- Home
- இந்தியா
- முஸ்லிம்கள் சக்தி வாய்ந்தவர்களாக மாறும்போதுதான் இந்தியா வளர்ந்த நாடாகும்.. ஒவைசி தடாலடி..!
முஸ்லிம்கள் சக்தி வாய்ந்தவர்களாக மாறும்போதுதான் இந்தியா வளர்ந்த நாடாகும்.. ஒவைசி தடாலடி..!
முஸ்லிம் குழந்தைகளிடையே பள்ளி இடைநிற்றல் விகிதமும் அதிகமாக உள்ளது. இதற்கு அரசாங்கமே காரணம் என்று அவர் கூறினார்.

அரசு முஸ்லிம்களை வெறுக்கிறது
‘‘முஸ்லிம்கள் கல்வி மற்றும் பிற விஷயங்களில் சக்தி வாய்ந்தவர்களாக மாறும்போதுதான் வளர்ந்த இந்தியா கட்டமைக்கப்படும் என ஓவைசி தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது ஏஐஎம்ஐஎம் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அரசு மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார். ‘‘அரசு முஸ்லிம்களை வெறுக்கிறது. அரசாங்கம் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது பற்றிப் பேசுகிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்’’ என்று ஒவைசி கூறினார்.
முஸ்லிம் குழந்தைகள் சேர்க்கை குறைவு
உயர்கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் குழந்தைகள் சேர்க்கை குறைந்து வருவது குறித்து ஒவைசி அரசை விமர்சித்தார். கடந்த சில ஆண்டுகளில், தொடக்க, உயர்கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் குழந்தைகள் சேர்க்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். இது திடீர் நிகழ்வு அல்ல. முஸ்லிம் குழந்தைகளிடையே பள்ளி இடைநிற்றல் விகிதமும் அதிகமாக உள்ளது. இதற்கு அரசாங்கமே காரணம் என்று அவர் கூறினார். இந்த அரசாங்கத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஐந்து ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கான மூன்று உதவித்தொகை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் கூறினார்.
சிறுபான்மையினர் விவகாரங்களுக்கு ரூ.10,000 கோடி
மோடி அரசு முஸ்லிம்களை வெறுப்பதால் இது நடக்கிறது என்று ஒவைசி குற்றம் சாட்டினார். இந்த அரசு 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது பற்றிப் பேசுகிறது என்றும், இது பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை. பட்ஜெட்டில் சிறுபான்மை விவகார அமைச்சகத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.10,000 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று ஒவைசி கோரினார்.
பாகிஸ்தானுக்குள் நுழைந்து கைது செய்யுங்கள்
அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவும், சீனா தொடர்பான பிரச்சினை குறித்து அவையில் விவாதம் நடத்தவும் அவர் கோரினார். பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், மசூத் அசார், ஜாகியுர் ரெஹ்மான் லக்வி ஆகியோரை உதாரணங்களாகக் காட்டி, ஓவைசி அவர்களை குறிவைத்தார். அரசாங்கம் ஆபரேஷன் இன்சாஃப் தொடங்கி பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்த பயங்கரவாதிகளைப் பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
லடாக்கின் சுயேச்சை எம்.பி. முகமது ஹனிபாவும் மத்திய அரசிடம் ஒரு சில கோரிக்கையை வைத்தார். யூனியன் பிரதேசங்களில் சுகாதார உள்கட்டமைப்பு, இணைப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுகாதார உள்கட்டமைப்பு, இணைப்புக்கு அரசு அதிக பட்ஜெட்டை ஒதுக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
