இன்னும் 17 நாளில் மகர ராசியில் சனி பெயர்ச்சி..இந்த ராசிகளின் காட்டில் அதிர்ஷ்ட மழை பொழியும்! உங்கள் ராசி என்ன
Sani peyarchi 2022 Palangal: மகர ராசியில் அக்டோபர் 22ம் தேதி 2022 ஆம் ஆண்டு நிகழும் சனி பெயர்ச்சியால் குறிப்பிட்ட ராசிகளின் காட்டில் பண மழை பொழிய இருக்கிறது.
ஜோதிடத்தில். கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிகளுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலனும் கிடைக்கும். ஒரு நபரின் ஜாதகம் கிரகங்களின் இயக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சனிபகவானின் அருள் ஒருவருக்கு கிடைப்பது சிறப்பாக கருதப்படுகின்றது. அதன்படி, அக்டோபர் 22ம் தேதி 2022 ஆம் ஆண்டு நிகழும் சனிகிரகத்தின் சஞ்சாரம் காரணமாக, சிலர் இதுவரை அனுபவித்து வந்த ஏழரை நாட்டு சனியின் தாக்கம் மற்றும் சனி தசையின் தாக்கத்திலிருந்து நிவாரணம் பெறலாம். தற்போத ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி கடலில் நீந்தும் ராசிகள் யார் என்பதை பார்ப்போம்.
மேஷம்
இந்த ராசிகளுக்கு மிகவும் அனுகூலமான காலம் ஆகும். உங்கள் சகோதரர்களின் ஒத்துழைப்பு இருக்கும். ஆனால் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நீங்கள் விருப்பமான நபரிடம் ஆடைகள் போன்ற பரிசுகளையும் பெறலாம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். வாழ்வில் செல்வம் பெருகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிகள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பணியிட மாற்றம் சிறப்பாக இருக்கும். தாயாரின் ஆதரவையும் அன்பையும் பெறுவீர்கள். தொழிலில் லாபம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
கன்னி:
உங்களுக்கு தொழிலில் லாபம் கூடும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு யோகம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திடீர் பண வரவு இருக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் வரப்பிரசாதமாக இருக்கும்.