MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மனிதர்களை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை! அதிரடி முடிவெடுத்த அரசு! மக்கள் வரவேற்பு!

மனிதர்களை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை! அதிரடி முடிவெடுத்த அரசு! மக்கள் வரவேற்பு!

உத்தரபிரதேசத்தில் மனிதர்களை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று அந்த மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

2 Min read
Rayar r
Published : Sep 17 2025, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தெரு நாய்களின் தொல்லை
Image Credit : Asianet News

தெரு நாய்களின் தொல்லை

இந்தியா முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தெரு நாய்களால் பாதிப்புக்குள்ளாகாத இடங்களே இல்லை எனலாம். குழந்தைகள், பெண்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டிக் கடிக்கின்றன. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலைக்கு செல்பவர்கள் நிம்மதியாக வீடு திரும்ப முடியவில்லை.

24
உத்தரபிரதேசத்தில் நாய்களின் அட்டூழியம்
Image Credit : X

உத்தரபிரதேசத்தில் நாய்களின் அட்டூழியம்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்திலும் இதே கதை தான். அங்கு குழந்தைகளை தெரு நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன. இந்நிலையில், மனிதர்களை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதாவது ஒருவரை முதன் முதலாக ஒரு தெரு நாய் கடித்தால் அந்த நாய்க்கு கருத்தடை செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.

தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை

பின்பு அந்த நாயின் உடலில் மைக்ரோ சிப் பொருத்தப்படு தெருவில் விடப்படும். தொடர்ந்து அந்த நாய் எந்தவித தூண்டுதலும் இன்றி ஒரு மனிதரை இரண்டாவது முறையாக அடித்தால் அந்த நாய் சிறை பிடிக்கப்பட்டு காப்பத்தில் கொண்டு அடைக்கப்படும். வாழ்நாள் முழுவதும் அந்த நாய் காப்பகத்தில் தான் இருக்கும். வெளியே விடப்பட மாட்டாது.

Related Articles

Related image1
நாய் பிரியர்களின் வயிற்றில் பாலை வார்த்த உச்சநீதிமன்றம்..! தெரு நாய்கள் விவகாரத்தில் முக்கிய தீர்ப்பு..!
Related image2
தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுமி பலி! நாய்களுக்கு சப்போர்ட் செய்தவர்களை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
34
கண்காணிப்பு குழு அமைக்கப்படும்
Image Credit : AI Generated image

கண்காணிப்பு குழு அமைக்கப்படும்

அதே வேளையில் யாராவாது கல்லை தூக்கி எறிந்து ஒரு நாய் அவரை கடித்தால் அது தெரு நாய் கடியாக கருதப்பட மாட்டாது. இது தொடர்பான உத்தரவை முதன்மை செயலாளர் அம்ரித் அபிஜத் பிறப்பித்துள்ளார். உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்த மாநில மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

ஆக்ரோஷமான நாய்களை கண்காணிக்க ஒரு கால்நடை மருத்துவர், விலங்குகள் குறித்து அனுபவம் உள்ள ஒருவர் மற்றும் நாய்களின் நடத்தையைப் புரிந்துகொண்ட ஒருவர் மற்றும் நகராட்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

44
தமிழகத்திலும் ஏதாவது திட்டம் வருமா?
Image Credit : Getty

தமிழகத்திலும் ஏதாவது திட்டம் வருமா?

இந்த குழுவினர் மனிதர்களை கடிக்கும் நாய்களை கண்டறிந்து அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுதல், கருத்தடை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் அந்த நாய் எந்தவித தூண்டுதலும் இன்றி ஒருவரை கடித்ததா? இல்லை மனிதர்கள் தொந்தரவு செய்ததால் கடித்ததா? என்பதை கண்டறிவார்கள் என்று உத்தரபிரதேச அரசு கூறியுள்ளது. இது தெரு நாய்க்கடி சம்பவங்களை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தை போல் தமிழ்நாட்டில் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஏதாவது திட்டம் வகுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
நாய்கள்
இந்தியா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved