MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • வீடுதோறும் பொங்கல் கிஃப்ட்.. சொந்தக் காசில் வாரி வழங்கும் திமுக எம்.எல்.ஏ-க்கள்..!

வீடுதோறும் பொங்கல் கிஃப்ட்.. சொந்தக் காசில் வாரி வழங்கும் திமுக எம்.எல்.ஏ-க்கள்..!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அவர்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தங்களது சொந்தப் பணத்தில் பொங்கல் கிஃப்டை கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

1 Min read
Author : Thiraviya raj
Published : Jan 09 2026, 07:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 வழங்கப்பட்டு வருகிறது. அதேவேளை திமுக எம்.எல்.ஏ-க்கள் சார்பில் அவர்களது தொகுதிக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் கிஃப்டுகளை வாரி வழங்க ஆரம்பித்துள்ளனர்.

கடந்த பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்ட போதும் ‘ரொக்கப் பணம்’ கொடுக்கவில்லை. ஆனால், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதையொட்டி பொங்கல் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை வாயிலாக ரூ.3000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ-க்கள் சார்பில் அவர்களது தொகுதிக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் கிஃப்டுகளை வழங்கி வருகின்றனர்.

24
Image Credit : Asianet News

விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா மீண்டும் திமுக தலைமையிடம் சீட் கேட்டு வருகிறார். அவருக்கு இந்தத் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற செல்வாக்கு இருப்பதால் அவர் சார்பில் விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு பொங்கல் கிஃப்டாக சேலை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறார்.

Related Articles

Related image1
உங்க 2 பேருக்கும் மன்னிப்பே கிடையாது.. சேகர்பாபு சொல்லி அப்படி செஞ்சீங்களா.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆவேசம்!
34
Image Credit : Asianet News

அதேபோல, திமுகவின் சீனியர் அமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு பொங்கலுக்கான கிஃப்ட் வழங்கப்பட்டு வருகிறதாம். அதாவது தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கொடுத்து வருகிறது. அதை வாங்கிவிட்டுச் செல்பவர்களுக்கு அக்கடையின் அருகிலேயே ரூ.5000 மதிப்புள்ள ‘கிஃப்ட் பெட்டி’ கொடுக்கப்படுகிறதாம். அந்த பெட்டியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும், தட்டு, குக்கர் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருக்கிறதாம்.

44
Image Credit : Asianet News

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அவர்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தங்களது சொந்தப் பணத்தில் பொங்கல் கிஃப்டை கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2026ம் ஆண்டு திமுக எம்.எல்.ஏ-க்கள் தரப்பால் கொடுக்கப்படும் ‘எலெக்சன் கிஃப்ட்’ என்ற குதூகலத்துடன் வாங்கிச் செல்கிறார்கள் பொது மக்கள். இது ஆரம்பம்தான்... இன்னும் நிறைய இருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

About the Author

TR
Thiraviya raj
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.1020 கோடி ஊழல்... உத்தரவு பிறப்பித்த அரசு... தலைகீழாக மாறும் கே.என்.நேருவின் அரசியல் களம்..?!
Recommended image2
இதுமட்டும் நடந்தால் ஜனநாயகன் நாளைக்கே ரிலீஸ்தான்.. உடைத்து பேசிய சென்சார் போர்டு மெம்பர்..!
Recommended image3
திமுக அரசை பாராட்டித் தள்ளிய ராமதாஸ்.. அறிவாலயத்தில் தஞ்சமடையும் தைலாபுரம்?.. உ.பி.க்கள் குஷி!
Related Stories
Recommended image1
உங்க 2 பேருக்கும் மன்னிப்பே கிடையாது.. சேகர்பாபு சொல்லி அப்படி செஞ்சீங்களா.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆவேசம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved