MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • நாட்டின் நம்பர் 1 ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்! என்ன காரணம்?

நாட்டின் நம்பர் 1 ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்! என்ன காரணம்?

இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Rayar r
Published : Feb 18 2025, 08:11 AM IST| Updated : Feb 18 2025, 08:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நாட்டின் நம்பர் 1 ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்! என்ன காரணம்?

நாட்டின் நம்பர் 1 ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்! என்ன காரணம்?

இந்தியாவின் தலைநகர் புது டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகாகும்பமேளா நடந்து வரும் நிலையில், அங்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. 

டெல்லி ரயில் நிலையத்தின் 13 மற்றும் 14 என இரண்டு நடைமேடைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. அப்போது 16வது நடைமேடையில் ஒரு ரயில் வந்துள்ளது. இதற்காக மொத்த பயணிகளும் 16து பிளாட்பார்ம் நோக்கி ஓடியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.  நடைமேடை குறித்த முறையான அறிவிப்பு இல்லாததும், சில ரயில்கள் தாமதமாக வந்ததும் விபத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மெத்தனமாக இருந்த ரயில்வே துறைக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

24
புது டெல்லி ரயில் நிலையம்

புது டெல்லி ரயில் நிலையம்

இந்நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், டெல்லி ரயில் நிலைய அதிகாரிகள் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளனர். அங்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளனர். அதாவது சரியான காரணமின்றி டெல்லி ரயில் நிலைய நடைமேடையில் சுற்றித் திரிவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விதியைச் செயல்படுத்தவும், சீரான பயணிகள் இயக்கத்தை உறுதி செய்யவும் கூடுதலாக பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் பிரயாக்ராஜுக்குச் செல்லும் ரயில்கள் நெருக்கமான கண்காணிப்பில் உள்ளன. கூட்ட நெரிசலைத் தவிர்க்க பிளாட்ஃபார்ம்களில் பயணிகளின் எண்ணிக்கையை குழுக்கள் கடுமையாகக் கண்காணித்து வருகின்றன. மேலும் டெல்லி ரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மர்மம் நிறைந்த 5 ரயில் நிலையங்கள்! யாரும் தனியாக போக மாட்டாங்களாம்!

34
புது டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்

புது டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்

புது டெல்லி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட 5 முக்கிய மாற்றங்கள் என்னென்ன?

* மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

* கடுமையான நுழைவு விதிகள்: செல்லுபடியாகும் டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் மட்டுமே முழுமையான சரிபார்ப்புக்குப் பிறகு நடைமேடைகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

* ரயில் வருகைக்கு முன் வரிசை அமைப்பு: பயணிகள் இப்போது ஏறுவதற்கு முன் நியமிக்கப்பட்ட வரிசையில் நிற்க வேண்டும், இது ஒரு ஒழுங்கான செயல்முறையை உறுதி செய்யும்.

* புதிய காத்திருப்பு பகுதி: சத் பூஜையின் போது ஏற்பாடுகளைப் போலவே, பயணிகளுக்காக நிலையத்திற்கு வெளியே ஒரு பிரத்யேக காத்திருப்பு மண்டலம் அமைக்கப்படும்.

* 15 மற்றும் 16 பிளாட்ஃபார்ம்களில் எஸ்கலேட்டர்கள் மூடப்பட்டுள்ளன: கூட்ட நெரிசல் மற்றும் சாத்தியமான விபத்துகளைத் தடுக்க, இந்த பிளாட்ஃபார்ம்களில் எஸ்கலேட்டர்கள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
 

44
பிளாட்பார்ம் டிக்கெட்

பிளாட்பார்ம் டிக்கெட்

ஞாயிற்றுக்கிழமை நெரிசல் அதிகமாக இருந்ததால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையான நெரிசலுக்கு மத்தியில் ரயில்களில் ஏற சிரமப்பட்டதாக ஒரு அதிகாரி கூறினார். மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், ''பொதுவாக இப்போது எந்த காரணமும் இல்லாமல் மக்கள் நடைமேம்பாலத்தில் நிற்க காவல்துறை அனுமதிக்காது. பயணிகளை வழிநடத்தவும் பீதி சூழ்நிலைகளைத் தவிர்க்கவும் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன'' என்றார்.

டெல்லியில் கூட்ட நெரிசலால் ரயில் சேவை ரத்து: பிரயாக்ராஜில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
இந்தியா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved