MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Sabarimala: சபரிமலையில் பக்தர்களுக்கு முன்பதிவு கட்டாயம்: தேவசம் போர்டு அதிரடி உத்தரவு

Sabarimala: சபரிமலையில் பக்தர்களுக்கு முன்பதிவு கட்டாயம்: தேவசம் போர்டு அதிரடி உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், பக்தர்களுக்கு முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Oct 08 2024, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சபரிமலை கோவில்

சபரிமலை கோவில்

தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றாக சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து கோவிலுக்கு வருவது வழக்கம். கொரோனாவுக்கு பின்பு கோவிலில் பக்தர்கள் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். மேலும் முன்பதிவு செய்யாத பக்தர்கள் கடந்த ஆண்டு உடனடி முன்பதிவு முறையில் அனுமதிக்கப்பட்டனர்.

24
Sabarimala

Sabarimala

இதனால் பக்தர்களை சமாளிக்க முடியாமல் மாநில காவல் துறையினரும், மாநில அரசு திணறியது. இந்நிலையில் இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை வருகின்ற நவம்பர் 16ம் தேதி நடைபெறுகின்றன. இதற்காக கோவில் நடை நவம்பர் 15ம் தேதி மாலை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களை வழிநடத்துவது, அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

34
sabarimala

sabarimala

கூட்டத்தின் போது, முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். முன்பதிவு செய்யும் போதே பக்தர்கள் தங்களுக்கான பாதையை தேர்வு செய்து கொள்ளும் வகையில் வசதி செய்து கொடுக்கப்படும். இதனால் அதிகப்படியான கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். மேலும் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

44

இதனிடையே பக்தர்களின் வசதிக்காக சாலையை சீரமைப்பது, பக்தர்களுக்கு தேவையான இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்து கொடுப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சபரிமலை
தமிழ் செய்திகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved