MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • தியாகத் திருநாளான பக்ரீத்தில்.. உண்மையான தியாகம் இருக்கிறதா அல்லது வெறும் பகட்டு செயலா?

தியாகத் திருநாளான பக்ரீத்தில்.. உண்மையான தியாகம் இருக்கிறதா அல்லது வெறும் பகட்டு செயலா?

இஸ்லாமியர்களின் தியாக பண்டிகையான பக்ரீத் தியாக உணர்வை மீண்டும் எழுப்புகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஆன்மாவை தூய்மைப்படுத்தும் செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் அது அப்படி தான் இருக்கிறதா?   

2 Min read
maria pani
Published : Jun 28 2023, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் வழிபாடும் இருக்க வேண்டும். தியாகம் என்பதும் தூய்மையான வழிபாடு. இதை விளம்பரப்படுத்த அவசியமில்லை. ஆனால் சோசியல் மீடியாவின் ஆதிக்கம் தியாகத்தின் மறையுண்மையை மற்றவர்களுடன் வெளிப்படுத்தும் கருவியாக செயல்படுகிறது. 

26

தொழுகை செய்யும் படங்களை யாரும் சமூக ஊடகங்களில் பகிர்வதில்லை. தொழுகையை குறித்து மற்றவர்களிடம் சொல்கிறார்களா? ஹஜ் (புனித பயணம்), தொண்டு செய்யும்போது அதனை பகிரங்கமாக அறிவிக்கிறார்களா? இல்லை என்பது தான் பதில். ஆனால் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு விலங்கின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவது அவசியம் என சிலர் கருதுகிறார்கள். சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காகவே விலங்கை வெவ்வேறு கோணங்களில் படம் எடுத்தும் வருகின்றனர். சிலர் அந்த விலங்கை பலியிடுவதைப் புகைப்படம் கூட எடுக்கிறார்கள். பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் மூலம் நண்பர்களுக்கு இது பகிரப்படுகிறது. 

 

36

இஸ்லாமில் பலியின் விதிகள்: 

விலங்குகளை பலியிட அனுமதிக்கப்பட்டாலும் இதற்கென சில விதிகள் இஸ்லாத்தில் கடைபிடிக்கப்படுகிறது. உதாரணமாக, பக்ரீத் பண்டிகையில் பலியிடும் விலங்கு வலியை உணரும் விதத்தில் இழுக்கப்படக்கூடாது. விலங்குகளை அதன் காதுகளால் இழுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பலியிடுவதற்கு முன் கத்தியை நன்கு கூர்மைப்படுத்த வேண்டும், இதனால் விலங்கு வெட்டப்படும்போது வலியை உணராமல் உடனடியாக முடிந்துவிடும். விலங்கின் முன் கத்தியை கூர்மையாக்கக்கூடாது. ஒரு பிராணியை மற்றொரு பிராணியின் முன் வைத்து படுகொலை செய்யக்கூடாது. 

46

விலங்கின் உடல் குளிர்ச்சியடைவதற்கு முன் அதன் தோலை உரிக்கத் தொடங்கக் கூடாது. பொதுவாக, இந்த நாட்களில், அதிகளவில் விலங்குகள் பலி கொடுக்கப்படுகின்றன. இந்த நெறிமுறைகள் பின்பற்றப்படாத வளாகத்தில் விலங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக கொல்லப்படுகின்றன. விலங்குகளை அறுத்தவுடன், நேரமின்மை காரணமாக அதன் தோல் உடனடியாக அகற்றப்படுகிறது. இப்படி அறுக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை உண்பதும் அனுமதிக்கப்படுகிறது; சில இறைச்சியை விநியோகிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறது. 

பக்ரீத் பண்டிகை : சொந்த ஊருக்கு போறவங்களுக்கு சிறப்பு ரயில்.. குட்நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே..

56

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைச்சியின் பெரும்பகுதியை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். அவரது தோழர்களில் சிலர் இறைச்சியை மூன்று பகுதிகளாகப் பிரித்தனர்: அவர்கள் ஒன்று மற்றும் இரண்டாவது பகுதியை நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுக்காகவும், மூன்றாவது பகுதியை ஏழைகளுக்காகவும் வைத்திருந்தனர். பலியிடும் பிராணியும் எருமை போன்று பெரிய விலங்காக இருக்கலாம். நன்கொடை இறைச்சியைப் பெறுபவர்கள் பெரும்பாலும் அந்த இறைச்சி இளம் பிராணியா அல்லது வயதான விலங்குகளா என்று கேட்பது அடிக்கடி காணப்படுகிறது. அது முதிர்ந்த மிருகமாக இருந்தால், சில சமயங்களில் அதை ஏற்க மறுக்கிறார்கள். 

66

ஈத்-உல்-அஷா பண்டிகை (பக்ரீத்) இளம் விலங்குகளின் இறைச்சி உண்ணும் பருவமாக மாற்றுகிறது. இந்த அணுகுமுறை ஆரோக்கியமற்றது. இதனை ஊக்குவிக்கக் கூடாது. இந்த பண்டிகையின் போது இஸ்லாம் குடியிருப்புகள் பரிதாபகரமான அசுத்தமான இடங்களாக காட்சியளிக்கின்றன. இவற்றைக் கடந்து செல்லும் எவருக்கும் குமட்டல் ஏற்படும். 

நபிகள் நாயகம் தூய்மையை வலியுறுத்துகிறார். தூய்மை ஈமானில் பாதியென்றும் கூறியுள்ள நிலையில், இஸ்லாமியர்களின் இந்த நடவடிக்கை நகைப்புக்குரியது. மற்ற மதத்தினரும் வாழும் கலப்புக் குடியேற்றங்களில், இஸ்லாமியர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். தங்களின் செயல்களால் அண்டை வீட்டாரை தொந்தரவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் நீங்கள் யூதர்களைப் போல் ஆகாதீர்கள்” (திர்மிஸி: 2799). 

நபிகள் நாயகத்தின் காலத்தில் யூதர்கள் தூய்மையில் அக்கறை காட்டாமல் இருந்தனர். இப்போது இஸ்லாமியர்கள் இந்த விஷயத்திற்குள் வந்துவிட்டனர். அதனால் இஸ்லாமியர்கள் நபிகள் நாயகம் வழியில் நடக்க வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும். வீண் பகட்டு கூடாது. 

இதையும் படிங்க: Bakrid 2023: இஸ்லாமியர்கள் பக்ரீத் கொண்டாடுவதன் முக்கியத்துவம் தெரியுமா?

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved