- Home
- Lifestyle
- Bedtime Drinks : இரவு தூக்கம் வரலையா? படுத்தவுடன் தூக்கம் சொக்கிட்டு வர தினமும் இதுல ஒன்னு குடிங்க..!
Bedtime Drinks : இரவு தூக்கம் வரலையா? படுத்தவுடன் தூக்கம் சொக்கிட்டு வர தினமும் இதுல ஒன்னு குடிங்க..!
இரவு தூங்க செல்வதற்கு முன் இந்த பானங்களில் ஒன்றை தினமும் குடிப்பதை பழக்கமாக்கி கொண்டால் நிம்மதியான தூக்கம் வரும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Best Drink Before Bed For Better Sleep
இந்த நவீன காலத்துல பரபரப்பான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை, மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சினைகள் மக்களிடையே நாளுக்கு அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை தான். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் கேஜெட்டுகளுடன் தான் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களது தூக்கம் பெரிதும் பாதிப்படுகிறது. குறைவான தூக்கத்தால் நாள் முழுவதும் சோர்வாகவும், ஆற்றல் இன்றி மனசோர்வுடனும் இருப்பர். மேலும் நீங்கள் தினமும் சரியாக தூங்கவில்லை என்றால் பல உடல் உள்ள பிரச்சனைகள் ஏற்படும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரவு படுத்த உடனே தூக்கம் வருவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை தூங்க செல்வதற்கு முன் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கம் வரும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
சூடான பால்
இரவு படுத்தவுடனே தூக்கம் வருவதற்கு ஒரு கிளாஸ் பால் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் பாலில் இருக்கும் அமினோ அமிலம் செரோடோனின் ஆக மாறி மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தை ஊக்குவிக்கும்.
பாதாம் பால்
பாதாமில் இருக்கும் மெக்னீசியம் தூக்கமின்மையை போக்க உதவும். எனவே தினமும் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் பாதாம் பால் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தூக்கம் சொக்கிட்டு வரும்.
வாழைப்பழம் மற்றும் பாதாம் ஸ்மூத்தி
வாழைப்பழத்தில் மெக்னீசியம், டிரிட்டோபான் மெலடோனின் நிறைந்துள்ளதால், அவை தூக்கமின்மையிலிருந்து நிவாரணம் அளிக்கும். அதுபோல பாதாமில் மெக்னீசியம் நிறைந்துள்ளன. அதுவும் தூக்கமின்மை பிரச்சனையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் பாதாம் மற்றும் வாழைப்பழம் ஸ்மூத்தி குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கெமோமில் டீ
கெமோமில் டீ தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே இரவு நிம்மதியான தூக்கம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.