MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • சர்வ நாசம் செய்த உத்தரகண்ட் வெள்ளம்... பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்

சர்வ நாசம் செய்த உத்தரகண்ட் வெள்ளம்... பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்

உத்தரகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : SG Balan
Published : Aug 05 2025, 05:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பிரதமர் மோடி இரங்கல்
Image Credit : Asianet News

பிரதமர் மோடி இரங்கல்

உத்தரகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இந்த மேக வெடிப்பு நிகழ்ந்தது. இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

"உத்தரகாசியின் தராலியில் ஏற்பட்ட இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் இருக்கப் பிரார்த்திக்கிறேன்," என்று பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

நிலைமை குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநில அரசின் மேற்பார்வையில், நிவாரணம் மற்றும் மீட்புக் குழுக்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன என்றும், மக்களுக்கு உதவி செய்வதில் எந்தக் குறையும் வைக்கப்படாது என்றும் உறுதியளித்தார்.

23
உத்தரகண்ட் வெள்ளத்தில் 4 பேர் பலி, 50 பேர் மாயம்
Image Credit : X

உத்தரகண்ட் வெள்ளத்தில் 4 பேர் பலி, 50 பேர் மாயம்

கீர்க் கங்கா நதியின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில் பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலபேர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆர்யா, தராலி கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் நான்கு பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். "ஒரு பெரிய அளவிலான வெள்ள அலை அந்தப் பகுதியைத் தாக்கியது. உயிர் மற்றும் உடைமைச் சேதங்களின் அளவை நாங்கள் தற்போது மதிப்பிட்டு வருகிறோம்," என்று ஆர்யா தெரிவித்தார்.

Related Articles

Related image1
கடும் சர்ச்சைக்கு இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை திறக்கிறார் மோடி.! பெங்களூரில் பாஜக - காங்கிரஸ் அடிதடி
Related image2
கின்னஸ் சாதனை படைத்த மோடி! 'பரிக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சிக்கு 3.5 கோடி மாணவர்கள் பேர் பதிவு!
33
மீட்புப் பணிகள் தீவிரம்
Image Credit : SOCIAL Media

மீட்புப் பணிகள் தீவிரம்

மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்காக ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றின் குழுக்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்புமாறு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளத்தின் சீற்றத்தைக் காட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. தராலி கிராமத்தின் வழியாக வெள்ளம் பாய்ந்து, வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளை அடித்துச் செல்லும் காட்சிகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. சில ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் வெள்ளத்தில் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
வெள்ளம்
இந்தியா
நரேந்திர மோடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Related Stories
Recommended image1
கடும் சர்ச்சைக்கு இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை திறக்கிறார் மோடி.! பெங்களூரில் பாஜக - காங்கிரஸ் அடிதடி
Recommended image2
கின்னஸ் சாதனை படைத்த மோடி! 'பரிக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சிக்கு 3.5 கோடி மாணவர்கள் பேர் பதிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved