MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • புரட்டாசி சனிக்கிழமை விரத பலன்கள்...பெருமாளை இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும்

புரட்டாசி சனிக்கிழமை விரத பலன்கள்...பெருமாளை இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும்

Purattasi Sani Viratham: இந்த புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமையும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டால், நினைத்த காரியம் கைக்கூடும்.

2 Min read
Anija Kannan
Published : Oct 01 2022, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Perumal Temple

Perumal Temple

பெருமாளுக்கு உகந்த நாள் சனிக்கிழமை ஆகும். அதிலும், தமிழ் மாதங்களில் வரும் புரட்டாசி சனிக்கிழமை, பெருமாளுக்கு மிகவும் விசேஷமான ஒன்றாகும். இந்த மாதம் பெருமாளுக்கு மட்டுமின்று, நவராத்திரி நாயகிகளாகிய துர்கா, லட்சுமி, சரஸ்வதியின் மாதமாக கருதப்படுகிறது. 

 மேலும் படிக்க...தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வீட்டில் பூஜை செய்யும் போது..இனிமேல் இந்த ஒரு காரியம் மட்டும் செய்யுங்கள்

24
Perumal Temple

Perumal Temple

இந்த புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமையும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டால், நினைத்த காரியம் கைக்கூடும் என்பது ஐதீகம். 

அதுமட்டுமின்றி, இந்த புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த மாதத்தில் காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிடம் விரதமிருந்து வேண்டினால், நம்முடைய  வேண்டுதல் நிறைவேறும். மேலும், நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அருள்வார்.

34
Perumal Temple

Perumal Temple

புரட்டாசி சனிக்கிழமை விரத பலன்கள்:

இந்த புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் பெருமாளை விரதம்மிருந்து, வணங்கினால் தடைகள் நீங்கும். ஏழரை சனி, அர்த்தாஸ்ட சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கினால் பாதிப்புகள் குறையும்.

 இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகள் குறையும். மன அமைதி இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, வாகனம், சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். கடன் பிரச்சனை நீங்கும். செல்வம் வந்து சேரும்.

 மேலும் படிக்க...தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வீட்டில் பூஜை செய்யும் போது..இனிமேல் இந்த ஒரு காரியம் மட்டும் செய்யுங்கள்

44
Perumal Temple

Perumal Temple

வழிபாட்டு முறைகள்:

இந்த நாளில் பொதுவாக நெற்றியில் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் பெருமாளுக்கு பிடித்தமான பிற நைவேத்யங்களை செய்து பெருமாளை வழிபடுவது சிறந்தது. 

இந்த நாளில் இடித்த பச்சரிசி, அச்சுவெல்ல பாகு, ஏலக்காய் கொண்டு அகலாக வடித்து, அதில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றி பெருமாளை வழிபடுவது சிறந்தது. 

இந்த நாளில் கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று பெருமாளின் நாமங்களை கோஷமிட்டு பிறரிடம் தானமாகப் பெற்று  பின், பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவது சிறந்தது.

 மேலும் படிக்க...தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வீட்டில் பூஜை செய்யும் போது..இனிமேல் இந்த ஒரு காரியம் மட்டும் செய்யுங்கள்

About the Author

AK
Anija Kannan
ஆன்மீகம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved