பிரம்மிப்பின் உச்சம்! ஆக்குவா, ரோபோடிக், மற்றும் நேச்சர் பார்க்கை நாளை திறந்து வைக்கும் பிரதமர்! போட்டோ கேலரி!
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் ரயில்வே மற்றும் பல முக்கிய திட்டங்களை நாளை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். 20 ஏக்கர் நிலத்தில் 14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நேச்சர் பார்க்கையும் திறந்து வைக்கிறார். இதுகுறித்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் ரயில்வே மற்றும் பல முக்கிய திட்டங்களை நாளை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
ரயில்வே திட்டங்களில் மாநில தலைநகர் காந்திநகரில் புதிதாக மறுவடிவமைக்கப்பட்ட ரயில் நிலையம், கேஜ் மாற்றப்பட்டு -மின்-மின்மயமாக்கப்பட்ட மகேசனா - வரேதா பாதை மற்றும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட சுரேந்திரநகர் - பிபாவவ் பிரிவு ஆகியவை அடங்கும்.
காந்திநகர் தலைநகரம் - வாரணாசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் காந்திநகர் தலைநகரம் மற்றும் வரேதா இடையேயான மெமு சேவை ரயில்கள் என இரண்டு புதிய ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து துவங்கி வைக்கிறார்.
குஜராத்தில் மொத்தம் ஏழு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நாளை அர்ப்பணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நவீனமயமாக்கப்பட்ட ரயில் நிலையம் மற்றும் மாநில தலைநகர் காந்திநகரில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகியவை இதில் அடங்கும்.
வாரணாசியையும், வாட்நகரையும் இணைக்க புதிய ரயில் பாதைகளையும், ரயில்களையும், பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் அகமதாபாத்தில் உள்ள குஜராத் அறிவியல் நகரத்தில் மூன்று புதிய இடங்களை பிரதமர் திறந்து வைக்கிறார்.
264 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நீர்வாழ் கேலரியில் 68 தொட்டிகள், 28 மீட்டர் நீருக்கடியில் நடைபாதை சுரங்கப்பாதை உள்ளது.
இதில் சுறா மற்றும் பிற நீர்வாழ் விலங்குகள் உட்பட 188 இனங்களின் 11,600 மீன்கள் உள்ளன.
இந்த பெரிய பெரிய மீன்களை பராமரிக்கவும், அதில் கை தேர்ந்த நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 127 கோடி ரூபாய் செலவில் ரோபோ கேலரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மருந்து, வேளாண்மை, விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உணவு பரிமாறும் ரோபோ வெயிட்டர்கள் ஆகிய 79 வகைகளில் 200 க்கும் மேற்பட்ட ரோபோக்கள் உள்ளன.
இவை ஒவ்வொன்றும் பார்பவர்களுக்கே பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மனிதர்கள் பயன்படுத்த கூடிய சில ரோபோக்களும் இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
20 ஏக்கர் நிலத்தில் 14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நேச்சர் பூங்காவில் மூடுபனி மூங்கில் சுரங்கம், யோகா இடம், திறந்த உடற்பயிற்சி நிலையம், குழந்தைகளின் விளையாட்டு பகுதி, ஜாகிங் மற்றும் நடைபயிற்சி தடங்கள் உள்ளது. இவை அனைத்தையும் நாளை துவங்கி வைக்கிறார் பிரதமர்.