MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மூத்த குடிமக்களுக்கு ரயிலில் இவ்வளவு வசதிகள் இருக்கா? பலருக்கும் இது தெரியாது!

மூத்த குடிமக்களுக்கு ரயிலில் இவ்வளவு வசதிகள் இருக்கா? பலருக்கும் இது தெரியாது!

இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பல சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Nov 11 2024, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Special Trains

Special Trains

இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்திய ரயில்வே விதிகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 58 வயதுடைய பெண்களும் மூத்த குடிமக்கள் பிரிவின் கீழ் வருகிறார்கள். அஞ்சல், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் பொருந்தும் அனைத்து ரயில் வகுப்புகளிலும் கட்டணத்தில் சலுகைகளை பெற்று வந்தனர். மூத்த குடிமக்களின் ஆண்களுக்கு 40% தள்ளுபடியும், பெண்களுக்கு 50% தள்ளுபடியும் வழங்கப்பட்டது.

இருப்பினும், கொரோனா காலக்கட்டத்தில் போது இந்த தள்ளுபடி நிறுத்தப்பட்டது. இந்த தள்ளுபடி எப்போது மீண்டும் தொடங்கப்படும் என்பது குறித்து உறுதியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. சரி, மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே வழங்கும் சில சலுகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

25

லோயர் பெர்த் கிடைக்கும்

இந்திய ரயில்வேயில் இரண்டு வகையான ரயில் பெட்டிகள் உள்ளன: முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாதது. மூத்த குடிமக்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வாங்கும் போது அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் லோயர் பெர்த் படுக்கைகள் வழங்கப்படும். அதேபோல, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் தானாகவே கீழ் படுக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த முன்னுரிமை சீட்களின் இருப்பைப் பொறுத்து மாறுபடும்.

35

மூத்த குடிமக்களுக்கு பெர்த்

இந்திய ரயில்வேயின் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன, அதில் சில பெர்த்கள் மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஸ்லீப்பர் கோச்களில், ஒவ்வொரு பெட்டியிலும் 6 லோயர் பெர்த்கள் மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்குகளில், அத்தகைய நபர்களுக்கு மூன்று லோயர் பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் இந்த பெர்த்தில் அமரலாம். ராஜ்தானி மற்றும் துரந்தோ போன்ற முழு ஏசி ரயில்களில் சாதாரண மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

45

உள்ளூர் ரயில்களிலும் முன்பதிவு 

ரயில்வே புறநகர் அல்லது லோக்கல் ரயில்கள் நாட்டின் சில நகரங்களில் பிரபலமானவை. உதாரணமாக, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் புறநகர் ரயில்கள் இயங்குகின்றன. மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே மும்பையில் உள்ளூர் ரயில்களை இயக்குகின்றன. இந்த இரண்டு மண்டல ரயில்வேயின் உள்ளூர் ரயில்களில் சில இருக்கைகள் மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் ஒரு சில பெட்டிகள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களான பெண்களும் அதே பெட்டிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

55

ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகள்

நாட்டின் பெரும்பாலான முக்கிய நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கான சக்கர நாற்காலிகள் உள்ளன. நீங்கள் சக்கர நாற்காலியை சம்பந்தப்பட்ட நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது ஸ்டேஷன் மேனேஜரிடம் கேட்கலாம். அவர் உங்களுக்கு ஒரு போர்ட்டருடன் சக்கர நாற்காலியை வழங்குவார். இருப்பினும், நீங்கள் போர்ட்டருக்கு பணம் செலுத்த வேண்டும். ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம். இதற்கு www.irctc.co.in என்ற இணையதளத்தில் உள்நுழையலாம்.

லோயர் பெர்த்தை ரயில்களிலும் பெறலாம்

ஒரு மூத்த குடிமகன் ரயில் முன்பதிவின் போது லோயர் பெர்த்தை பெறத் தவறினால், அவர் பயணத்தின் போது லோயர் பெர்த்தை பெறலாம். ரயில்வே விதிகளின்படி, ரயில் புறப்பட்ட பிறகு, லோயர் பெர்த் காலியாக இருந்தால், மிடில் அல்லது மேல் பெர்த் கொண்ட மூத்த குடிமக்கள் TTE-யை அணுகலாம். அவர்கள் TTE யிடம் லோயர் பெர்த்தை கோரலாம், அவர் சில நடைமுறைகளை முடித்த பின் லோயர் பெர்த்தை வழங்குவார். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
இந்திய இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved