MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Mystery Lake Turkana: காணாமல் போன மனிதர்கள் மட்டும் வாழும் தீவு...உலகின் மர்ம நகரின் விசித்திரம்

Mystery Lake Turkana: காணாமல் போன மனிதர்கள் மட்டும் வாழும் தீவு...உலகின் மர்ம நகரின் விசித்திரம்

கென்யாவின் துருக்கானா ஏரியில் உள்ள என்வைட்டெனட் தீவு, பல மர்மக் கதைகளால் கவனம் பெற்றுள்ளது. அங்கு ஆய்வுக்குச் சென்றவர்களும், வசித்து வந்த பழங்குடியினரும் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவங்கள், இந்தத் தீவை மர்மமான இடமாக மாற்றியுள்ளன.

2 Min read
Author : Priya Velan
Published : Sep 19 2026, 07:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உலகின் மர்ம நகரின் விசித்திரம் :
Image Credit : Getty

உலகின் மர்ம நகரின் விசித்திரம் :

உலகில் மனிதக் காலடிகளே படாத பல ஆபத்தான பகுதிகள் உள்ளன. ஆனால், "ஒரு தீவுக்குச் சென்ற மனிதர்கள் யாருமே திரும்ப வரவில்லை, அங்கு சென்றவர்கள் அனைவரும் மர்மமான முறையில் மறைந்துவிட்டார்கள்" என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கென்யா நாட்டின் துருக்கானா ஏரியின் (Lake Turkana) நடுவே அமைந்திருக்கும் ‘என்வைட்டெனட்’ (Envaitenet Island) என்ற தீவுதான் அந்த அச்சமூட்டும் மர்ம நிலம். உள்ளூர் பழங்குடியினரின் மொழியில் ‘என்வைட்டெனட்’ என்றால் "திரும்பி வர முடியாத தீவு" (Island of No Return) என்று பொருளாகும். மனிதர்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் இந்த மர்மத் தீவின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்களை விரிவாகக் காண்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முழு கிராமமே மர்மமாக மறைந்த அதிர்ச்சி சம்பவம்:
Image Credit : Getty

முழு கிராமமே மர்மமாக மறைந்த அதிர்ச்சி சம்பவம்:

1935-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை இந்தத் தீவில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். அவர்கள் அருகில் உள்ள கரைக்கு வந்து வியாபாரம் செய்வதும் வழக்கம். ஆனால், ஒரு கட்டத்தில் அந்தத் தீவில் இருந்து மக்கள் யாரும் கரைக்கு வரவில்லை.சந்தேகமடைந்த மற்ற பழங்குடியினர் படகுகளில் தீவிற்குச் சென்று பார்த்த போது அங்கிருந்த காட்சிகளைக் கண்டு உறைந்து போயினர். வீடுகள், சமையல் பாத்திரங்கள், மீன்பிடி வலைகள் என அனைத்தும் அப்படியே இருந்தன. ஆனால், அங்கு வாழ்ந்த ஒரு மனிதர் கூட அங்கு இல்லை. உடலங்களோ அல்லது போராட்டத்திற்கான எந்த தடயங்களோ இல்லாமல், ஒரே இரவில் ஒட்டுமொத்தக் கிராம மக்களும் காற்றில் கரைந்தது போல் மறைந்து போயிருந்தனர்.

35
ஆராய்ச்சியாளர்களும் காணாமல் போன அதிசயம் :
Image Credit : Getty

ஆராய்ச்சியாளர்களும் காணாமல் போன அதிசயம் :

1935-ஆம் ஆண்டு விவியன் ஃபூஷ் (Vivian Fuchs) என்ற ஆய்வாளரின் தலைமையிலான பிரிட்டிஷ் ஆய்வுக்குழு இந்த ஏரிப் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொண்டது. அவரோடு வந்த 'மார்டின் ஷெஃப்லிஸ்' மற்றும் 'பில் வைன்-வாட்சன்' ஆகிய இரண்டு முக்கிய ஆராய்ச்சியாளர்கள் இந்த தீவை ஆய்வு செய்ய படகில் சென்றனர்.சில நாட்கள் கடந்தும் அவர்கள் திரும்பாததால், ஹெலிகாப்டர் மற்றும் விமான உதவிகளுடன் தீவு முழுவதும் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால், அவர்களின் உடல்களோ அல்லது அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களோ கிடைக்கவில்லை. அவர்கள் முற்றிலுமாக மறைந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.

45
அறிவியல் சொல்லும் காரணங்கள் என்ன?
Image Credit : Getty

அறிவியல் சொல்லும் காரணங்கள் என்ன?

மனிதர்கள் இப்படி வரிசையாகக் காணாமல் போவதற்குப் பின்னால் உள்ள காரணங்களைக் கண்டறிய பல கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.

நச்சு வாயுக்கள் (Toxic Volcanic Gases): துருக்கானா ஏரி ஒரு எரிமலைப் பகுதியாகும். தீவில் உள்ள பிளவுகளில் இருந்து அவ்வப்போது வெளிப்படும் கண்ணுக்குத் தெரியாத நச்சு வாயுக்கள் அல்லது கார்பன்-டை-ஆக்சைடு, அங்கு செல்லும் மனிதர்களின் மூளையைப் பாதித்து மயக்கமடையச் செய்து, ஏரிக்குள் விழ வைத்திருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மர்ம வெளிச்சமும் மனப்பரப்பளவும்: அங்கு சென்று திரும்ப முயன்ற சிலர், "தீவில் பச்சை நிறத்தில் விசித்திர ஒளி தோன்றுவதாகவும், அது மனிதர்களின் நினைவாற்றலை இழக்கச் செய்து தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதாகவும்" கதைகளாகக் கூறுகின்றனர்.

பயங்கர முதலைகள்: இந்த ஏரி உலகிலேயே அதிக அளவிலான ஆப்பிரிக்க முதலைகள் வாழும் பகுதியாகும். மனிதர்கள் ஏரியின் கரையில் அல்லது தீவின் ஆழத்தில் மாட்டிக் கொள்ளும்போது முதலைகளுக்கு இரையாகியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

55
தடை விதிக்கப்பட்ட தீவு :
Image Credit : Getty

தடை விதிக்கப்பட்ட தீவு :

இன்றும் அந்தத் தீவு முற்றிலும் மனித நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. உள்ளூர் மீனவர்களும் அஞ்சியபடி அந்தத் தீவின் பக்கமே தங்கள் படகுகளைக் கொண்டு செல்வதில்லை. கென்ய அரசு மற்றும் அமைப்புகள் அப்பகுதிக்குச் செல்ல அதிகாரப்பூர்வமற்ற தடைகளை விதித்துள்ளன.காணாமல் போன மனிதர்கள் இறந்துவிட்டார்களா அல்லது அந்தத் தீவின் ஏதேனும் ரகசியப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்ற புதிர் இன்றளவும் விடை தெரியாத மர்மமாகவே தொடர்கிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உலகம்
சுற்றுலா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஸ்டீல் சிங்க்கில் உப்புக் கறை, எண்ணெய் பிசுக்கா? 2 நிமிடத்தில் விரட்டியடிக்க சூப்பர் கிச்சன் டிப்ஸ்!
Recommended image2
Vastu Plants: வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் பணக்கஷ்டம் உறுதி!
Recommended image3
மழைக்கால ஈரப்பதத்தால் சுவரில் உப்பு பூத்து பெயிண்ட் உதிர்கிறதா? கிச்சனில் இருக்கும் இந்த 2 பொருள் போதும்!
Related Stories
Recommended image1
Longyearbyen Norway: இறப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட விசித்திர நகரம்...எங்கு உள்ளது தெரியுமா?
Recommended image2
Mysterious Islands: கூகுள் மேப்பில் மறைக்கப்பட்ட 5 ரகசிய தீவுகள்: மாயமான நிலப்பரப்பு முதல் அணு ஆயுதச் சோதனை வரை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved