MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • பிள்ளையாரின் 6 படை வீடுகள்: முருகனைப் போலவே விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உண்டா? Part 2

பிள்ளையாரின் 6 படை வீடுகள்: முருகனைப் போலவே விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உண்டா? Part 2

Pillayar Arupadai Veedu List in Tamil : முருகப் பெருமானுக்கு இருப்பது போலவே விநாயகப் பெருமானுக்கும் 6 படை வீடுகள் உள்ளன. அந்த ஆறு புனிதத் தலங்கள் எவை, சிறப்புகள் மற்றும் வரலாறு குறித்து இங்கே காணலாம். முதல் பகுதியில் 2 கோயில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 09 2026, 09:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிள்ளையார்பட்டி விநாயகர்
Image Credit : our own

பிள்ளையார்பட்டி விநாயகர்

விநாயகர் என்றால் மதுரையில் உள்ள பிள்ளையார்பட்டி விநாயகரை முதலில் ஞாபகம் வருவார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் மிக சிறப்பாக இருக்கும் தமிழ் வருட பிறப்பிற்கும் மிகச் சிறப்பாக இருக்கும் பிள்ளையார்பட்டி விநாயகர் பெருமான். இந்த தொகுப்பில் விநாயகப் பெருமானின் 6 படை வீடுகள் பற்றி பார்க்கலாம். ஏற்கனவே முதல் பகுதியில் முதல் 2 படை வீடுகள் பற்றி பார்த்த நிலையில் இந்த தொகுப்பில் மற்ற 4 படை வீடுகள் பற்றி பார்க்கலாம்.

முதல் பகுதிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகள்: உங்களுக்குத் தெரியாத அந்த 6 புனிதத் தலங்களின் முழுப் பட்டியல்- பகுதி 1

25
3.மூன்றாவது படைவீடு: திருக்கடவூர்
Image Credit : our own

3.மூன்றாவது படைவீடு: திருக்கடவூர்

மூன்றாம் படை வீடின் விநாயகர் பெயர் கள்ள வாரணப் பிள்ளையார். திருக்கடவூர் என்னும் ஊரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிவன் சந்நிதிக்கு வலதுபுறத்தில் நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிரகாரத்தில் உள்ளார்.இவர் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி கள்ள வாரணப் பிள்ளையார் அருள்புரிறார். இவரை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கி, சுக வாழ்வினை அளிக்கவல்லவர். 

35
4. நான்காம் படை வீடு: மதுரை:
Image Credit : our own

4. நான்காம் படை வீடு: மதுரை:

நான்காம் படை வீட்டில் விநாயகர் பெயர் சித்தி விநாயகர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் சந்நிதியின் நுழைவு வாயிலின் இடது புறமாக சித்தி விநாயகர் தரிசனத்தைப் பெறலாம். உருவில் சிறியவராக இருந்தாலும், அருள் தருபவரில் சக்தி வாய்ந்தவர். கடுகு சிறுதாலும் காரம் குறையாது என்பதை போல் சிறியவராக இருந்தாலும் சக்தி மிக்கவர். இவரை வழிபட்டு அவர்களுக்கு அறிவும் செல்வமும் பொங்கி வலியும் என்று கூறப்படுகிறது.

45
5. ஐந்தாம் படை வீடு: பிள்ளையார்பட்டி
Image Credit : our own

5. ஐந்தாம் படை வீடு: பிள்ளையார்பட்டி

ஐந்தாம் படை வீடு விநாயகர் பெயர் கற்பக விநாயகர் இவர் பிள்ளையார்பட்டியில் அருள்பாளிக்கிறார். மிகப்பெரிய அடி உயரம் கொண்ட விநாயகர் இவர் ஒருவரே என்று கூறப்படுகிறது.இவர் கையில் இருக்கும் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பாகும். சிவலிங்கத்தை கையில் ஏந்தி, சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால், தீட்சையும் ஞானமும் கிடைக்கும். மற்ற ஐந்து படை விநாயகரிடம் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த ஐந்தாம் படை விநாயகரிடம் உள்ளது. 

என்னவென்றால் கற்பக விநாயகரிடம் தும்பிக்கை வலது புறமாக இருக்கும் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. நம் பிள்ளையார் சதுர்த்தி என்று பிள்ளையார் வாங்கும் பொழுது கூட வலது புறமாக உள்ள தும்பிக்கையை வைத்த பிள்ளையாரையை சிலர் ஆர்வம் காட்டி வாங்கி செல்வார்கள் ஏனென்றால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. விநாயகரை தர்சித்தால் புனிதத்தலமாக விளங்கும் காசியில் உள்ள தீட்சா கணபதியை சென்று வணங்கிய பலன் கிடைக்கும். நாயகரே தரிசித்து வந்தால் வீட்டில் செல்வமும் ஞானமும் பெற்று விளங்குவோம் என்று கூறப்படுகிறது.

55
6.ஆறாம் படை வீடு: திருநாரையூர் :
Image Credit : our own

6.ஆறாம் படை வீடு: திருநாரையூர் :

ஆறாம் படை வீட்டின் விநாயகர் பெயர் பொள்ளாப் பிள்ளையார். பொள்ளாப் பிள்ளையார் சிதம்பரத்தில் உள்ள திருநறையூரில் உள்ளார் இவர் சுயமாக தோன்றியதால் இவருக்கு கொள்ளப் பிள்ளையார் என்று கூறப்படுகிறது பொள்ளாப் என்றால் செதுக்கப்படாமல் தானாகவே உருவான என்று பொருள்படும். சுயமாக தோன்றி இந்த பிள்ளையார் மிகுந்த சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது இவரிடம் என்ன வேண்டினாலும் பலன் கிடைக்கும் . செல்வமும் கல்வியும் ஞானமும் பெற்று சிறந்த மனிதனாக உயர முடியும் என்றும் கூறப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
ஆன்மீகம்
கோவில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகள்: உங்களுக்குத் தெரியாத அந்த 6 புனிதத் தலங்களின் முழுப் பட்டியல்- பகுதி 1
Recommended image2
தலையெழுத்தையே மாற்றும் ஒரு நாள் வழிபாடு; வற்றாத செல்வமும், மன அமைதியும் தரும் பௌர்ணமி விரதம்!
Recommended image3
365 நாட்களும் தண்ணீருக்குள் இருக்கும் அதிசயம்! கேரளா புத்தூர் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் ரகசியங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved