தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வீட்டில் பூஜை செய்யும் போது..இனிமேல் இந்த ஒரு காரியம் மட்டும் செய்யுங்கள்
Pooja araiyil irrukka vendiya porul in Tamil: வீட்டில் பூஜை அறையில் வைக்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. எனவே, பூஜை செய்யும் போது சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
நாம் நம்முடைய பல்வேறு ஆசைகள் நிறைவேறுவதற்காக கடவுளை தொழுகிறோம். இதை நாம் தூய மனமும், சுத்தமான உடலும், உண்மையான வாக்கும் கொண்டு செய்யவேண்டும். வீட்டில் பூஜை செய்யும் இடம் சரியான திசையில் அமைந்தால் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். மாறாக, தவறான திசையில் வீட்டின் வழிபாட்டு அறை இருந்தால், பல வகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது தவிர, மகிழ்ச்சியும் அமைதியும் வாழ்க்கையில் இருந்து விலகிச் சென்றுவிடும்.
அதேபோன்று, உங்கள் பூஜை அறையில் கல் உப்பு, மஞ்சள், வெல்லம் சர்க்கரை, அரிசி, பருப்பு போன்றவற்றை மறக்காமல் வாங்கி வைத்து வழிபடுங்கள். பின்னர் இந்த பொருட்களை நீங்கள் உங்களுடைய சமையல் பொருள்களில் சேர்த்து கொள்ளலாம்.
அப்படி நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் போது, பூஜை அறையில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் கலந்து, பூ போட்டு வழிபடுவது மிகவும் சிறப்பாகும். அப்படி செய்தால் உங்களை பிடித்த தரித்திரம் விலகும்.வீட்டில் செல்வம் பெருகும்.
வழிபாடு நடைபெறும் போது ஆரத்தி விளக்கில் போதுமான நெய் அல்லது எண்ணெய் இருப்பதை உறுதி செய்யுங்கள். இடையில் அவை அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வழிபாடு நடைபெறும்போது விளக்கு அணைந்தால், அதற்கு பலன் கிட்டாது.
தெய்வங்களுக்கு சுத்தமான பூக்களை பயன்டுத்துங்கள். சாஸ்திரங்களின்படி, 11 நாட்களுக்கு மேலான துளசி மாலையை சாமிக்கு இடக்கூடாது. எப்போது துளசி மாலை போட்டாலும் தண்ணீர் தெளித்து அதன்பின்னர் கடவுளுக்கு இட வேண்டும்.
இனிமேல் இதை செய்து பாருங்கள். அப்படி செய்தால், உச்சி முதல் பாதம் வரை கடவுள் குளிர்ச்சியடைந்து உங்கள் வீட்டில் சந்தோஷமாக குடியிருப்பார்கள்.