MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Reheating Milk : பாலை அடிக்கடி சூடு பண்ணுவீங்களா? இந்த விஷயம் தெரியாம தப்பு பண்ணாதீங்க!

Reheating Milk : பாலை அடிக்கடி சூடு பண்ணுவீங்களா? இந்த விஷயம் தெரியாம தப்பு பண்ணாதீங்க!

பாலை அடிக்கடி சூடு செய்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து இங்கு காணலாம்.

1 Min read
Kalai Selvi
Published : Sep 29 2025, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : istockphoto

அனைவர் வீட்டிலும் பால் பயன்படுத்துவார்கள். குழந்தைகள் உள்ள வீட்டில் பால் கட்டாயம் 24 மணி நேரமும் இருக்கும். பசும்பால், பாக்கெட் பால் என வசதிக்கேற்றபடி மக்கள் பால் வாங்குகிறார்கள். சில காய்ச்சி வைத்து தேவைக்கேற்ப பயன்படுத்துவார்கள். சிலர் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவார்கள். சிலர் பிரிட்ஜில் வைப்பதே காய்ச்சிய பாலைதான். அதை மீண்டும் வெளியே எடுத்து சூடு செய்து பயன்படுத்துவார்கள்.

24
Image Credit : istockphoto

ஒவ்வொரு முறை பாலை பயன்படுத்தும் போதும் அதை சூடாக்குவதால் பக்க விளைவுகள் வரும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. சூடு செய்வதால் பால் கெட்டுப்போகாமல் இருக்கும். அதனால் பாலை திரும்பத் திரும்ப சூடு செய்வது நல்லது என நினைக்கிறோம். ஆனால் மீண்டும் மீண்டும் பாலை கொதிக்க விடுவது நல்லதல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாலில் கிளைசேஷனை அதிகரிக்கிறது.

Related Articles

Related image1
Milk and Cholesterol : பால் குடித்தால் கொலஸ்ட்ரால் அதிகமாகுமா? பலர் அறியா முக்கிய விஷயம்
Related image2
Milk Face Pack : ஒரு ஸ்பூன் பால் போதும்! கொரியன் மாதிரி முகம் பளபளக்கும்; சூப்பர் பேஸ் பேக் டிப்ஸ்
34
Image Credit : istockphoto

பாலை மீண்டும் மீண்டும் சூடு செய்தால் அதில் சில இரசாயனங்கள் உற்பத்தியாகின்றன. அவை மென்மையான இரத்த நாளங்களை கடினப்படுத்தக் கூடவை. மீண்டும் மீண்டும் காய்ச்சிய பாலை அடிக்கடி குடித்தால் இரத்த சிவப்பணுக்களைக் கூட கடினமடைய செய்கின்றன. இதனால் இரத்த சிவப்பணுக்களின் அதன் நெகிழ்வுத்தன்மை அல்லது திரவத்தன்மை சீர்குலைகின்றது. இவை நாளடைவில் இரத்தக்குழாயில் கட்டிகளாக தேங்கிவிடும் அபாயம் உள்ளது. இப்படி தேங்குவதால் இரத்த ஓட்டமும் இயல்பாக இருக்காது. சிலருக்கு இதனால் மாரடைப்பும் வரக்கூடும். கல்லீரல் வீக்கத்திற்கும் காரணமாகிறது.

44
Image Credit : istockphoto

மீண்டும் மீண்டும் பாலை சூடுபடுத்துதல், பின் ஆறவைத்து பயன்படுத்துதல் பாலில் உள்ள சில ஊட்டச்சத்துக்களை குறைக்கும். வைட்டமின் D, வைட்டமின் B, புரதங்களை உடைக்கும். அளவாக பாலை வாங்கி பயன்படுத்துவதே சாலச் சிறந்த நடவடிக்கையாகும். மீண்டும் மீண்டும் காய்ச்சிக் கொண்டே இருப்பது பால் குடிப்பதற்கான நன்மைகளையே நீக்கிவிடும் என்பதை மறந்துவிடவேண்டாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
பால்
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved