MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • விழிப்புணர்வு இல்லேன்னா எல்லாமே வேஸ்ட்! தலைமை நீதிபதி கவாய் திட்டவட்டம்

விழிப்புணர்வு இல்லேன்னா எல்லாமே வேஸ்ட்! தலைமை நீதிபதி கவாய் திட்டவட்டம்

இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், மக்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். அனைத்து சமூகங்களும் இணக்கமாக வாழ்ந்த பழைய காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி கவாய் கேட்டுக்கொண்டார்.

1 Min read
SG Balan
Published : Jul 27 2025, 07:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
Image Credit : social media

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

விழிப்புணர்வு இல்லாவிட்டால் உரிமைகள் இருந்தும் பயனில்லை என இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறியுளாளர். மக்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இன்று, ஞாயிற்றுக்கிழமை, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA - நல்சா) வட மண்டல மாநாட்டில் உரையாற்றிய தலைமை நீதிபதி கவாய், கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்து, அனைத்து சமூகங்களும் இணக்கமாக வாழ்ந்த பழைய காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

24
உரிமைகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்
Image Credit : ANI

உரிமைகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்

"நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இணைந்து நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த திசையில்தான் நல்சா செயல்படுகிறது. நாட்டின் தொலைதூரப் பகுதிகளான லடாக், வடகிழக்கு அல்லது ராஜஸ்தான் என எங்கிருந்தாலும் நல்சாவின் பணிகளை கொண்டு செல்ல நாங்கள் முயற்சிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பற்றிய அறிவு அவசியம் என்றும் அது இல்லாவிட்டால், உரிமைகள் இருந்தாலும் எந்த பயனும் இல்லை என்றும் தலைமை நீதிபதி கவாய் குறிப்பிட்டார்.

Related Articles

Related image1
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மருத்துவமனையில் அனுமதி
Related image2
ராஜீவ் காந்தி வழக்கில் ஆறு பேரை விடுவித்தவர் தான் புதிய தலைமை நீதிபதி கவாய்
34
தவறுகளை சரிசெய்ய உழைக்க வேண்டும்
Image Credit : ANI

தவறுகளை சரிசெய்ய உழைக்க வேண்டும்

கடந்த 35 ஆண்டுகளாக காஷ்மீரில் நிலவி வரும் சூழ்நிலையை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, "தவறுகள் நிகழ்ந்துள்ளன, ஆனால் இவற்றை நீக்க நாம் உழைக்க வேண்டும்.” என்றார்.

“இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக வாழ்ந்த பாரம்பரியம் கொண்ட காஷ்மீரை மீண்டும் கட்டியெழுப்ப இந்த நிகழ்ச்சி உதவும் என்று நான் நம்புகிறேன்" எனவும் அவர் தெரிவித்தார்.

44
அம்பேத்கர் நிலைநாட்டிய நீதி
Image Credit : X

அம்பேத்கர் நிலைநாட்டிய நீதி

டாக்டர் பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர் 'ஒரு நபர், ஒரு வாக்கு' மூலம் அரசியல் நீதியைக் கொண்டுவந்தார் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். சமூகப் பிரிவினைகள் பற்றியும் அவற்றை சரிசெய்வதில் உள்ள சிரமங்கள் குறித்தும் அவர் பேசினார் என்பதையும் தலைமை நீதிமதி நினைவுகூர்ந்தார்.

லடாக், காஷ்மீர் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளின் வழக்கறிஞர் பிரதிநிதிகள் எழுப்பிய பிரச்சினைகள் குறித்துப் பேசிய தலைமை நீதிபதி கவாய், அவற்றை நேரடியாகத் தீர்க்க தனக்கு அதிகாரம் இல்லை என்றாலும், கொலீஜியம் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிப்பேன் என்று உறுதியளித்தார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
உச்ச நீதிமன்றம்
ஜம்மு காஷ்மீர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved