MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ஓபிஎஸ் வைத்த வெடி..! அமித் ஷாவிடம் ஆதாரங்களை ஒப்படைக்கும் எடப்பாடி..! சிக்கிய செங்கோட்டையன்..!

ஓபிஎஸ் வைத்த வெடி..! அமித் ஷாவிடம் ஆதாரங்களை ஒப்படைக்கும் எடப்பாடி..! சிக்கிய செங்கோட்டையன்..!

முன்பிருந்த கொதி நிலை இப்போது செங்கோடையனிடம் மிஸ்ஸிங். இதற்கு காரணம் இந்த இடைப்பட்ட பத்து நாட்களில் அவர் எதிர்பார்த்த ஒரு பலம் கிடைக்கும், ஒரு ஆக்சன் இருக்கும் என எதிர்பார்த்தார் செங்கோட்டையன். ஆனால் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழவில்லை.

3 Min read
Thiraviya raj
Published : Sep 16 2025, 07:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

10 நாட்களுக்கு முன் அதிமுக ஒன்றாக இருந்தால் தான் வெற்றி பெறும். அதிமுக ஒன்றாக இருந்தால்தான் வெற்றி பெறும். ஒருங்கிணைக்கிற வேலைகளை செய்ய வேண்டும் என செப்டம்பர் 5ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார் செங்கோட்டையன். அதாவது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். இதனால் அடுத்த நாளே முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனின் அனைத்து விதமான கட்சிப் பதவிகளையும் பறித்து அதிரடி காட்டினார் எடப்பாடி. அதன் பிறகு ஹரித்துவார் செல்வது போல் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்த்தித்தார் செங்கோட்டையன்.

செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்பதுதான் நமது தத்துவம். பிரிந்தவர்கள் எல்லோருமே ஒன்று சேர வேண்டும் என்பதை மறுபடியும் வலியுறு த்தினார் செங்கோட்டையன். ஆனால் முன்பிருந்த ஸ்ருதி அவரிடம் இல்லை. முன்பிருந்த கொதி நிலை இப்போது செங்கோடையனிடம் மிஸ்ஸிங். இதற்கு காரணம் இந்த இடைப்பட்ட பத்து நாட்களில் அவர் எதிர்பார்த்த ஒரு பலம் கிடைக்கும். அவருடைய ஆதரவாளர்கள் தொண்டர்களெல்லாம் உடனே ராஜினாமா செய்தார்கள். ஒரு ஆக்சன் இருக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழவில்லை.

24
Image Credit : Asianet News

முக்கியமாக செங்கோட்டையனின் தீவிரமான ஆதரவாளரான பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரான பன்னாரி. செங்கோட்டையனின் இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்குக்கூட அவர் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் முன்பே போய் சரணடைந்து விட்டார். எடப்பாடி பழனிசாமி சமாதானம் முயற்சிக்கு வருவார் என எதிர்பார்த்தார். ஆனால் அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடி காட்ட, செங்கோட்டையனை வைத்து பல்ஸ் பார்க்க பின்னால் இருந்த சுமார் பத்து மாஜிக்கள் அப்படியே ஷாக். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அப்படியே மெல்ல பின் வாங்கிவிட்டார்கள்.

இந்த 10 நாளிலேயே கோபியை தாண்டி பெரிதாக மேற்கு மண்டலத்தில் இருந்தேகூட பெரிய அளவில் ஆதரவாளர்கள் எல்லாம் செங்கோட்டையன் பார்க்க குவிந்த ஆதரவாளர்களும் கூட பலர் சந்திக்கவில்லை. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் தான் அதிகளவில் செங்கோட்டையனை பார்த்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தான் தேவை. ஈரோடு மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் கார்த்திக் செப்டம்பர் 5ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையனுடன் இருந்தார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களிலேயே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னுடைய ஆதரவையும் தெரிவித்தார்,

Related Articles

Related image1
Now Playing
எங்களுக்கு ஆட்சி, அதிகாரம் இருப்பதைவிட தன்மானம்தான் முக்கியம் - எடப்பாடி பழனிசாமி
34
Image Credit : Asianet News

தலைமை எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என அவர் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமல்ல, ஓபிஎஸ் டீமில் இருந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் திருவள்ளூர் மாரப்பன், கோபிசெட்டிபாளையம் ஒன்றிய செயலாளர் சிதம்பரம், கவுந்தம்பாடி முத்துசாமி உள்ளிட்ட பலருமே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்கள். செங்கோட்டையனுக்கு ஆதரவு கொடுத்த அந்த எதிர் முகாம் கூட எடப்பாடி பழனிசாமி பக்கம் போய் சேர்ந்து விட்டார்கள். இது மட்டுமல்ல. இப்போது டெல்லிக்கு சென்று இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

செப்டம்பர் 15ஆம் தேதி பேரறி ஞர் அண்ணா பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்திட்டு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், ‘‘ அதிமுகவில் பிரிந்த தலைவர்களை சேர்க்கவில்லை என்றால் பிறகு தொண்டர்கள் எல்லாம் சேர்ந்து அதிமுகவை காப்பாற்றுவார்கள். அவர்கள் இந்த விஷயத்தை முன்னெடுப்பார்கள்’’ எனக் கூறினார். அடுத்து செங்கோட்டையன் தொடர்ந்து என்னுடன் போனில் பேசிக்கொண்டு இருக்கிறார். செங்கோட்டையனுடன் சசிகலா, தினகரன் எல்லோரும் சந்திக்கக்கூடிய நாள் விரைவில் வரும் என எடப்பாடி பழனிசாமியை அட்டாக் செய்வதாக சொன்னது செங்கோட்டையனுக்கு எதிரான நெகட்டிவ் மதிப்பீடை அதிகமாக்கி விட்டது. இதையெல்லாம் வைத்து எடப்பாடி பழனிசாமியின் கணக்கு என்னவென்றால் செங்கோட்டையன் இப்படி கட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

44
Image Credit : X/OPS

பொதுச் செயலாளருக்கு எந்த ஒரு விஷயத்தையும் தெரிவிப்பது இல்லை. ஏன் அவர் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என அவர் மீது ஆக்சன் எடுப்பதற்கான காரணங்களை சேகரித்து வைத்திருக்கிறார். அதே போல டெல்லியில் அமித் ஷாவை சந்திக்கிற போது இந்த விஷயங்களையும் ஒரு பகிர்ந்து கொள்ளவே வாய்ப்புகள் அதிகம். செங்கோட்டையன் அவரது செயல்களாலேயே எக்ஸ்போஸ் ஆகிக்கொண்டு இருக்கிறார். அவர் இனிமேல் கட்சியில் இருந்தாலும், இல்லாமல் போனாலும் அது நமக்கு பாதகம் அல்ல, சாதகம் தான் என ரொம்ப இயல்பாக ஹேண்டில் பண்ணவும் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. விரைவில் டெல்லி பயணம் முடிந்து வந்த பிறகு மொத்தமாக கட்சி பதவிகளில் அவரை ஓரங்கட்டிய நிலையில் செங்கோட்டையன் மீது அடுத்த நடவடிக்கை பாய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பல்வேறு தகவல்களையும் போட்டு உடைக்கிறார்கள் இந்த பின்னணிகளை நன்கறிந்த ரத்தத்தின் ரத்தங்கள்.

About the Author

TR
Thiraviya raj
செங்கோட்டையன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved