- Home
- Lifestyle
- Kitchen Garden: 15 நாளில் அறுவடை! பால்கனி, மொட்டை மாடியில் ஈஸியா வளர்க்கும் 5 கீரைகள், காய்கறிகள்!
Kitchen Garden: 15 நாளில் அறுவடை! பால்கனி, மொட்டை மாடியில் ஈஸியா வளர்க்கும் 5 கீரைகள், காய்கறிகள்!
Kitchen Garden: வீட்டில் சிறிய இடத்தில்கூட, வெறும் 15 முதல் 20 நாட்களில் சில காய்கறிகளை எளிதாக வளர்க்க முடியும். பூண்டு இலைகள், பேபி பாலக், வெந்தயக் கீரை, கொத்தமல்லி, மைக்ரோகிரீன்ஸ் போன்றவற்றை எப்படி வளர்ப்பது என்று இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

வீட்டில் சிறிய இடத்தில் பயனுள்ள காய்கறி செடிகள்
இப்போது நகர்ப்புறங்கள் முழுமையும் கான்கிரீட் காடுகள் ஆகி விட்டதால் ஒரு மரத்தை கூட பார்ப்பது அரிதாகி விட்டது. நாம் செடி, கொடிகள் வளர்க்க ஆசைப்பட்டாலும் சுற்றுப்புற இடங்களில் இடம் இல்லை. ஆகவே நமக்கு பயன் தரும் சில செடிகளை வீட்டின் சிறிய இடத்தில் கூட வளர்க்க முடியும். இது குறித்து விரிவாக பார்ப்போம்.
சிறிய தொட்டியில் பூண்டு செடி
நீங்கள் பூண்டுப் பற்களை மண்ணில் நட்டு வைத்தால், சுமார் 15-20 நாட்களில் பச்சை இலைகள் வந்துவிடும். இந்த இலைகளை சூப், சாலட் மற்றும் காய்கறி உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். சிறிய தொட்டி அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில்கூட இதனை வளர்க்கலாம்.
பாலக்கீரை
நிறைய வீடுகளில் இரும்புச்சத்து குறைபாட்டைச் சரிசெய்ய பாலக்கீரை சாப்பிடுவார்கள். முழு கீரை வளர்வதற்கு அதிக நேரம் ஆகும், ஆனால் 'பேபி பாலக்' இலைகள் 15-20 நாட்களில் தயாராகிவிடும். சிறிய இடத்தில்கூட இதனை எளிதாக வளர்த்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்களைப் பெறலாம்.
வெந்தயக் கீரை
உங்களது சமையலறையில் இருக்கும் வெந்தய விதைகளைக் கொண்டே எந்தவொரு பருவக்காலத்திலும் வெந்தயக் கீரையை வளர்க்கலாம். விதைகளை மண்ணில் தூவினால் போதும், இரண்டு வாரங்களில் இலைகள் முளைத்துவிடும். அதனை நீங்கள் பறித்துப் பயன்படுத்தலாம். அதற்குத் தினமும் சிறிதளவு தண்ணீர் மற்றும் லேசான சூரிய ஒளி இருந்தால் போதுமானது.
கொத்தமல்லி விதைகள்
இந்தியச் சமையலறைகளில் கொத்தமல்லி விதைகள் கண்டிப்பாக இருக்கும். அந்த விதைகளை லேசாக உடைத்து, தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் மண்ணில் நடுங்கள். 15 நாட்களில் கொத்தமல்லி இலைகள் முளைத்துவிடும். சட்னி செய்யவோ அல்லது உணவை அலங்கரிக்கவோ இதனை எளிதாகப் பயன்படுத்தலாம்.
மைக்ரோகிரீன்ஸ்
காய்கறிகள் வளர நீண்ட நாட்கள் காத்திருக்க விரும்பவில்லை என்றால், மைக்ரோகிரீன்ஸ் ஒரு நல்ல தேர்வாகும். பாசிப்பயறு, வெந்தயம், கடுகு, சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றிலிருந்து 7-15 நாட்களில் மைக்ரோகிரீன்ஸ் தயாராகிவிடும். இதில் ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். விதைகளை ஊற வைத்து, ஈரப்பதமாக வைத்திருந்தாலே போதும், அவை முளைத்துவிடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

