MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இங்கிலாந்து, மாலத்தீவுக்கு பறக்கும் பிரதமர் மோடி! மெகா டீல் கையெழுத்தாகுமா?

இங்கிலாந்து, மாலத்தீவுக்கு பறக்கும் பிரதமர் மோடி! மெகா டீல் கையெழுத்தாகுமா?

பிரதமர் மோடி ஜூலை 23 முதல் 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இங்கிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் மாலத்தீவுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்கள்.

2 Min read
SG Balan
Published : Jul 19 2025, 05:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிரதமர் மோடியின் அடுத்த வெளிநாட்டுப் பயணம்
Image Credit : X-DD News

பிரதமர் மோடியின் அடுத்த வெளிநாட்டுப் பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜூலை 23 முதல் 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு முக்கியப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக 'இந்தியா டுடே' செய்தி வெளியிட்டுள்ளது.

25
பிரதமர் மோடியின் இங்கிலாந்து பயணம்
Image Credit : Getty

பிரதமர் மோடியின் இங்கிலாந்து பயணம்

மோடியின் இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக, ஜூலை 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் இங்கிலாந்துக்குச் செல்கிறார். அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 120 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்குவதை இலக்காகக் கொண்டது.

உலகின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பெரிய பொருளாதாரங்களான இந்தியாவும் இங்கிலாந்தும் மூன்று வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய உள்ளன. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, இந்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே இது நடைமுறைக்கு வரும். முழுமையாக நடைமுறைப்படுத்த சுமார் ஒரு வருடம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான பிறகு தமிழகம் வரும் பிரதமர் மோடி! எப்போது? என்ன காரணம்?
Related image2
5 நாடுகளில் 8 நாட்கள்: நாளை தொடங்குகிறது பிரதமர் மோடியின் நீண்ட பயணம்!
35
பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம்
Image Credit : ANI

பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம்

ஜூலை 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி மாலத்தீவுக்குச் செல்கிறார். அங்கு அந்நாட்டின் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் அவர் தலைமை விருந்தினராக பங்கேற்பார்.

சமீபத்தில் "இந்தியா அவுட்" என்ற பிரச்சாரத்தால் இந்தியா-மாலத்தீவு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதட்டங்களுக்குப் பிறகு, முதல் முறையாக மோடி மாலத்தீவு செல்வதாக இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபரில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு வந்தார். அப்போது இந்தியாவுக்கு மாலத்தீவுக்கும் இடையிலான நட்புறவு பொதுவான நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியா எப்போதும் மாலத்தீவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக இருந்துவருகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மறுசீரமைக்கவும் வலுப்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

45
இந்தியாவின் மானிய உதவி
Image Credit : Getty

இந்தியாவின் மானிய உதவி

முன்னதாக மே மாதத்தில், இந்தியாவின் மானியத்துடன், மாலத்தீவில் படகு சேவைகளை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், சமூக வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்தியா 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இத்திட்டத்திற்காக 100 மில்லியன் மாலத்தீவு ரூபாய் (MVR) மதிப்பிலான மானியத் தொகையை வழங்குவதாக இந்தியா கூறியுள்ளது.

மாலத்தீவு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடாகும். 'சாகர்' (SAGAR) மற்றும் இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' அளிக்கும் கொள்கைகளில் மாலத்தீவுக்கு சிறப்பிடம் பெற்றுள்ளது.

55
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
Image Credit : X-Narendra Modi

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

முன்னதாக ஜனவரியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மாலத்தீவு இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையில் சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளதாக வலியுறுத்தியிருந்தார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையையும் செழிப்பையும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையை இந்தியா வகுத்துள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
நரேந்திர மோடி
வர்த்தகம்
இந்தியா
உலகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved