MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • போடு... அடிச்சது அதிர்ஷ்டம்... 8 வைரங்களைக் கண்டெடுத்த பெண் தொழிலாளி!

போடு... அடிச்சது அதிர்ஷ்டம்... 8 வைரங்களைக் கண்டெடுத்த பெண் தொழிலாளி!

Diamonds: மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்ட சுரங்கத்தில் பணிபுரியும் ரச்னா கோல்டார் என்ற பெண், 2.53 காரட் எடையுள்ள எட்டு வைரக் கற்களைக் கண்டெடுத்துள்ளார். வைரம் ஏலம் மூலம் கிடைக்கும் லட்சக்கணக்கான ரூபாய் அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

1 Min read
Author : SG Balan
Published : Sep 21 2025, 09:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பெண் கண்டெடுத்த வைரம்
Image Credit : Getty

பெண் கண்டெடுத்த வைரம்

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், ஒரு பெண் தொழிலாளி, தான் வேலை செய்யும் சுரங்கத்தில் எட்டு வைரக் கற்களைக் கண்டெடுத்துள்ளார். இந்த வைரங்களின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

24
பன்னாவில் தங்கச் சுரங்கம்
Image Credit : Getty

பன்னாவில் தங்கச் சுரங்கம்

பன்னா மாவட்டத்தில் உள்ள ஹசாரா முடா பகுதியில் ரச்னா கோல்டார் என்ற 50 வயது பெண், சுரங்கத்தில் வேலை செய்யும் போது இந்த வைரங்களைக் கண்டெடுத்துள்ளார்.

மொத்தம் 2.53 காரட் எடையுள்ள எட்டு வைரங்கள் அவருக்குக் கிடைத்துள்ளன. இவற்றில் ஆறு வைரங்கள் உயர்தரமானவை. இவற்றில் மிகப்பெரிய வைரத்தின் எடை 0.79 காரட். 

Related Articles

Related image1
கர்னூல் வைர வேட்டை: ஆந்திராவில் முதல் மழைக்குப் பின் வயலில் வைரம்!!
Related image2
உலகின் டாப் 10 மிகப்பெரிய வைரச் சுரங்கங்கள்!
34
ஏலம் விடப்படும் வைரங்கள்
Image Credit : stockphoto

ஏலம் விடப்படும் வைரங்கள்

ரச்னாவால் கண்டெடுக்கப்பட்ட வைரங்கள் மாவட்ட வைர அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் ஏலத்திற்கு விடப்படும். இதன் மூலம் ரச்னா கோல்டாருக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏல வருமானத்தில் 11% ராயல்டி மற்றும் 1% TDS உள்பட மொத்தம் 12% தொகையை அரசு வரியாக கழித்துக்கொள்ளும். மீதமுள்ள தொகை ரச்னாவுக்கு வழங்கப்படும்.

44
வைரச் சுரங்கம் குத்தகை
Image Credit : Getty

வைரச் சுரங்கம் குத்தகை

ரச்னா கோல்டார், மூன்று குழந்தைகளின் தாய் ஆவார். இவர் தனது நிதிநிலையை மேம்படுத்தும் நம்பிக்கையுடன் சுரங்கப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பன்னாவில், எட்டு மீட்டர் சுரங்க நிலத்தை ரூ.200 செலுத்தி ஓர் ஆண்டுக்கு குத்தகைக்கு எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கண்டெடுக்கப்படும் வைரங்களுக்கான ஏலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். ரச்னா கண்டெடுத்த வைரங்கள் அவரது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்த உள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Related Stories
Recommended image1
கர்னூல் வைர வேட்டை: ஆந்திராவில் முதல் மழைக்குப் பின் வயலில் வைரம்!!
Recommended image2
உலகின் டாப் 10 மிகப்பெரிய வைரச் சுரங்கங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved