MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: இதை மட்டும் செஞ்சா போதும், இனி வீட்டுல சண்டையே வராது?! எதிர் மறை சக்திகளும் விலகி ஓடும்.!

Spiritual: இதை மட்டும் செஞ்சா போதும், இனி வீட்டுல சண்டையே வராது?! எதிர் மறை சக்திகளும் விலகி ஓடும்.!

நம் முன்னோர்கள் பின்பற்றிய தூப வழிபாடு, வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை அகற்றி, நேர்மறை ஆற்றலை நிரப்புகிறது. தினமும் சாம்பிராணி அல்லது குங்கிலியம் தூபம் இடுவதால் குடும்ப சண்டைகள், மனஅழுத்தம் குறைந்து, வீட்டில் அமைதியும் வளமும் நிலைக்கும்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 29 2025, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
வீட்டில் அமைதி நிலைக்க வேண்டுமா?
Image Credit : Asianet News

வீட்டில் அமைதி நிலைக்க வேண்டுமா?

வீட்டில் அமைதி நிலைக்க வேண்டுமா? குடும்பத்தில் தேவையில்லாத சண்டை, மனஅழுத்தம், குழப்பம், தொடர்ந்து வரும் நோய் போன்றன விலக வேண்டுமா? அப்படியெனில், நம் முன்னோர்கள் தலைமுறைதோறும் செய்து வந்த ஒரு எளிய ஆன்மீக வழிப்பாட்டை பின்பற்றினாலே போதும் — அதுதான் தூப வழிபாடு.

28
வீட்டைச் சுத்தப்படுத்தும் சக்தி கொண்டவை
Image Credit : Asianet News

வீட்டைச் சுத்தப்படுத்தும் சக்தி கொண்டவை

தூபத்தின் வாசனையும் புகையும் வீட்டைச் சுத்தப்படுத்தும் சக்தி கொண்டவை என்று சாஸ்திரங்களும் ஆகமங்களும் கூறுகின்றன. அது சூழலை புத்துணர்ச்சியுடன் மாற்றி, மனதில் நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். எதிர்மறை அலைகள் கூட அருகில் வராமல் தடுக்க, வீட்டில் தினமும் தூபம் இடுவது மிக முக்கியம் என பெரியோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Related image1
Spiritual: வெள்ளிக்கிழமை வீட்டில் கண்ணாடி உடைந்தால் அபசகுனமா?! நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன தெரியுமா?
Related image2
Spiritual: சந்திராஷ்டமம் தினத்தில் இதையெல்லாம் செய்யலாம் தெரியுமா? அத்தனையும் சக்சஸ்தான்.!
38
தூபம் யமபயம் போக்கும்
Image Credit : Asianet News

தூபம் யமபயம் போக்கும்

புராணங்களில், ‘தூபம் யமபயம் போக்கும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து வீட்டில் சண்டை, சச்சரவு நிலவி வந்தாலோ, யாருக்கோ ஒரு உடல்நிலை சரியாகாமல் இருந்தாலோ, தூபம் அவற்றை தணிக்க வல்லது. காரணம்—அதன் வாசனை மனதை அமைதிப்படுத்துகின்றது; புகை சூழலை நேர்மறை ஆற்றலால் நிரப்புகின்றது.

48
நேர்மறை அலைகள் உருவாகும்
Image Credit : Asianet News

நேர்மறை அலைகள் உருவாகும்

சிவாலயங்களில் கூட தீபாராதனைக்கு முன் தூபம் இடுவது சக்தி வாய்ந்த சடங்காக கருதப்படுகிறது. “ஓம் ஹாம் சங்கராய நம:” என்ற மந்திரத்துடன் தூபம் இடும்போது, அந்த இடத்தில் அகம்-புறம் இரண்டிலும் நேர்மறை அலைகள் உருவாகும். 

58
தூப வழிபாடு மன நெருக்கடியை அகற்றும்
Image Credit : Asianet News

தூப வழிபாடு மன நெருக்கடியை அகற்றும்

பெரியபுராணத்தில் வரும் குங்கிலியக் கலய நாயனார் கதையே இதற்குச் சாட்சி. வறுமையிலும் தளராமல் தூபத்தோடு சேவை செய்த அவரை இறைவன் செல்வநிறைவுடன் வாழச் செய்தான். இதனால், தூப வழிபாடு மன நெருக்கடியையும், பாவபரப்பையும் அகற்றும் என்று புரிதல் நிலைத்தது.

68
தூய்மையும் அமைதியும் தரும்
Image Credit : Asianet News

தூய்மையும் அமைதியும் தரும்

தூபத்தில் பயன்படுத்தப்படும் அகில், குங்கிலியம், சாம்பிராணி போன்றவை இயற்கை மருத்துவ ரீதியிலும் பயனுள்ளதாகவே கருதப்படுகின்றன. வீட்டில் வரும் கிருமிகளை தடுத்து சூழலுக்கு தூய்மையும் அமைதியும் தருவது அவைகளின் தன்மை.

78
மனமும் உடலும் அமைதி அடையும்
Image Credit : Asianet News

மனமும் உடலும் அமைதி அடையும்

முன்பு பெண்கள் தலைக்குக் குளித்த பின் தூபமாட்டுவது ஒரு இயல்பு வழக்கம். இந்த எளிய செயலால் மனமும் உடலும் சாந்தமடைந்து, எதிர்மறை சக்திகள் மனத்தளர்ச்சி ஏற்படுத்தாமல் பாதுகாக்கப்படும். 

88
 எதிர்மறை சக்திகள் எரிந்து ஒழியும்
Image Credit : Asianet News

எதிர்மறை சக்திகள் எரிந்து ஒழியும்

தினமும் வீட்டில் ஒரு முறை குங்கிலியம் அல்லது சாம்பிராணி தூபம் இடுங்கள். சண்டை, மனஅழுத்தம், குழப்பம் தானாகவே குறையும்.  வீட்டில் அமைதி, நேர்மறை, வளம், நிம்மதி நிலைக்கத் துவங்கும். நினைவில் வையுங்கள்— “தூபம் எரியும் இடத்தில், எதிர்மறை சக்திகள் எரிந்து ஒழியும்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: வெள்ளிக்கிழமை வீட்டில் கண்ணாடி உடைந்தால் அபசகுனமா?! நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன தெரியுமா?
Recommended image2
Spiritual: சந்திராஷ்டமம் தினத்தில் இதையெல்லாம் செய்யலாம் தெரியுமா? அத்தனையும் சக்சஸ்தான்.!
Recommended image3
மத்திய அரசு திட்டங்களுக்கு பகவத் கீதை தான் ஆதாரம்! பிரதமர் மோடி பெருமிதம்!
Related Stories
Recommended image1
Spiritual: வெள்ளிக்கிழமை வீட்டில் கண்ணாடி உடைந்தால் அபசகுனமா?! நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன தெரியுமா?
Recommended image2
Spiritual: சந்திராஷ்டமம் தினத்தில் இதையெல்லாம் செய்யலாம் தெரியுமா? அத்தனையும் சக்சஸ்தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved