MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Sugar Price : சர்க்கரை வாங்குறதுக்கும் கட்டுப்பாடா? இனி சர்க்கரை இல்லாமல் வாழப் பழகணும் போல!

Sugar Price : சர்க்கரை வாங்குறதுக்கும் கட்டுப்பாடா? இனி சர்க்கரை இல்லாமல் வாழப் பழகணும் போல!

Sugar Price : சர்க்கரை விலை உயர்ந்து வரும் நிலையில் ஸெப்டோ, ப்ளிங்கிட், இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட சில ஆன்லைன் தளங்களில் சர்க்கரை வாங்குவதற்கும் அளவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் என்ன காரணம்? உண்மையிலேயே சர்க்கரை தட்டுப்பாடா?

3 Min read
Author : Arun Mozhi Varman
Published : Aug 27 2026, 01:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சர்க்கரை வாங்குறதுக்கும் கட்டுப்பாடா?
Image Credit : Chatgpt

சர்க்கரை வாங்குறதுக்கும் கட்டுப்பாடா?

காய்கறி, பால், மளிகைப் பொருட்கள் என வீட்டுக்குத் தேவையான எல்லாவற்றையும் சில நிமிடங்களில் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் உடனடி மளிகைப் பொருள் விநியோக செயலிகளில் இப்போது சர்க்கரையை மட்டும் தேவையான அளவு வாங்க முடியாத நிலை சில இடங்களில் ஏற்பட்டுள்ளது.

ஸெப்டோ, ப்ளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட தளங்களில் குறிப்பிட்ட சர்க்கரைப் பொருட்களுக்கு எத்தனை பொட்டலங்கள் வாங்கலாம் என்பதற்கு வரம்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு எந்தப் பொருளை வாங்குகிறோம், எந்தத் தளத்தைப் பயன்படுத்துகிறோம், எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது.

இதனால், “சர்க்கரை வாங்குவதற்கே இப்படி ஒரு கட்டுப்பாடா?” என்ற கேள்வி இப்போது பலருக்கும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : I Nobody OTT : ஒரு வங்கிக் கொள்ளை.. ஒரே இரவில் குற்றவாளியான சாதாரண மனிதன்! மிரட்டலான த்ரில்லர்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஒருவருக்கு எவ்வளவு சர்க்கரை?
Image Credit : Asianet News

ஒருவருக்கு எவ்வளவு சர்க்கரை?

இந்தக் கட்டுப்பாடு எல்லா சர்க்கரைப் பொருட்களுக்கும் ஒரே மாதிரி இல்லை. உதாரணமாக, சில ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் பட்டியல்களில் 1 கிலோ சர்க்கரைப் பொட்டலங்களை குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மட்டுமே ஆர்டர் செய்ய முடிகிறது.

ப்ளிங்கிட் செயலியில் சில பொருட்களுக்கு 2 கிலோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொட்டலங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஸெப்டோவிலும் சில சர்க்கரைப் பொருட்களுக்கு வாங்கும் அளவுக்கு வரம்பு காட்டப்படுகிறது.

நேரடியாகக் கடைகளுக்குச் சென்றாலும் சில இடங்களில் இதே நிலைதான். டிமார்ட், ரிலையன்ஸ் போன்ற பெரிய விற்பனைக் கடைகளில் சில கிளைகளில் ஒரு வாடிக்கையாளருக்கு சுமார் 2 முதல் 3 கிலோ வரை மட்டுமே வாங்க அனுமதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, இது “சர்க்கரை விற்கக்கூடாது” என்ற தடை இல்லை; ஒரே நேரத்தில் அதிகமாக வாங்குவதற்கான கட்டுப்பாடு.

இதையும் படிங்க : Family Series : குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய 5 அழகான வெப் சீரிஸ்கள்!

Related Articles

Related image1
Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!
Related image2
Food Delivery : தப்பா வந்த ஃபுட் ஆர்டர்! கஸ்டமருக்கு கிடைத்த ₹10,520! என்ன நடந்தது?
35
சர்க்கரை விலை ஏன் இப்படி ஏறுது?
Image Credit : gemini

சர்க்கரை விலை ஏன் இப்படி ஏறுது?

இதற்கு ஒரே ஒரு காரணம் கிடையாது. எதிர்பார்த்த அளவுக்கு சர்க்கரை உற்பத்தி இல்லாதது, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவை, கரும்புப் பயிரை பாதித்த நோய்கள் மற்றும் அதிக மழையால் ஏற்பட்ட நீர்த்தேக்கம், சர்வதேச அளவில் சர்க்கரை விநியோகத்தில் ஏற்பட்ட இறுக்கம் ஆகியவை விலை உயர்வுக்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன.

மேலும், ஊகத்தின் அடிப்படையில் அதிகமாக வாங்குவதும், சர்க்கரையைப் பதுக்கி வைப்பதும் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனால், பண்டிகைக் காலத்துக்கு முன்பே மக்கள் அதிக அளவில் சர்க்கரையை வாங்கி வைத்துக்கொள்ளத் தொடங்கினால், சந்தையில் தற்காலிக அழுத்தம் மேலும் அதிகரிக்கலாம்.

சமீபத்திய அரசு தரவின்படி, ஆகஸ்ட் 26 அன்று இந்தியாவின் சராசரி சில்லறை சர்க்கரை விலை கிலோ ரூ.65.05 ஆக உயர்ந்தது. அதற்கு முந்தைய நாள் இது ரூ.63.97 ஆக இருந்தது.

இதையும் படிங்க : Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!

45
உண்மையிலேயே சர்க்கரை தட்டுப்பாடா?
Image Credit : Getty

உண்மையிலேயே சர்க்கரை தட்டுப்பாடா?

இதுதான் இப்போது தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.

இந்தியாவில் சர்க்கரையே இல்லை என்ற நிலை தற்போது இல்லை. பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவையைச் சமாளிக்க போதுமான சர்க்கரை கையிருப்பு இருப்பதாகவும், தற்போதைய விலை ஏற்றத்தில் ஊகத்தின் அடிப்படையிலான அதிகப்படியான கொள்முதல் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் சர்க்கரைத் துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், சந்தையில் திடீரென அதிகமாக வாங்கிக் குவிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக சில ஆன்லைன் விநியோகத் தளங்களும் கடைகளும் வாங்கும் அளவுக்கு வரம்புகளை வைத்திருக்கின்றன.

எனவே, “சர்க்கரை தட்டுப்பாடு வந்துவிட்டது; உடனே வாங்கி வீட்டில் பதுக்கி வையுங்கள்” என்ற முடிவுக்கு வருவது சரியல்ல.

இதையும் படிங்க : Hindu Wedding : தாலிக்கு 3 முடிச்சு போடுறது ஏன்? இதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா?

55
அரசு என்ன செய்யுது? விலை குறையுமா?
Image Credit : freepik

அரசு என்ன செய்யுது? விலை குறையுமா?

சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 10 லட்சம் டன் மூலச் சர்க்கரையை வரியில்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்க்கரை விற்பனையாளர்களுக்கு 400 டன் கையிருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. பதுக்கலைத் தடுக்க சர்க்கரை ஆலைகளில் உள்ள கையிருப்புகளைச் சரிபார்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுமட்டுமின்றி, சுமார் 3 முதல் 3.5 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஏற்கனவே இந்திய சுத்திகரிப்பாளர்களிடம் இருப்பதாகவும், அதை உள்நாட்டு சந்தைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சந்தையில் சர்க்கரை கிடைப்பது அதிகரித்து, விலை அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

அதனால் இப்போதைக்கு “சர்க்கரை இல்லாமல் வாழப் பழகணும்!” என்ற அளவுக்கு நிலைமை இல்லை. ஆனால் பண்டிகைக் காலத்தில் விலையும், கிடைக்கும் அளவும் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது.

இதையும் படிங்க : Nepal Flood : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்.. கடைசி நேரத்தில் கைகொடுத்த மாமரக் கிளை!

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nepal Flood : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைகள்.. உயிரை காப்பாற்ற நடந்த நெஞ்சை பதற வைக்கும் மீட்பு!
Recommended image2
Financial Rules: செப்டம்பர் 1 முதல் மாறும் விதிகள்: உங்கள் பணப் பரிவர்த்தனைகளில் என்னென்ன மாற்றங்கள்?
Recommended image3
Nepal Flood: கைலாஷ் பாதை துண்டிப்பு, 105 இந்தியர்கள் மாயம்! ரசுவா துயரம் பற்றி முழு விவரம்
Related Stories
Recommended image1
Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!
Recommended image2
Food Delivery : தப்பா வந்த ஃபுட் ஆர்டர்! கஸ்டமருக்கு கிடைத்த ₹10,520! என்ன நடந்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved