MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஆளுநர் வெறும் தபால்காரர் அல்ல... உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஆளுநர் வெறும் தபால்காரர் அல்ல... உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மசோதா விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஜனாதிபதியின் கேள்விகள் குறித்து நீதிபதிகள் விசாரணை நடத்தினர். ஆளுநரின் அதிகாரம், மாநில அரசுகளின் சட்டமியற்றும் உரிமை குறித்த விவாதம் எழுந்தது.

1 Min read
SG Balan
Published : Aug 20 2025, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு ஜனாதிபதியின் கேள்வி
Image Credit : social media

ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு - ஜனாதிபதியின் கேள்வி

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மசோதா விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

24
உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு
Image Credit : Asianet News

உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு

முன்னதாக, ஆளுநர்கள் நிலுவையில் வைத்திருக்கும் மசோதாக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8-ம் தேதி வழங்கிய தீர்ப்பை அடுத்து, குடியரசுத் தலைவர் சில கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இன்றைய விசாரணையின்போது, நீதிபதிகள், "ஜனாதிபதி சில கேள்விகளுக்கு ஆலோசனை கேட்டிருக்கும்போது, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், "நாங்கள் ஜனாதிபதியின் கேள்விகளை மட்டுமே விசாரிக்கிறோம், ஏற்கனவே அளித்த தீர்ப்பை மாற்ற மாட்டோம், வெறும் ஆலோசனை மட்டுமே வழங்குவோம்" என்று தெளிவுபடுத்தினர்.

Related Articles

Related image1
ஆளுநருக்கு எதிரான தீர்ப்பை மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் விளக்கம்
Related image2
ஆளுநர் ஒரு தபால்காரர், பச்சையாக பாஜக காரராகவே செயல்படுகிறார்- விளாசும் ஸ்டாலின்
34
ஆளுநரின் அதிகாரம் - மத்திய அரசின் வாதம்
Image Credit : Asianet News

ஆளுநரின் அதிகாரம் - மத்திய அரசின் வாதம்

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஒரு மசோதா அனுப்பப்பட்டால், அது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநர் ஒரு தபால்காரர் அல்ல" என்று வாதிட்டார்.

மத்திய அரசின் வாதத்திற்குப் பதிலளித்த நீதிபதிகள், "ஒரு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் அது செயல் இழந்துவிடும் என்று கூறுவதை ஏற்க முடியாது. இது, பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, ஆளுநரின் விருப்பப்படிதான் செயல்படும் என்ற நிலையை உருவாக்கும்" என்று கருத்து தெரிவித்தனர்.

44
மாநில அரசுகளின் சட்டம் இயற்றும் உரிமை
Image Credit : our own

மாநில அரசுகளின் சட்டம் இயற்றும் உரிமை

இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் மாநில அரசுகளின் சட்டம் இயற்றும் உரிமைகள் பற்றிய முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
உச்ச நீதிமன்றம்
இந்தியா
ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved