பப்படுகிறது. வீட்டிற்கு அருகிலுள்ள கோவிலில் குளம் இருந்தால், 1/2 கிலோ வெல்லத்தை கையால் கரைத்து விடுவது சிறந்தது. வெல்லத்தை  கரைக்கும் போது எனது கடன் சுமையும் இதுபோல் கரைந்து போகட்டும் என மனதில் சொல்ல வேண்டும். இதனால் கடன் பிரச்சனைகள் மறைந்து போகும் என்று நம்பிக்கை ஏற்படும். குளங்கள் இல்லாவிட்டால், ஏறி ஆத்தங்கரையில் அல்லது நீர்ப்பரப்பில் இதே பரிகாரம் செய்யலாம்.

57
குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம்.!
Image Credit : our own

குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம்.!

புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நாம் பெருமாளின் அருளோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம். இதனால் வீட்டில் உள்ள அனைத்து பொருளாதார பிரச்சனைகளும் தீரும். செல்வம் செழிக்கும். அதோடு வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.

67
சனி தோஷம் காணாமல் போகும்.!
Image Credit : our own

சனி தோஷம் காணாமல் போகும்.!

சனி தோஷம் இருப்பவர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோவிலிற்கு சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதன் மூலம் சனி தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவர். அதோடு அஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி போன்ற சனியின் பிடியில் இருப்பவர்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிரார்த்திப்பதன் மூலம் சனியின் உக்கிரம் குறைந்து சனியால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் ஏற்றம் பெறுவர்.

77
துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும்.!
Image Credit : our own

துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும்.!

புரட்டாசியில் விரதம் இருப்பதோடு, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அளிப்பதன் மூலம் ஏழைகளின் பசி பறந்தோடுவது போல் நம் துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும். மொத்தத்தில் புரட்டாசி 3வது சனிக்கிழமை பெருமாள் வழிபாடு மற்றும் வெல்லம் பரிகாரம் உங்கள் கடன் சுமையை குறைக்க, மன அமைதியை நிலைநாட்ட மற்றும் ஆன்மீக சக்தியை அதிகரிக்க உதவும். நம்பிக்கையுடன், மனதை சுத்தமாக வைத்துக் கொண்டு செய்யப்படும் வழிபாடு நல்ல விளைவுகளை தரும். எனவே, நாளைய தினம் இந்த பரிகாரங்களை செய்ய தவறாமல் பின்பற்றுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில் நிகழ்வுகள்
திருமலை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved