பொங்கல் வைக்கத்தெரியாதா? கவலைப்படாதீங்க இந்த வருஷம் இப்படி பொங்கல் செஞ்சு அசத்துங்கள்..!
பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது, இந்த காலத்தில் பல பெண்கள் படித்து முடித்ததும், வேலைக்கு சென்று விடுவதால்... அத்யாவசிய சமையல் செய்ய தெரிந்து கொண்டாலும், விசேஷங்கள் என்றால் எப்படி சமையல் செய்வது என்கிற பய உணர்வு இருக்கலாம்.
சரி, இந்த வருடம் நீங்களும் பொங்கல் செய்து அசத்துதுலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
பச்சரிசி
வெல்லம்
பால்
ஏலக்காய்
முந்திரி
பச்சை பயறு
நெய்
சிறிதளவு உப்பு
செய்முறை:
தை பொங்கலின் போது, எப்போதுமே பாலை வழக்கமாக நீங்கள் பொங்கல் வைப்பதற்கு முன், மண் பானையிலோ அல்லது பொங்கல் வைக்க போகும் பாத்திரத்தில் ஊற்றி, அதில் பச்சை பயிரையும் போட்டு வேக விடவேண்டும்.
இந்த பால் பொங்கி வரும் திசை கூட, இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் என்பது பெரியவர்கள் வாக்கு.
பச்சை பயறு வெந்த பின், நீங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள பச்சை அரிசியை போடுங்கள். ஒரு கப் அரிசி என்றால், முக்கால் கப் வெல்லம் அதில் போட வேண்டும். அரிசி நன்கு வெந்த பின்னர், அதில் வெல்லத்தை உடைத்து போடுங்கள். பொங்கல் பதம் வந்த பின்னர் ஏலக்காய் தூள் போட்டு நெய்யில் வறுத்து எடுத்த முந்திரி, திராட்சை போன்றவற்றை அதில் போட்டு, உங்கள் ருசிக்கு ஏற்றவாறு பொங்கலில் நெய் விட்டு இறக்கி கொள்ளுங்கள்.
குறிப்பு: பொங்கல் தினத்திற்கு வைக்கப்படும் பொங்கலில் சிலர் உப்பு போடுவதை தவிர்த்து விடுவார்கள். எனவே உப்பு போடும் பழக்கம் இருந்தால் ஒரு சிட்டிகை மட்டும் உப்பு போட்டு... கமகமக்கும் பொங்கல் வைத்து நீங்களும் அசத்துங்கள்.