MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இரவில் நாய்கள் குரைப்பதற்கு இதெல்லாம் தான் காரணமா?

இரவில் நாய்கள் குரைப்பதற்கு இதெல்லாம் தான் காரணமா?

நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது நாய்கள் குரைக்கும் சத்தத்தை கேட்டு திடீரென விழித்திருப்போம். நாய்கள் ஏன் இரவில் அதிகமாக குரைக்கின்றன? இதற்கு என்ன காரணம் தெரியுமா?

2 Min read
Author : Ramya s
Published : Sep 26 2024, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Dogs Barking in Midnight

Dogs Barking in Midnight

பகலில் எந்த தொந்தரவும் செய்யாத சில நாய்கள், இரவில் மட்டும் தொடர்ந்து குரைத்து கொண்டிருக்கும். மேலும் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் என ஒருவரையும் விட்டுவைக்காலம் துரத்து. இரவில் சில நேரங்களில் நாய்கள் அதிகமாக ஊளையிடுவதையும் நாம் கவனித்திருப்போம்.

நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது நாய்கள் குரைக்கும் சத்தத்தை கேட்டு திடீரென விழித்திருப்போம். நாய்கள் ஏன் இரவில் அதிகமாக குரைக்கின்றன? இதற்கு என்ன காரணம் தெரியுமா?

25
Dogs Barking in Midnight

Dogs Barking in Midnight

பொதுவாக இரவு நேரங்களில் தெரு நாய்கள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் கூட குரைப்பதையும், ஊளையிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றன. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நாய் குரைப்பது கெட்ட சகுனம் என்றும் அதை மரணத்தை முன்கூட்டியே அறிவிப்பதை இது குறிக்கிறது என்று கூட சொல்லப்படுகிறது. ஆனால் இரவில் நாய்கள் குரைப்பதற்கு என்ன காரணம் என்பது சமீபத்திய ஆய்வில் வெளியாகி உள்ளது. 

தெருநாய்கள் தங்களின் கூட்டத்தில் இருக்கும் மற்ற நாய்களுக்கு சிக்னல் கொடுக்கும் விதமாகவே குரைக்கிறதாம். சில நேரங்களில் தொலைவான இடங்களுக்கு சென்றுவிட்டால் பாதுகாப்பான இடத்தை கண்டறிவதற்காக இப்படி குரைத்துக் கொண்டே இருக்குமாம். அது தவிர, சுற்றி உள்ள நாய்களுடன் உரையாடும் விதமாகவும் இப்படி குரைப்பதாகவும் கூறப்படுகிறது. 

35
Dogs Barking in Midnight

Dogs Barking in Midnight

சில இடங்களில் நாய்களுக்குள் சண்டை நடக்கும். இந்த சண்டை சில நாய்களுக்கு பிடிக்காதாம். மேலும் அந்த இடத்தில் இருக்கும் சூழலும் பிடிக்கவில்லை என்றால் நாய்கள் நள்ளிரவில் குரைத்துக் கொண்டே இருக்குமாம். தனது வேதனையை வெளிப்படுத்தும் நாய்கள் இரவில் குரைப்பதாகவும், ஊளையிடுவதாகவும் கூறப்படுகிறது. 

 

45
Dogs Barking in Midnight

Dogs Barking in Midnight

சில நாய்கள் மற்ற நாய்களை எச்சரிக்கும் விதமாகவும் இரவு நேரங்களில் நாய்கள் அதிகமாக குரைக்குமாம். தாவது இந்த எல்லை தன்னுடையது என்று நிரூபிக்கும் விதமாகவும் மற்ற நாய்கள் இங்கு ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று எச்சரிக்கும் விதமாகவும் நாய்கள் குரைத்துக் கொண்டு இருக்குமாம். 

சுற்றுச்சூழலில் நடக்கும் சிறிய மாற்றங்களை கூட நாய்கள் மிகவும் எளிதாக உணர்ந்து கொள்ளும். குறிப்பாக பட்டாசு வெடிப்பது, பார்ட்டிகளில் எழுப்பப்படும் அதிக ஒலி, வாகனங்களின் ஹாரன், சைரன் ஆகிய சத்தங்களால் நாய்கள் எரிச்சலடைய கூடுமாம். இதுவும் நாய்கள் குரைப்பதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. 

 

55
Dogs Barking in Midnight

Dogs Barking in Midnight

இவை தவிர தனது உடலில் ஏதேனும் காயம் இருந்தாலோ அல்லது வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் நாய்கள் இரவில் குரைக்கலாம். இவையும் பசி ஏற்பட்டாலும் நாய்கள் இரவில் குரைக்குமாம். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved