MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • திருப்பதியில் ஒருநாள் அன்னதானத்திற்கு மட்டும் இத்தனை லட்சம் செலவாகுமா? வெளியான பிரமிப்பூட்டும் தகவல்

திருப்பதியில் ஒருநாள் அன்னதானத்திற்கு மட்டும் இத்தனை லட்சம் செலவாகுமா? வெளியான பிரமிப்பூட்டும் தகவல்

திருமலை திருப்பதி கோவிலில் வருடம் முழுவதும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படும் நிலையில் அன்னதானத்திற்கு ஆகக்கூடிய செலவு விவரம் வெளியாகி உள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Aug 12 2024, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பணக்கார கடவுள்

பணக்கார கடவுள்

உலகின் பணக்கார இந்து கோவில்களில் ஒன்றாக திருமலையில் உள்ள திருப்பதி கோவிலும் உள்ளது. இக்கோவிலில் சாதாரண நாட்களில் ஆயிரக்கண்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். அதேவேளையில் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் நிகழும் என்பது பெரும்பாலானோர் நம்பிக்கை. இதனால் இக்கோவிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

25
தரிசன முறை

தரிசன முறை

திருப்பதியில் இலவச தரிசனம், நடைபாதை தரிசனம் என்று சொல்லப்படும் திவ்ய தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம் என மூன்று வழிகளில் தரிசனம் மேற்கொள்ளலாம். விரைவு தரிசனம் செய்ய விரும்புபவர்கள் 3 மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

35
அன்னதானம்

அன்னதானம்

ஏழுமலையானை தரிசிக்க வருபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பசியுடன் செல்லக் கூடாது என்ற அடிப்படையில் காலை, பகல், இரவு என மூன்று நேரங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி கோவிலுக்கு ஆந்திரா மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

45
3 வேலையும் அன்னதானம்

3 வேலையும் அன்னதானம்

அப்படி வெளிமாநில பக்தர்கள் மொழி தெரியாமல் கடைகளில் உணவு சாப்பிடும் பொழுது உணவின் விலை சரியாக தெரியாததால் சில நேரங்களில் அதிக விலை கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல் அடங்கிய அன்னதானம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே உள்ளது.

55
அன்னதான செலவு

அன்னதான செலவு

அப்படி 3 வேளையும் பரிமாரப்படும் உணவுக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என தெரியுமா? காலை உணவுக்கு ரூ.8 லட்சம், மதிய உணவுக்கு ரூ.15 லட்சம், இரவு உணவுக்கு ரு.15 லட்சம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் முழுவதையும் கொடுக்கும் பட்சத்தில் நன்கொடையாளரின் பெயர் அன்றைய தினம் பெயர் பலகையில் தெரிவிக்கப்பட்டு உணவு பரிமாறப்படும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved