இந்திய ஆயுதப்படையில் பெண்களின் பங்கு!! வரலாறு காணாத மாற்றம்
அன்னையர் தினம் 2025 : இந்திய ஆயுதப் படையில் பெண்களின் பங்கு குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Mother's Day 2025 Women in Indian Armed Forces
தாய் இல்லாமல் அணுவும் அசையாது. ஒரு வீட்டின் அமைதிக்கு மட்டுமில்லை, நாட்டின் அமைதிக்கும் தங்களால் பங்களிக்க முடியும் என பெண்கள் நிரூபித்து வருகின்றனர். ஆயுதப்படையில் பணியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. பெண்களின் சேவையை பெற அவர்களுக்கான இட ஒதுக்கீடும் தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப் படையில் இணையும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அன்னையர் தினம் 2025 தேதி:
பெண்கள் ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதற்கான பொறுப்பை தவிரவும் பல வேலைகளை செய்யக் கூடியவர்கள். பெண்களின் தியாகம், அர்பணிப்பு போன்றவற்றை கொண்டாடும்விதமாக ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் மே 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கொண்டாடும் முன் பெண்கள் புரிந்து வரும் சாதனைகளையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
ஆயுதப் படையில் பெண்கள்!
இந்தியாவில் இராணுவம் ஆண்களிம் உலகமாக இருந்துவந்தது. அதை மாற்றும்விதமாக புதிய தலைமுறை பெண்கள் ராணுவத்தில் இணைய தொடங்கியுள்ளனர். பெண்கள் இராணுவத்தில் துணை அதிகாரிகளாக மட்டுமின்றி இராணுவ பெண் தலைவர்களும் உருவெடுத்துள்ளனர்.
ஆயுதப் படையில் பெண்கள்
நம் நாட்டில் ஆயுத படைப் பிரிவில் பெண்களின் பங்களிப்பு பெருகிவருகிறது. அதற்கு சான்றாக ஷிவாங்கி சிங்கை கூறலாம். ரஃபேல் ஜெட் விமானத்தை ஓட்டிய முதல் இந்தியப் பெண் ஷிவாங்கி சிங் தான். பெண்கள் ஆயுதப் படைக்கு வரத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 1958ஆம் ஆண்டில் ராணுவ மருத்துவப் படையில் (AMC) பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் 1991ஆம் ஆண்டில் இந்திய கடற்படை பெண்களை அதிகாரிகளாக சேர்க்கத் தொடங்கியது.
ஆயுதப் படையில் பெண்கள்
1992இல் பெண்கள் ஆயுதப் படைகளில் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (SCC) அதிகாரிகளாக பல்வேறு துணை கிளைகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இப்படி படிப்படியாகவே பெண்கள் ஆயுதப் படையில் கால் பதித்தனர். மார்ச் மாத 2023 நிலவரப்படி, இந்திய விமானப்படையில் (IAF) 1,636 பெண் அதிகாரிகள், இந்திய கடற்படையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பிரிவுகளில் பணி புரியும் பெண்கள் உட்பட 748 பெண் அதிகாரிகள் இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. இந்திய ராணுவத்திலும் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி 3.80% பெண்கள் பங்களிப்பு ராணுவத்தில் இருந்துள்ளது. தமிழ்நாட்டில், மாநில அரசு காவல் பணியமர்வில் பெண்களை இணைக்கும் நோக்கில் 30% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு பெண்கள்!
ஜனவரி 2023ஆம் ஆண்டில் 108 பெண் அதிகாரிகள் கர்னல் பதவி உயர்வு பெற்றனர். இது ஆயுதப்படையில் சாதிக்கும் பெண்கள் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணம். பெண்கள் ஆயுதப் படையில் திறம்பட பணியாற்றிவருகின்றனர். அவர்களால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றுதான் அவர்களின் ஆயுதப் படை பங்களிப்பு என்றால் மிகையாகா!