- Home
- Politics
- காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!
காவி உடையில் ஒரு சிங்கம் அரியணையில் அமர்ந்திருக்கிறது. அவர் சனாதன தர்மத்தின் மீதான தனது மரியாதையைப் பற்றி பேசுகிறார். ஆனால் அவர் எனது மதமான இஸ்லாத்தையும் முழுமையாக நம்புகிறார், மதிக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் லக்னோ வருகையின் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல திறப்பு விழாவின் போது, அரசியல் துருவமுனைப்புக்கு இடையில் சமூக நல்லிணக்கம், தனிப்பட்ட நம்பிக்கையை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மிர்சாபூரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் தௌகீர் அகமது, பிரதமர் மோடியைப் பார்க்கவும், அவரை ஆதரிக்கவும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து லக்னோவிற்குச் சென்றார். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி. அரசின் அமைச்சர் ஸ்வதந்திர தேவ் சிங் ஆகியோரின் படங்களைக் கொண்ட ஒரு பெரிய வால்போஸ்டரை அவர் பல பாஜக தலைவர்களுடன் ஏந்திச் சென்றார்.
இதுகுறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிய தௌகீர் அகமது, "நான் மோடியையும், யோகியையும் நம்புவதால் என் மகளின் திருமணம் முறிகிறது. ஒரு முறை மட்டுமல்ல, மூன்று முறை நின்றுள்ளது. இந்த முஸ்லிம் ஒரு இந்துவாகிவிட்டதாகக் கூறி என் சமூகத்தில் உள்ளவர்கள் என்னை ஒதுக்கி வைக்கிறார்கள். நான் அவர் மாட்டு சாணத்தை சாப்பிடுகிறேன். மாட்டு சிறுநீர் குடிக்கிறேன்.(இதைச் சொல்லும்போதே தவ்கீர் அகமதுவின் கண்கள் கலங்கின்றன) மோடி, யோகி அரசின் பணிகளால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன்.
முந்தைய அரசுகள் ஆட்சி செய்தபோது கல் எறிந்தார்கள், கலவரங்கள் தூண்டப்பட்டன. ஆனால், யோகியின் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அமைதி நிலவுகிறது. கற்களை எறிந்த எவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. அதனால்தான் நான் சொல்கிறேன், காவி உடையில் ஒரு சிங்கம் அரியணையில் அமர்ந்திருக்கிறது. அவர் சனாதன தர்மத்தின் மீதான தனது மரியாதையைப் பற்றி பேசுகிறார். ஆனால் அவர் எனது மதமான இஸ்லாத்தையும் முழுமையாக நம்புகிறார், மதிக்கிறார். மோடியும், யோகியும் அனைவருக்காகவும் சிந்திக்கிறார்கள். அதனால்தான் அவர் அவர்களின் ஆதரவாளரானேன்’’ என்கிறார்.
மிர்சாபூரில் இருந்து லக்னோவிற்கு தான் வந்ததற்கான நோக்கத்தை குறிப்பாக எடுத்துச் சொன்ன தவ்கீர், "மோடி, யோகி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் அவர்களைப் பார்த்து அவர்களுக்கு வால்போஸ்டரை காட்ட வந்துள்ளேன்" என்றார். தவ்கீரின் சமூக விலக்குவாதத்தில் அவரது நம்பிக்கையின் ஆழம் பிரதிபலிக்கிறது. மக்கள் தனக்கு பல்வேறு வகையான சித்திரவதைகளை இழைப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் மோடி-யோகி ஆதரவின் அவர் உறுதியாக இருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாளில் பிரதமர் மோடி ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல்"-ஐ திறந்து வைக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தவ்கீர் போன்ற ஆதரவாளர்கள், மத எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மோடி, யோகியின் புகழை நிரூபிக்கின்றனர். ஆனாலும், அந்த ஆதரவு சமூக விலக்கி வைப்பது, குடும்பதில் கொந்தளிப்பு என எதிர்க்கப்படுகிறது. இதில், தவ்கீர் அகமதுவின் தனிப்பட்ட அரசியல் நம்பிக்கையும், ஆதரவும் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்? சமூக மாற்றத்திற்கான பாதை எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை அவரது பேச்சில் விளங்கிக் கொள்ள முடிகிறது.
