MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • சித்ரா பௌர்ணமி 2024 : திருவண்ணாமலையில் கிரிவலம் எப்போது சொல்லலாம்..? உகந்த நேரம் என்ன..?

சித்ரா பௌர்ணமி 2024 : திருவண்ணாமலையில் கிரிவலம் எப்போது சொல்லலாம்..? உகந்த நேரம் என்ன..?

நாளை சித்ரா பௌர்ணமி. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாக தெரிவித்துள்ளது.. 

1 Min read
Kalai Selvi
Published : Apr 22 2024, 11:41 AM IST| Updated : Apr 22 2024, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கிரிவலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தான். இது உலகில் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும். குறிப்பாக, பஞ்சபூத ஸ்தலங்களில் இது அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

26

இங்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். 

36

திருவண்ணாமலை கோவிலில் பல சிறப்புகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும், இந்த மலையை மக்கள் சிவனாக வழிபடுவது தான் 
மற்றொரு சிறப்பு அம்சமாகும். காரணம், லிங்கமே மலையாக இருப்பதால் தான்.

46

அதுமட்டுமின்றி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று நம் முன்னோர்கள்  சொல்லி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த திருவண்ணாமலை கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே, இப்படி பல சிறப்பு அம்சங்கள் இந்த கோவிலில் இருப்பதால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதையும் படிங்க: Chitra Pournami 2024: சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் போறீங்களா? குட்நியூஸ் சொன்ன அரசு போக்குவரத்து கழகம்!

56

இந்நிலையில், இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்னவென்றால், ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, அதாவது நாளை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஏப்ரல் 24ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

66

எனவே, நாளை  சித்ரா பவுர்ணமி என்பதால் அந்நாள் முழுவதும் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
திருவண்ணாமலை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved