MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • OYO Rooms Scam: ஓயோவில் இத்தனை கோடி மோசடியா? அதிர வைக்கும் தகவல்கள்!

OYO Rooms Scam: ஓயோவில் இத்தனை கோடி மோசடியா? அதிர வைக்கும் தகவல்கள்!

உலகம் முழுவதும் பிரபலமான ஓயோவில் மிகப்பெரும் மோசடி நடந்துள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஓயோ ரூம்ஸில் நடந்த அந்த மோசடி என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

2 Min read
Rayar r
Published : Apr 14 2025, 01:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

OYO Rooms Scam: ஓயோ ஹோட்டல் நிறுவனம் உலகம முழுவதும் பிரபலமாக விளங்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்காண மக்கள் ஓயோ ரூம்ஸ்களை புக்கிங் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஓயோ நிறுவனத்தில் ரூ.22 கோடி மோசடி நடந்துள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. போலியான புக்கிங் பெயரில் ஓயோ பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஓயோ உரிமையாளர் ரித்தேஷ் அகர்வால் மீது ரூ.22 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

24
OYO Rooms Scam

OYO Rooms Scam

ஓயோ செய்த மோசடி என்ன?

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சில ஹோட்டல் உரிமையாளர்கள் ஓயோ மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஓயோ தங்கள் ஹோட்டல்களில் போலியான புக்கிங் செய்து பணம் சம்பாதித்ததாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. ஓயோ தவறான முறையில் ஹோட்டல்களை புக் செய்வதன் மூலம் தனது வருமானத்தை அதிகரித்துக் கொண்டது. இதன் காரணமாக ஹோட்டல்கள் கடுமையாக நஷ்டமடைந்ததாக செய்திகள் வந்துள்ளன. 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி; பெல்ஜியத்தில் மெகுல் சோக்சி கைது!!

 

34
OYO Scam in India

OYO Scam in India

ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வால்

இந்த விஷயம் குறித்து ஹோட்டல் பெடரேஷன் ஆஃப் ராஜஸ்தான் தலைவர் ஹுசைன் கான் கவலை தெரிவித்துள்ளார். இது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது என்றார். ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் மீது ஒரு ஹோட்டல் நிர்வாகி ரூ.22 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோத்பூரில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கு மாநில ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி இருந்து நோட்டீஸ்கள் வந்துள்ளன. 

 

44
How Does OYO Fraud Happen?

How Does OYO Fraud Happen?

மோசடி எப்படி நடக்கிறது?

ஓயோ மூலம் ஹோட்டல்களை முதலில் ஆன்லைனில் புக் செய்து, சிறிது நேரம் கழித்து ரத்து செய்வதாக ஹோட்டல் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு ஜிஎஸ்டி வசூல் செய்வார்கள். இதனை ஹோட்டல் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். இப்படி தவறான வழியில் ஓயோ பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. தற்போது இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

பெங்களூரு விமான நிலையத்தில் இந்தி மொழி நீக்கமா? அதிகாரிகள் விளக்கம்!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஓயோ அறைகள்
OYO
இந்தியா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved