MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வீட்டில் பணம் சேர உழைத்தால் மட்டும் போதாது! இதையும் சேர்த்து செய்ங்க!செலவும் குறையும் ,பணமும் பெருகும்!

வீட்டில் பணம் சேர உழைத்தால் மட்டும் போதாது! இதையும் சேர்த்து செய்ங்க!செலவும் குறையும் ,பணமும் பெருகும்!

நாம் உழைத்த பணத்தை வீட்டில் சேர, வீண் செலவினை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் 

2 Min read
Dinesh TG
Published : Mar 31 2023, 03:22 PM IST| Updated : Apr 01 2023, 08:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
money

money

பணம் என்றதும் பிணம் கூட வாயைத் திறக்கும் என்ற பேச்சு வழக்கு உள்ளது. இந்த பணத்திற்காக தான் நாம் அனைவரும் இரவு பகல் பாராமல் ஓடி ஓடி சம்பாதிக்கிறோம். இப்படி சம்பாதித்த பணம் பல நேரங்களில் நம் கையில் தங்காமல் செலவுகள் ஆகும். சில நேரம் விரய செல்வுகள் அதாவது தேவையற்ற செலவுகள் உண்டாகும். அத்தியாவசிய செலவுகளை நம்மால் எதுவும் செய்ய இயலாது. ஆனால் இந்த தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படாமல் இருக்க சில வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்றை பற்றி தான் இங்கு நாம் காண உள்ளோம்.

அதே நேரத்தில் நியாயமாக சம்பாதித்த நமது பணம் எப்போதும் நம்மோடு நிலைக்க செய்ய பல்வேறு முறைகள் இருக்கின்றன.அப்படியாக நாம் உழைத்த பணத்தை வீட்டில் சேர, வீண் செலவினை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சம்பாதித்த பணத்தை எப்படி காத்துக் கொள்வது என்று ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கும். பணம் சேர, தங்க, வீண் செலவை தவிர்க்க போன்றவற்றிக்கு எதை செய்தும் ஒர்க் அவுட் ஆகலன்னு ஃபீல் பண்ணாம இதனை செய்து பாருங்க. அப்பறம் நீங்களே இந்த ட்ரிக்க மற்றவர்களுக்கு சொல்லி தருவீங்க.

23

வசம்புக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி மிகுந்து காணப்படுகிறது. நாம் பணம் வைக்கும் இடங்களில் பீரோ, பர்ஸ் போன்றவைகளில் இந்த வசம்பை வைக்கலாம். மேலும் பூஜை அறை, கிச்சனில் உப்பு ஜாடி, அரிசி போடும் டப் அல்லது பக்கெட் என்று போன்றவற்றிலும் இந்த வசம்பை வைக்கலாம். இப்படி வைப்பதால் பணம் எப்போதும் நம் பர்சில் தாங்கும் தவிர வீண் செலவுகள் வருவதை இந்த வசம்பு தடுக்கும்.

ஒரு கண்ணாடி டப்பாவை எடுத்துக்கிட்டு அதில் பெயர் சொல்லாதது ஒன்றை எடுத்துக்கங்க. பெயர் சொல்லாதது என்றால் என்னன்னு கேக்குறீங்களா? வசம்பின் மற்றொரு பெயர் தான் பெயர் சொல்லாதது. அதன் பின் ஒரு 100 ரூபாய் அல்லது 500 நோட்டு எடுத்துக் கொண்டு பிறகு கல் உப்பு ஜாடியையும் எடுத்துக்கோங்க. இப்போது இந்த தாந்திரீக பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

எடுத்துக்காட்டாக 500 ரூபாய் நோட்டை எடுத்துக்கிட்டு பூஜை அறையில் வைத்து சாமிகிட்ட எனக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீரணும்னு , வீண் செலவு வரக்கூடாதுன்னு கும்பிடுங்க! நாம் எடுத்து வைத்துள்ள வசம்பை அந்த ரூபாய் நோட்டில் வைத்து நன்றாக சுருட்டிக் கொள்ள வேண்டும். அடுத்தது இந்த ரூபாய் நோட்டை மஞ்சள் அல்லது பச்சை நிற நூல் வைத்து கட்டி எடுத்து வைத்துள்ள உப்பு ஜாடியில் போட்டு மூடிடுங்க.

33

அல்லது நீங்கள் எங்கேல்லாம் பணம் வைப்பீர்களோ அங்கெல்லாம் இதனை இப்படி ரூபாய் நோட்டில் வைத்து , நூல் கட்டி வைக்கலாம். நாம் அங்கிருந்து பணம் எடுக்கும் போது நமக்கு இந்த வசம்பு இருப்பது தெரியாத படி வைக்க வேண்டும். மேலும் இதனை ஒரு முறை செய்தல் போதுமானது.

இவ்வாறு செய்யும் போது வீட்டில் பணவரவு ஆரம்பிக்கும்.வந்த பணம் வீட்டில் தங்கும். இந்த வசம்பை 6 மாதத்திற்கு பிறகு மாற்றி விடலாம். உப்பு ஜாடியில் வைத்தால் வரம் ஒரு முறை மற்ற வேண்டும். கல் உப்பானது மகாலெட்சுமியின் அம்சமாக இருக்கிறது. அதனால் உப்பு ஜாடியில் இந்த வசம்பை போடுவதால் அன்னை மஹாலக்ஷ்மி எப்போதும் உங்கள் வீட்டில் பணத்தை அள்ளித் தருவாள்.

இவ்வாறு செய்ய செய்ய கண்டிப்பாக உங்களுக்கு நல்லதொரு மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். நம்பிக்கை கொண்டவர்கள் இதனை செய்து பார்த்து பலன் அடையுங்கள்!

இந்த செடியை வளர்த்தால் போதும்! உங்கள் வீட்டிலுள்ள தரித்திரம், எதிர்மறை சக்தி நீங்கி, பண வரவு அதிகரிக்கும்!

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved