MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ஜெயலலிதா இறந்த இரவு நடந்தது என்ன..? எடப்பாடி மகாத்மா காந்தி அல்ல..! உண்மையை உடைத்த திருநாவுக்கரசர்..!

ஜெயலலிதா இறந்த இரவு நடந்தது என்ன..? எடப்பாடி மகாத்மா காந்தி அல்ல..! உண்மையை உடைத்த திருநாவுக்கரசர்..!

எனக்கும், ஜெயலலிதாவுக்கும் சண்டை வரும்போது 24 எம்எல்ஏக்களில் 8 எம்எல்ஏக்களை கூட்டி வந்து விட்டேன். ராஜ்யசபாவில் 16 எம்பிகள் இருந்தார்கள். என்னுடன் 8 எம்பிக்கள் வந்தார்கள்.  அதிமுக ஜெ அணி, அதிமுக திரு அணி என இப்போதும் ராஜ்யசபா ரெக்கார்டில் இருக்கிறது.

3 Min read
Thiraviya raj
Published : Sep 12 2025, 04:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

அதிமுகவில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு விதித்திருந்தார் செங்கோட்டையன். ஆனால் கெடு விதித்த மறுநாளே செங்கோட்டையனை பதவிகளில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகு டெல்லி சென்று செங்கோட்டையன் அமித் ஷாவை பார்த்து பேசிவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இது அதிமுகவில் பல்வேறு விவாதங்களை கிளப்பி வரும் நிலையில் செங்கோட்டையனின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ண்ந திருநாவுக்கரசர்.

இதுகுறித்து பேசிய அவர், ‘‘காரணம் இல்லாமல் ஒரு காரியம் நிகழாது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா திடீரென மந்திரம் போட்டு வரவில்லை. 1989-ல் தோல்வியுற்று, ராஜீவ் காந்தி மரணம் உட்பட பல காரணங்களால் தான் அவர் முதல்வரானார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்து இறந்து விடுகிறார். திடீரென்று அவர் இறக்கவில்லை. 100 நாள் மருத்துவமனையில் இருந்தார். இறந்ததையே அறிவிக்காமல் ஒரு நாள் வைத்திருந்தார்கள். நானும் மருத்துவமனை சென்று பார்த்தேன். அங்கிருந்த மந்திரி என்னிடம் ரகசியமாகச் சொன்னார். ‘‘அண்ணே எல்லாம் முடிந்து விட்டது. போங்கண்ணே. ஏன் உட்கார்ந்து இருக்கீங்க?’’ என்று சொன்னார். நானும் அங்கு ஜெயலலிதாவை பார்த்தவர்களைத்தான் அங்கே பார்த்தேன்.

24
Image Credit : Google

ராகுல் காந்திகூட பார்க்கவில்லை. ஒருவரையும் பார்க்க விடவில்லை. அன்னைக்கு இரவே எம்எல்ஏக்கள் கூட்டம் போட்டு ஜெயலலிதாவின் உடல் ஆஸ்பத்திரியில் இருக்கும் போதே ஓபிஎஸ்ஐ அழைத்துச் சென்று பதவி பிரமாணம் செய்து வைத்தார் கவர்னர் ராவ்.

அது மத்திய அரசின் சம்மதத்தோடு நடந்தது. நாள் ஆகிவிட்டால் பிரச்சினை வந்து விடும் என்பதற்காகத்தான் இரவோடு இரவாக ஓபிஎஸை முதலமைச்சராக்கினார்கள். ஓபிஎஸ், ஜெயலலிதாவால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர். அவரை பதவிக்கு கொண்டு வந்தால் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளிடம் பிரச்சினை இருக்காது என்பதுதான் காரணம். அவரை கூப்பிட்டு வைத்து சசிகலா மிரட்டி நீ படவி விலக வேண்டும் என்று சொன்ன பின்னால்தான் அவர் தர்மயுத்தம் தொடங்கினார். அவரையே விட்டிருந்தால் அவர் பேசாமல் இருந்திருப்பார். சசிகலா ஜெயிலுக்கு போய்விட்டு வந்த பிறகு ஆறு மாதம் கழித்து நீ பதவியை விட விட்டுப் போ என்று சொன்னால் ஓபிஎஸ் அமைதியாக சென்று இருப்பார்.

Related Articles

Related image1
அதிமேதாவித் தனத்தால் வெறுத்த பாஜக.. அண்ணாமலை பதவி நீக்கத்தின் பின்னணியை உடைத்த குருமூர்த்தி..!
34
Image Credit : our own

சசிகலா அவசரப்பட்டு தான் முதலமைச்சராகிவிட்டால் ஜெயிலுக்கு போகாமல் இருக்கலாம் என்று யாரோ சொன்ன ஐடியாவை கேட்டு முடிவெடுத்து விட்டார். இவர் எம்எல்ஏக்கள் பெரும்பான்மை எனச் சொல்லி கவர்னரிடம் கொடுக்க, கவர்னர் மகாராஷ்டிரா போய்விட்டார். அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்து விட்டார். நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து சரியாக இருந்தது. பெரும்பான்மையாக இருந்தால் சிஎம் ஆக்க வேண்டியது தானே? ஏன் ஆக்கவில்லை என பிரச்சனை வரும்போது அங்கிருந்து ஜட்ஜ்மெண்ட் வரப்போகுது போகிறது என்று அறிவித்து விட்டார்கள். கவர்னரோ நான் தீர்ப்பு வரப்போகிறது என்று பார்த்துவிட்டு செய்கிறேன். இன்றைக்கு முதலமைச்சராகி விட்டு நாளை ஜெயிலுக்கு போனால் நன்றாக இருக்காது என்று தள்ளி வைத்து விட்டார்.

சசிகலா சிறைக்கு சென்று விட்டார். அடுத்த செங்கோட்டையனுக்கு வாய்ப்பு கிடைத்தது, அவர் நிராகரித்து விட்டார். அடுத்து எடப்பாடிக்கு அந்த வாய்ப்பு போய் சேர்ந்தது. அவர் அதை பயன்படுத்திக் கொண்டார். 4 வருடம் ஆட்சி நடத்தி விட்டார். கட்சியும் அவரிடம் சென்று விட்டது. இப்போது அவரை நான் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள மாட்டேன், தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றால் எடப்பாடி பழனிச்சாமி என்ன மகாத்மா காந்தியா? அவர் மகான் இல்லையே மனுஷன் தானே. இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் அவருக்கு ஆபத்து என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியும். அவரிடம் சென்று ஒவ்வொருத்தராக மல்லுக்கட்ட, மல்லுக்கட்ட அவர் ஒவ்வொருவரையாக நீக்கி கொண்டிருக்கிறார். அவரை பாதுகாத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

44
Image Credit : Asianet News

இப்போது 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கிறார்கள். ஆனால் செங்கோட்டையனிடம் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்? நான்கூட எனக்கும், ஜெயலலிதாவுக்கும் சண்டை வரும்போது 24 எம்எல்ஏக்களில் 8 எம்எல்ஏக்களை கூட்டி வந்து விட்டேன். ராஜ்யசபாவில் 16 எம்பிகள் இருந்தார்கள். என்னுடன் 8 எம்பிக்கள் வந்தார்கள். ராஜ்யசபா ரெக்கார்டில் அதிமுக ஜெ அணி, அதிமுக திரு அணி என இப்போதும் ரெக்கார்டில் இருக்கிறது. ஆகையால் செங்கோட்டையன் எதிர்ப்பெல்லாம் அதிமுகவில் வேலைக்கு ஆகாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved