Asianet News TamilAsianet News Tamil

இந்த செடியை வளர்த்தால் போதும்! உங்கள் வீட்டிலுள்ள தரித்திரம், எதிர்மறை சக்தி நீங்கி, பண வரவு அதிகரிக்கும்!

வீட்டில் மருதாணி செடியை வளர்த்தால்,வீட்டில் பணவரவு எப்படி அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்

If you grow this plant, poverty in your home will be removed and money will increase!
Author
First Published Mar 30, 2023, 4:03 PM IST

கண்ணாடி எப்படி நம்மை பிரதிபலிக்கிறதோ அது போன்று மருதாணியும் நம்மை பிரதிபலித்து காட்டும் தன்மை பெற்றது.
மருதாணியை அரசாணி என்றும் அழைப்பார்கள். மருதாணி செடிக்கு செடிக்கு பணத்தை வாரி வழங்கும் ஆற்றல் கொண்டது.
தவிர கண்ணாடி எப்படி நம்மை பிரதிபலிக்கிறதோ அது போன்று மருதாணியும் நம்மை பிரதிபலித்து காட்டும் தன்மை பெற்றது. மருதாணியானது தேவதை வசிக்கும் ஒரு செடியாக இருக்கிறது. வீட்டில் மருதாணி செடியை வளர்த்தால்,வீட்டில் பணவரவு எப்படி அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்

வீட்டில் மருதாணி செடியை வளர்த்தால், வீட்டில் மகாலட்சுமி அம்சம் நிறைந்து காணப்படும் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் வீட்டின் முன் வாசலில் மருதாணி செடியை வளர்த்தால் எதிர்மறை ஆற்றல் நமது வீட்டு வாசலை தாண்டி வீட்டிற்குள் வராது . எதிர்மறை ஆற்றலை வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்தும் தெய்வீக சக்தியை மருதாணி பெற்றுள்ளது. 

அதே போன்று மருதாணி இலைகளை அரைத்து கையில் வைப்பதால் பெண்களை எந்த ஒரு தீய மற்றும் துர் சக்தியும் அண்டாது என்பதும் உண்மை. இதனால் தான் விசேஷ மற்றும் பண்டிகை தினங்களில் பெண்களுக்கு கையில் மருதாணியை வைத்து காத்தார்கள் நமது முன்னோர்கள்.

இந்த மகாலட்சுமி செடியானது அன்னை சீதாவின் ஸ்வரூபம் என்று கூறப்படுகிறது. சீதா தேவியின் விருப்பத்தின் படி, ஸ்ரீராமனிடம் வரம் பெற்ற செடி என்ற பெருமையும் இதற்கு உண்டு. அன்னை சீதாதேவி வனவாசம் இருந்த போது அன்னையின் கஷ்டத்தை, நஷ்டத்தை, துக்கத்தை, அழுகையை என அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட செடி என்ற பெருமையும் இந்த மருதாணி செடிக்கு இருக்கிறது.

இதன் காரணமாக ஸ்ரீ ராமன் மருதாணி செடிக்கு, வரத்தை அளித்தார் என்று புராணங்கள் கூறுகிறது. அந்த வரம் யாதெனில், மருதாணி இலையை அரைத்து கையில் வைத்துக் கொள்ளும் பெண்கள்,அவர்கள் வாழ்வில் எவ்வித கஷ்டமும் வராது என்று வரம் அளித்தார். இத்தகைய 'மருதாணி செடியில் மகாலட்சுமி எப்போதும் நிரந்தரமாக வாசம் செய்வாள்’ என்ற வரமும் இந்த மருதாணி செடிக்கு கிடைத்ததாக சாஸ்த்திரங்கள் கூறியுள்ளது.

உங்கள் வீட்டில் மருதாணி செடி உண்டெனில் அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றுவதோடு மட்டுமல்லாமல் 2 ஸ்பூன் அளவிலான காய்ச்சாத பாலையும் சேர்த்து ஊற்றி வர மருதாணி செடி செழிப்போடு வளரும்.

எப்படி நாம் துளசிச் செடியை வீட்டில் வளர்த்து பூஜிக்கிறோமோ அது போன்று மருதாணி செடியையும் பூஜிக்கலாம். ஒரு அகல் விளக்கில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத் திரி போட்டு தினமும் அல்லது மஹாலக்ஷ்மிக்கு உகந்த நாளான செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டு வர வேண்டும்.

இவ்வாறு பூஜிப்பதால் மருதாணியில் வாசம் செய்யும் மஹாலக்ஷ்மி உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல், துர் சக்தியை நெருங்க விடாமல் காப்பாள். தவிர சகல விதமான ஐஸ்வர்யத்தையும் பணத்தையும் அள்ளித் தந்து உங்கள் வீட்டில் பண மழையை பொழிய வைப்பாள் என்பதும் ஐதீகம். நம்பிக்கை உள்ளவர்கள் இதனை பின் பற்றி உங்கள் வாழ்க்கையை வளம் பெற செய்யுங்கள்!

குறிப்பு:

மருதாணி செடியை முறையாக பராமரிக்காமல் விட்டால் நிச்சயம் அது நமக்கு கஷ்ட்டத்தை தரும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

ராம நவமியான இன்று ராமனின் அருளை பெற இதனை கூறி வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற்று இன்பமுடன் வாழுங்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios