MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இங்கு சென்றால் நிச்சயம் மரணம் தான் ஏற்படும்.. இந்தியாவில் பேய் உலவும் இந்த இடங்கள் பற்றி தெரியுமா?

இங்கு சென்றால் நிச்சயம் மரணம் தான் ஏற்படும்.. இந்தியாவில் பேய் உலவும் இந்த இடங்கள் பற்றி தெரியுமா?

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது. இந்தியா அதன் பாரம்பரியத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால் இங்கே சில பயங்கரமான இடங்களும் உள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.  

2 Min read
Author : maria pani
Published : Jan 26 2023, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உணவு, வாழ்க்கை முறைக்கு பிரசித்தி பெற்ற இந்தியா, விசித்திரமான நிகழ்வுகளுக்கு வித்திடும் சில இடங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். ஆனால், அற்புதமான சுற்றுலாத் தலங்களைக் கொண்ட பல பிரபலமற்ற இடங்கள் இந்தியாவில் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகம் முழுவதும் இதுபோன்ற பயங்கரமான இடங்கள் உள்ளன. இது கற்பனை செய்ய முடியாத தீய சக்திகளைக் கொண்டுள்ளது என்று மக்கள் நம்புகிறார்கள். இந்தியாவில் அப்படிப்பட்ட சில இடங்களைப் பற்றி கூறுவோம்.

25

பாங்கர் கோட்டை, ராஜஸ்தான் 

ராஜஸ்தானில் உள்ள பாங்கர் கோட்டை இந்தியாவின் மிகவும் பேய்கள் நிறைந்த இடங்களில் ஒன்றாகும். பங்கர் நகரில் கட்டப்பட்ட கோட்டையைப் பற்றி மக்கள் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். பழங்காலத்தில் இந்த கோட்டை ஒரு தாந்திரீகரால் சபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோட்டை இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் இங்கு செல்ல அச்சப்படுகின்றனர். சூரிய அஸ்தமனத்தின் போது எந்த சுற்றுலாப் பயணிகளும் இந்த இடத்திற்கு செல்ல விரும்புவதில்லை. 

35

அக்ரசென் கி பவுலி, டெல்லி 

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அக்ரசென் கி பவுலியும் இந்தியாவின் பேய் இடங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள கருநீரால் மக்கள் ஹிப்னாடிஸ் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக பலர் நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி, இங்கு விசித்திரமான குரல்கள் கேட்கப்படுவதாகவும் பலர் நம்புகின்றனர். பலருக்கு இங்கு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மசாலா பொடி சீக்கிரமே வண்டு புடிச்சு கெட்டு போகுதா..? ரொம்ப நாள் பயன்படுத்த இதை மட்டும் பண்ணுங்க..

45

தேசிய நூலகம், கொல்கத்தா

அரிய புத்தகங்களுக்கு பெயர் பெற்ற கொல்கத்தா தேசிய நூலகம் திகில் கதைகளுக்கும் பெயர் பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, இந்த நூலகம் இந்தியாவின் கவர்னர் ஜெனரலின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. இங்கு வரும் மக்கள் இந்த இடத்தில் கண்ணுக்கு தெரியாத சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். மேலும், சிலர் இங்கு விசித்திரமான குரல்களைக் கேட்பதாகக் கூறுகின்றனர். அதனால்தான் பல செக்யூரிட்டிகள் இங்கே நைட் ஷிப்ட் செய்ய சம்மதிக்கவில்லை.

முகேஷ் மில்ஸ், மும்பை 

மும்பையின் கொலாபா சாகர் அருகே உள்ள முகேஷ் மில்ஸ் திகில் கதைகளுக்கு பெயர் பெற்றது. பல திரைப்படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. இந்த இடம் பேய் கதைகளுக்கு மிகவும் பிரபலமானது. நடிகை பிபாஷா போஸ் உட்பட பல நடிகர்கள் இந்த இடத்தில் வித்தியாசமான அனுபவங்களை சந்தித்துள்ளனர். 

55

ஜிபி பிளாக், மீரட்

மீரட்டின் கேன்ட் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களாக்களுக்கு இரவும் பகலும் செல்வதை மக்கள் தவிர்க்கின்றனர். 1950ஆம் ஆண்டு முதல் காலியாக உள்ள இந்த பங்களா தற்போது பாழடைந்து கிடக்கிறது. இந்த பங்களாவில் ஒரு பெண் நடமாடுவதை பார்த்ததாக பலர் கூறுகின்றனர். கூடுதலாக, மற்றவர்கள் நான்கு பேர் மெழுகுவர்த்தியுடன் அமர்ந்திருப்பதைக் கண்டனர். இந்த பங்களா தொடர்பான கதைகளால் மக்கள் இங்கு செல்லவே அஞ்சுகின்றனர். கெட்ட செய்திகள் காரணமாக மீரட் நிர்வாகம் அதற்குள் நுழைய தடை விதித்துள்ளது. 

இதையும் படிங்க: சாம்பல் பூசி பிணத்துடன் கொடூரமாக உடலுறவு கொள்ளும் அகோரிகள்.. திகிலூட்டும் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved