MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: வீட்டில் உள்ள எல்லா வாஸ்து பிரச்சினைகளையும் விரட்டும் "பஞ்ச சிர ஸ்தாபனம்"! எங்கு, எப்படி பதிக்க வேண்டும் தெரியுமா?

Spiritual: வீட்டில் உள்ள எல்லா வாஸ்து பிரச்சினைகளையும் விரட்டும் "பஞ்ச சிர ஸ்தாபனம்"! எங்கு, எப்படி பதிக்க வேண்டும் தெரியுமா?

பஞ்ச சிர ஸ்தாபனம் என்பது ஐந்து விலங்குகளின் தலைகள் கொண்ட சக்திவாய்ந்த வாஸ்து பரிகார யந்திரம் ஆகும். வீட்டின் தலைவாயிலில் இதை முறையாக ஸ்தாபிப்பதன் மூலம் வீட்டில் அமைதியையும் செழிப்பையும் நிலைநாட்ட முடியும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Dec 01 2025, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
சக்தி மிகுந்த யந்திரம் ‘பஞ்ச சிர ஸ்தாபனம்’
Image Credit : Asianet News

சக்தி மிகுந்த யந்திரம் ‘பஞ்ச சிர ஸ்தாபனம்’

வீட்டில் அமைதி இல்லாமல் போவதும், பணம் தங்காமல் போவதும், அடிக்கடி சண்டைகள், உடல்நலக் குறைவு, தொழிலில் பின்னடைவு போன்றவை பலருக்கும் மனஅழுத்தம் தரும் பிரச்சினைகள். இவை அனைத்திற்கும் காரணமாக இருக்கும் ஒரு பெரிய சக்தி வாஸ்து தோஷம் என்று பல காலமாக நம்பப்பட்டு வருகிறது. இத்தகைய நெருக்கடிகளை சரி செய்வதற்காக தொன்ம காலத்தில் பல யந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமானதும், மிக வலிமையான சக்தி கொண்ட யந்திரம் தான் ‘பஞ்ச சிர ஸ்தாபனம்’ எனப்படும் வாஸ்து பரிகார யந்திரம்.

28
பஞ்ச சிர ஸ்தாபனம் என்றால் என்ன?
Image Credit : Asianet News

பஞ்ச சிர ஸ்தாபனம் என்றால் என்ன?

இந்த யந்திரத்தில் ஐந்து திசைகளுக்குப் பொறுப்பான ஐந்து விலங்குகளின் தலைகள் பொறிக்கப்பட்டிருக்கும். அவை:

  • சிங்கம்
  • ஆமை
  • பன்றி
  • யானை
  • ஆண் எருது

இந்த ஐந்து விலங்குகளும் ஐந்து திசை சக்திகளையும் பிரதிபலிக்கின்றன. இவை வீட்டை காக்கும் காவல் தெய்வங்களைப் போல செயல்படுவதாக பழமையான வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

Related Articles

Related image1
Spiritual: திருக்கார்த்திகையில் ஏன் அகல்விளக்கு ஏற்ற வேண்டும்?! வரலாறுடன் கூடிய ஆன்மிக விளக்கம் இதுதான்.!
Related image2
Spiritual: இதை மட்டும் செஞ்சா போதும், இனி வீட்டுல சண்டையே வராது?! எதிர் மறை சக்திகளும் விலகி ஓடும்.!
38
இது எப்படி செய்யப்படுகிறது?
Image Credit : Asianet News

இது எப்படி செய்யப்படுகிறது?

இந்த யந்திரத்தை பொதுவாக:

  1. வெள்ளி தகடு
  2. தங்கத் தகடு
  3. தாமிரத் தகடு

இவைகளில் ஒன்றில் பொறித்துச் செய்வார்கள். சிலர் பூஜை கடைகளில் வாங்கினாலும், மிகவும் சிறப்பாக தயார் செய்ய விரும்புவோர் தாமாகவே ஆர்டர் செய்து செய்யவைக்கலாம்.

48
எங்கு பதிக்க வேண்டும்?
Image Credit : Asianet News

எங்கு பதிக்க வேண்டும்?

தவறான இடத்தில் வைத்தால் பயன் இல்லாமல் போகும்.

  • வீட்டின் முக்கிய தலைவாயில் (Main Entrance) மேல்பகுதியில் 
  • வாயில் உள்புறத்தில் ஸ்தாபிக்க வேண்டும்
  • திசையைப் பொறுத்து வாஸ்து நிபுணர் ஆலோசனை பெற்று இடம் பொருந்த வைத்தால் மிகச் சிறப்பு
58
எப்படிப் பதிக்க வேண்டும்?
Image Credit : Asianet News

எப்படிப் பதிக்க வேண்டும்?

  • முதலில் பஞ்ச சிர யந்திரத்துக்கு ஸ்தாபன பூஜை, வாஸ்து பூஜை செய்வது வழக்கம்.
  • கூர்ந்து பார்க்க வேண்டியது – யந்திரம் நேராகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
  • வீட்டில் பதித்த வுடன் ஒரு நன்னாள் தேர்வு செய்து வைப்பது மிக நன்மை தருகின்றது.
68
இதன் பலன்கள் என்ன?
Image Credit : Asianet News

இதன் பலன்கள் என்ன?

பண்டைய வாஸ்து நூல்களில் இந்த யந்திரம் குறித்து பல நன்மைகள் குறிப்பிடப்பட்டுள்ளன:

  • வீட்டை கெடுக்கும் சக்திகள் நீங்கும்
  • பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்
  • தொழிலில் வளர்ச்சி
  • வீட்டில் சாந்தி அமைதி நிலை பெறும்
  • தீய ஆற்றல்கள் அருகில் வராது
  • பணநஷ்டம் குறையும்
  • எதிர்மறை சக்திகள் தடுக்கப்படும்
78
இனி வாஸ்து பிரச்சினை இருக்காது
Image Credit : Asianet News

இனி வாஸ்து பிரச்சினை இருக்காது

பலரும் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷத்தை சரிசெய்ய, சிங்க மூக்குப் பீரங்கி, பீரமிட், துர்கை யந்திரம் போன்றவற்றை வைக்கிறார்கள். ஆனால் பஞ்ச சிர ஸ்தாபனம் எல்லா சக்திகளையும் ஒரே சேர கட்டுப்படுத்தும் சக்தி கொண்டதாக கருதப்படுகிறது.

88
யார் யார் வைக்கலாம்?
Image Credit : Asianet News

யார் யார் வைக்கலாம்?

  • புதிய வீடு கட்டுபவர்கள்
  • பழைய வீட்டில் பிரச்சினைகள் தொடர்ந்து வருபவர்கள்
  • வாடகை வீட்டில் கூட பதிக்கலாம்
  • கடை, அலுவலகம் போன்ற வியாபார இடங்களிலும் வைக்கலாம்

பஞ்ச சிர ஸ்தாபனம் என்பது ஒரு சாதாரண அலங்கார பொருள் அல்ல. வாஸ்து சாஸ்திரத்தில் மிகப் பலம் வாய்ந்த பரிகாரம். வீட்டில் அமைதி, முன்னேற்றம், செழிப்பு வர வேண்டும் என்றால் இந்த யந்திரத்தை சரியான முறையில் ஸ்தாபிப்பது மிகவும் நன்மை தரும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: திருக்கார்த்திகையில் ஏன் அகல்விளக்கு ஏற்ற வேண்டும்?! வரலாறுடன் கூடிய ஆன்மிக விளக்கம் இதுதான்.!
Recommended image2
Spiritual: இதை மட்டும் செஞ்சா போதும், இனி வீட்டுல சண்டையே வராது?! எதிர் மறை சக்திகளும் விலகி ஓடும்.!
Recommended image3
Spiritual: வெள்ளிக்கிழமை வீட்டில் கண்ணாடி உடைந்தால் அபசகுனமா?! நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன தெரியுமா?
Related Stories
Recommended image1
Spiritual: திருக்கார்த்திகையில் ஏன் அகல்விளக்கு ஏற்ற வேண்டும்?! வரலாறுடன் கூடிய ஆன்மிக விளக்கம் இதுதான்.!
Recommended image2
Spiritual: இதை மட்டும் செஞ்சா போதும், இனி வீட்டுல சண்டையே வராது?! எதிர் மறை சக்திகளும் விலகி ஓடும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved