MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Bakrid 2023: இஸ்லாமியர்கள் பக்ரீத் கொண்டாடுவதன் முக்கியத்துவம் தெரியுமா?

Bakrid 2023: இஸ்லாமியர்கள் பக்ரீத் கொண்டாடுவதன் முக்கியத்துவம் தெரியுமா?

சவுதியை தவிர பிற நாடுகளில் வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

2 Min read
maria pani
Published : Jun 26 2023, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை தியாகத்தின் பண்டிகை என்று அழைக்கிறார்கள். இந்த பண்டிகையை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள முக்கிய மசூதிகளில், இஸ்லாமிய மையங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படும். எல்லா இஸ்லாமியர்களும் இதில் தவறாமல் கலந்துகொள்வார்கள். 

25

இந்த ஆண்டு, சவூதி அரேபியாவில் சந்திரனைப் பார்த்ததைத் தொடர்ந்து ஜூன் 26 ஆம் தேதி திங்கள்கிழமை ஹஜ் தொடங்கும். ஆகவே ஈத் அல்-அதா என அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை மூன்று நாட்களுக்குப் பிறகு ஜூன் 28ஆம் தேதி அன்று கொண்டாடப்படும். சவுதியை தவிர பிற நாடுகளில் வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

35

பக்ரீத் ஏன் கொண்டாடப்படுகிறது? 

தியாகத் திருநாள் என்பது, இப்ராஹிம் நபிக்கு, தன் மகன் இஸ்மாயிலைத் தியாகம் செய்ய துணிந்த நாளாகும். இப்ராஹிமுக்கு ஒரு கனவு வந்தது. அதில் கடவுளுக்கு அவரது மகனை பலியாகக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதை உணர்ந்த இப்ராஹிம் தனது மகனைப் பலியிட சென்றபோது, ​​ஜிப்ரில் தூதரை பெரிய ஆட்டுக்கடாவுடன் இறைவன் அனுப்பினார். ஜிப்ரில் இப்ராஹிமுக்கு கனவைக் குறித்தும், மகனுக்காக பதிலாக ஆட்டுக்கடாவை தியாகம் செய்யும்படியும் அறிவுறுத்தினார். நபி இப்ராஹிம் இதை ஒரு கட்டளையாக விளக்கினார் மற்றும் அல்லாஹ்வுக்காக தனது மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய முடிவு செய்தார். இருப்பினும், கடவுள் அவரது விசுவாசத்தாலும், அர்ப்பணிப்பாலும் மகிழ்ந்து, அவரது மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியை பலியிடும் இடத்தில் வைத்தார். 

45

நபி இப்ராஹிம் அவர்கள் ஆட்டுக்குட்டியை மகிழ்ச்சியுடன் பலியிடுவதால், ஈத் அல்-அதா தினத்தன்று இஸ்லாமியர்கள் விலங்குகளை பலி கொடுக்கும் வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். இந்த காரணத்திற்காக, ஈத் அல்-அதா.. பக்ரீத் என்றும் அழைக்கப்படுகிறது.

இஸ்லாத்தின் ஐந்தாவது தூணான ஹஜ் அல்லது புனித யாத்திரையின் உச்சக்கட்டமாக தியாகத் தினம் இருப்பதால், ஈத் அல்-அதாவுக்கு தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனாவிற்கு வருடாந்திர புனித யாத்திரையை தங்கள் வாழ்நாளில் ஒருமுறை நிறைவேற்றுவார்கள். 

55

பக்ரீத் கொண்டாட்டம் 2023: 

பக்ரீத் அன்று இஸ்லாமியர்கள் சூரியன் உதித்த பின்னர் மசூதியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவார்கள். பக்ரீத் நாளில் தொழுகை கூடுதல் சிறப்பாக இருக்கும். இவையெல்லாம் நிறைவடைந்து வீடு திரும்பும்போது ஒருவருக்கொருவர் 'ஈத் முபாரக்' என்ற வாழ்த்துகளை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டு, ஆடுகளை குர்பானியாக அளிப்பார்கள். 

இதையும் படிங்க: Bakrid 2023: தமிழ்நாட்டில் எப்போது பக்ரீத் பண்டிகை கொண்டாடனும்? முக்கிய அறிவிப்பு வெளியானது!!

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved