Budh Rashi Parivartan: இன்று நிகழும் புதனின் மாற்றத்தால்..திடீர் பண மழையில் நனையப் போகும் ராசிகள் இவைதான்..!
Budh Rashi Parivartan 2022: அக்டோபர் 2 ஆம் தேதி அதாவது இன்று நிகழும் புதன் பெயர்ச்சியால், குறிப்பிட்ட ராசிகளின் வாழ்வில் செல்வம் பெருகும் யோகம் உண்டாகும்.
ஜோதிடத்தின் பார்வையில், புத்தி மற்றும் பேச்சின் கடவுளான புதன் கிரகம் இன்று அதாவது அக்டோபர் 2 ஆம் தேதி பெயர்ச்சி அடையப்போகிறது. இந்த கிரகத்தின் மாற்றம் 1அனைத்து ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், குறிப்பிட்ட ராசிகளுக்கு இது மிக சிறந்த பொற்காலமாக இருக்கப்போகிறது. இதனால் உங்கள் குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடைபெறும். அந்த அதிர்ஷ்டம் நிறைந்த ராசிகள் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
சிம்மம்:
புதன் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். உங்கள் வீட்டில் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.இந்த காலம் வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்
கன்னி:
இந்த ராசிக்காரர்களுக்கு 10ம் வீட்டின் அதிபதி புதன் ஆவார். புதன் சஞ்சாரம் காரணமாக தொழிலில் வெற்றி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. புதிய இடத்தில் வேலை கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் உறுதி இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். அவர்கள் வேலையில் பதவி உயர்வு பெறலாம்.பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் புதனின் சஞ்சாரத்தால் வேலை-வியாபாரத்தில் பெரும் பலன்களைப் பெறப் போகிறார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்கலாம். புதிய வருமானங்கள் உருவாகும், வியாபாரத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.