MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குழந்தை பிறந்து 6 மாதம் வரை 'தண்ணீர்' கொடுக்காதீங்க.. பலர் தெரியாமல் செய்யும் தவறு!!

குழந்தை பிறந்து 6 மாதம் வரை 'தண்ணீர்' கொடுக்காதீங்க.. பலர் தெரியாமல் செய்யும் தவறு!!

Dangers Of Water For Infants : புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் முடியும் வரை ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது? அப்படி கொடுத்தால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 12 2025, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குழந்தை பிறந்து 6 மாதம் வரை 'தண்ணீர்' கொடுக்காதீங்க.. பலர் தெரியாமல் செய்யும் தவறு!!

குழந்தை பிறந்து 6 மாதம் வரை 'தண்ணீர்' கொடுக்காதீங்க.. பலர் தெரியாமல் செய்யும் தவறு!!

உணவைப் போலவே தண்ணீர் நமக்கு மிகவும் முக்கியம். நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறையும்போது நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். இதன் காரணமாக பல உடல்நல பிரச்சனைகளை வழிவகுக்கும். ஆகவே தான் மருத்துவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அதன்படி ஆண்கள் ஒரு நாளைக்கு 3-4 லிட்டரும், தரும் பெண்கள் 2-3 லிட்டரும், குழந்தைகள் 1-2.5 லிட்டரும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். இதைவிட குறைவாக குடித்தால் உடலில் நீரிழப்புக்கு ஆளாக நேரிடும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆறு மாதம் முடியும் வரை குழந்தைகளுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது?

ஆறு மாதம் முடியும் வரை குழந்தைகளுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது?

இருப்பினும், ஆறு மாதங்களுக்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு இது பொருந்தாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆம், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் முடியும் வரை தண்ணீர் ஒருபோதும் கொடுக்கவே கூடாது. அப்படி புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்தால் என்ன ஆகும்? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

35
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது?

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது?

ஆறு மாதத்திற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதற்கான சில காரணங்களை மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதாவது புதிதாக பிறந்த குழந்தையின் சிறுநீரகங்கள் ஆறு மாதங்கள் வரை முழுமையாக வளர்ச்சி அடையாது. இத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தால் அதிகப்படியான நீர் மற்றும் சோடியம் அவர்களது உடலில் இருந்து நீர் வழியாக வெளியேற்றப்படும். இதனால் குழந்தைகள் கடுமையான உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க: மழை, குளிர்ல கூட குழந்தைகளை ஆரோக்கியமா வைத்திருக்க '5' அட்வைஸ்

45
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்:

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்:

ஆறு மாதத்திற்கும் குறைவாக இருக்கும் குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பதால் சோடியம் குறைபாடு ஏற்படும். இதனால் அவர்களது மூளை செயல்பாடு பாதிக்கப்படும். இது நீண்ட காலத்திற்கு மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது தவிர குழந்தைகளின் முகம், கால் கைகளில் வீக்கம் தோன்றக்கூடும். கூடுதலாக ஊட்டச்சத்து குறைபாடு, மெதுவான வளர்ச்சி, எடை இழுப்பு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவம் கொடுத்தால் முழுச்சத்து கிடைக்கும் தெரியுமா?

55
என்ன கொடுக்கலாம்?

என்ன கொடுக்கலாம்?

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை அல்லது அவர்களுடன் ரொம்பவே சூடாக இருக்கும்போது ஒரு ஸ்பூனில் சிறிது தண்ணீர் கொடுக்கலாம். இருப்பினும், மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு தான் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Growing Garlic: வீட்டில் பூண்டு வளர்ப்பது எப்படி? ரொம்ப ஈஸி தெரியுமா?
Recommended image2
Aadi Amavasai: முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க இந்த விஷயங்களை செய்யுங்க..! பலரும் அறியாத ரகசியம்
Recommended image3
kanchipuram temple idli : காஞ்சிபுரம் இட்லி...அதே பாரம்பரிய சுவையில் நம்ம வீட்டில் ஈஸியா எப்படி செய்யலாம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved