MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • பங்குனி உத்திரத்தன்று இந்த 1 பொருளை வீட்டில் வைத்து வழிபட்டால் வாழ்வில் அடுத்தடுத்து வெற்றிகள் குவியும்!

பங்குனி உத்திரத்தன்று இந்த 1 பொருளை வீட்டில் வைத்து வழிபட்டால் வாழ்வில் அடுத்தடுத்து வெற்றிகள் குவியும்!

சித்திரவதையான வாழ்க்கையை சிறப்பான வாழ்க்கையாக மாற்ற நாளை பங்குனி உத்திரத்தன்று இந்த ஒரு பொருள் வைத்து முருகனை வழிபட, நல்ல நேரம் துவங்கி விடும். அதனை என்ன வழிபாடு ?எப்படி வழிபட வேண்டும் போன்ற தகவலை இந்த பதிவில் காணலாம்

2 Min read
Dinesh TG
Published : Apr 04 2023, 08:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

நாளை புதன் கிழமை 5.4.23 அன்று பங்குனி உத்திரம் ஆகும். சிலரது வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றியை பார்த்து இருக்க மாட்டார்கள். எந்த ஒரு முயற்சியிலும் தடை மற்றும் தோல்வியே சந்தித்து வருவார்கள். இப்படியானவர்கள் வாழ்க்கையை வெறுப்போடு தான் வாழ்ந்து வருவார்கள். கஷ்டமே வாழ்க்கையாக இருக்கும் போது வெறுப்போடும், வருத்தத்துடன் தான் வாழ்க்கையை வாழும் சூழல் இருக்கும்.

அப்படியான இந்த வாழ்க்கையை சிறப்பாக மாற்ற மிக எளிய பரிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சித்திரவதையான வாழ்க்கையை சிறப்பான வாழ்க்கையாக மாற்ற நாளை பங்குனி உத்திரத்தன்று இந்த ஒரு பொருள் வைத்து முருகனை வழிபட, நல்ல நேரம் துவங்கி விடும். அதனை என்ன வழிபாடு ?எப்படி வழிபட வேண்டும் போன்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்த வழிபாட்டை நாளைய தினம் செய்வதால் செய்யும் செயலில் வெற்றி கிட்டும், மகிழ்ச்சி பொங்கும், நல்லது நடக்கும் . வெற்றியின் கடவுள் முருகன், வாழ்வில் தோல்வியை சந்திப்பவர்கள் முருகன் வழிபாட்டை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வந்தால் நல்லதொரு மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.

23

வழிபாடு:

அலங்காரத்துடன் அழகுடன் இருக்கும் வேல் படத்தை பூஜை அறையில் வைத்து தினமும் அதற்கு மஞ்சள்,குங்குமம் வைத்து நன்றாக அதனை தரிசித்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அந்த வேலின் அழகானது வெற்றிக்கான பாதையையும், சிந்தனையையும் தூண்டும். தினமும் காலை எழுந்து குளித்து விட்டு, வேல் வழிபாடு செய்து வர நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். முடிந்தவர்கள் அதிகாலையான பிரம்ம முகூர்த்தத்தில் இந்த வழிபாட்டை செய்தால் மிகச் சிறப்பாகும்.

பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய இயலாதவர்கள் காலை 6 மணிக்கு இந்த வழிபாட்டை செய்யுங்கள்.நாளைய தினமான பங்குனி உத்திரத்தன்று இதனை செய்வது மிக மிக விசேஷமாகும்

33

வழிபடும் முறை:

வேல் படத்தை வைத்து விட்டு, ஒரு சிறிய அகல் விளக்கில் விளக்கேற்றி விட்டு வேல் வழிபாடு செய்து மன நிறைவுடன் பிரார்த்தனை செய்து கொண்டு, இனி வாழ்க்கையில் நான் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற வேலவனான நீயே அருள் புரிய வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக்கொள்ள வேண்டும். ஒரு மனதுடனும் , நம்பிக்கையோடும் உள்ளம் உருகி பிராத்தனை செய்யுங்கள்.


பூஜை அறையில் மட்டுமல்லாமல் வரவேற்கும் அறை அல்லது நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் இந்த வேல் படத்தை வைத்து வழிபாடு செய்து வாருங்கள். உங்களுடைய பைக் கீ செயின் போன்றவற்றிலும் வேல் கீ செயின் வாங்கி உபயோகிக்கலாம். அதே போன்று உங்கள் கைப்பேசியின் முன் திரையில் வேல் படம் வைக்கலாம்.

இப்படி வேல் வைப்பதால் நாம் பார்க்கும் இடங்களில் வேல் தென்படும் போது நமது செயல்களில் வெற்றி பெற தன்னம்பிக்கையும், உத்வேகத்தையும் அதிகரிக்க செய்யும்.

வீட்டில் கஷ்டமே வராமல் இருக்க , காலை எழுந்த பின்பு முதலில் இதை செய்தாலே போதும் ! வாழ்வில் சுபீட்சம் உண்டாகும்

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved