MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பெண்கள் தினமும் இதை செஞ்சாலே போதும்: தொலைந்துபோன லட்சுமியின் அருள் வீட்டில் நிரந்தரமா கிடைச்சிடும்

பெண்கள் தினமும் இதை செஞ்சாலே போதும்: தொலைந்துபோன லட்சுமியின் அருள் வீட்டில் நிரந்தரமா கிடைச்சிடும்

பெண்கள் தினமும் தலையில் பூ சூட்டுவதால் ஏற்படும் அறிவியல் பூர்வமான மற்றும் ஆன்மீக ரீதியிலான காரணங்களை இங்கு பார்த்து தெரிந்து கொள்வோம்.

2 Min read
Velmurugan s
Published : Sep 20 2024, 08:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பொதுவாக நம் வீட்டு பெண்கள், தலையில் பூ சூட்டிக் கொண்டு, நெற்றியில் குங்குமம் இட்டு வந்தால், மகாலட்சுமியின் மறு உருவம் என்று தான் கூறுவோம். சில பெண்களை பார்த்தவுடனே நல்ல லட்சுமி கடாச்சம் நிறைந்திருக்கும்.இதனால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். நல்ல அழகான பெண்களை திருமணம் செய்து வீட்டில் கூட்டி வரும் போது மகாலட்சுமி போல இருக்கிறாள் என்றும் கூறுவார்கள்.

25

ஆனால், இன்றைய நவநாகரீக உலகில் மூழ்கி போய் விட்டோம். இதனால்,  தலையில் பூ சூடி கொள்வது, நெற்றியில் குங்குமம் இடுவது போன்றவை ஓல்டு பேஷன் ஆகி விட்டது.  தற்போது பெரும்பாலான பெண்கள் தலையில் பூ சூடிக் கொள்வதே இல்லை. ஏன் தலைமுடியை தலைவாறி பின்னுவது கூட இல்லை. தலைவிரி கோலம் என்று சொல்லப்பட்ட லூஸ் கேர் தற்போது பேஷனாக மாறிப்போய் விட்டது. 

35

இதனால் வீட்டிற்கு நல்லது இல்லை, வீட்டில் தரித்திரம் தாண்டவமாடும். நீங்கள் தலை முடியை இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு எப்படி வேண்டுமென்றாலும் சீவிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் எப்படி வாரினாலும் தலையில் ஒரு கொத்து பூவாவது வைக்க வேண்டும். இதை ஆன்மீக ரீதியாக பார்க்காமல், அறிவியல் ரீதியாகவும் பெண்கள் தலையில் பூ வைப்பதில் நன்மை இருக்கிறது என கூறியிருக்கிறார்கள். 

45

தலையில் பூ வைப்பதென்றால் பின் மண்டை, கழுத்து அருகே தான் வைக்க வேண்டும். ஏனென்றால் அங்கு தான் கூம்பு சுரப்பி (Pineal gland) இருக்கிறது. இது நாம் தலையில் பூ வைக்கும் போது அந்த பூவின் மனமானது, இந்த சுரப்பியின் வழியாக நம் உடலுக்குள் சென்று நம் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும், வைத்திருக்கும்.

55

ஆகையால் தான் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பெண்கள் கட்டாயமாக தலையில் பூ சூடிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். இது பெண்களின் மன உளைச்சலை பெருமளவு குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அறிவியல் பூர்வமான உண்மை. 

ஆனால் ஆன்மீகத்தில் இந்த மலர்களை தலையில் தினமும் சூடி கொள்வதால் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்றாலே போதும். மகாலட்சுமி அருள் கிடைத்தது என்றாலே நம் வாழ்க்கை அத்தனை சௌபாக்கியங்களும் கிடைத்தது என்று அர்த்தம். அதுவும் வாசனை மிகுந்த மலர்களான மல்லிகை, ரோஸ் போன்றவை இருந்தால் மிகவும் நல்லது. 

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
தமிழ் செய்திகள்
பாரம்பரியம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved