திநகரில் களைகட்டிய ஷாப்பிங்..! அலைமோதும் மக்கள் கூட்டம்..!
பொங்கல் திருவிழா நாளை கொண்டாட பட உள்ள நிலையில், சென்னை திநகரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதுகுறித்த செய்தி தொகுப்பு இதோ...
புதிய அரிசியில் பொங்கல் வைத்து, புதிய ஆடையை உடுத்தி தை மாத விளைச்சலை நடவு செய்து, தங்களது விவசாய வாழ்க்கைக்கு முதுகெலும்பாக இருக்கும் சூரியன், காற்று, ஆயகம், நீர், பூமி ஆகிய ஐபூதங்களையும் வணங்கி வழிப்படும் நாள்.
குறிப்பாக, விவசாயம் காக்க மனிதனுக்கு உறுதுணையாக நின்று ஏர் உழுதும் மாடுகளையும் தமிழன் சிறப்பிக்கும் நாளாகவே பொங்கல் திருவிழா பார்க்கப்படுகிறது.
இப்படி பட்ட சிறப்புக்கள் உள்ள இந்த நாளை உட்சாகமாக கொண்டாட, மக்கள் போட்டி போட்டு கொண்டு தங்களுக்கு பிடித்த உடைகள் மற்றும் பல பொருட்களை வாங்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் திநகர் இரங்கநாதன் சாலைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது.
பலர் கொரோனா பாதுகாப்பு கருதி, முகத்தில் முகக்கவசம் அணிந்து ஷாப்பிங் செய்த போதிலும் சிலர் முக கவசம் அணியாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
சந்தோஷமான தருணானதை அனுபவிப்பதற்காக ஷாப்பிங் செய்து வரும் மக்கள் , மிகவும் பாதுகாப்புடனும் இந்த பொங்கலை கொண்டாட வாழ்த்துக்கள்.
அதே நேரத்தில்... கடந்த ஆண்டை விட கொரோனா பிரச்சனை காரணமாக... வியாபாரம் மந்தமாக உள்ளதாகவே கூறுகிறார்கள் வியாபாரிகள்.