MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இந்தியாவில் மாவட்டம் தோறும் 5G நெட்வொர்க் வந்துருச்சு! பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவில் மாவட்டம் தோறும் 5G நெட்வொர்க் வந்துருச்சு! பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடி 9வது இந்திய மொபைல் காங்கிரஸ் 2025-ஐ தொடங்கி வைத்தார். 5G முதல் 6G வரையிலான புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்தார். இந்த மாநாடு இந்தியாவின் தொழில்நுட்பத் தன்னிறைவை பறைசாற்றுகிறது என்றும் கூறினார்.

1 Min read
SG Balan
Published : Oct 08 2025, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்திய மொபைல் காங்கிரஸ் 2025
Image Credit : DD

இந்திய மொபைல் காங்கிரஸ் 2025

9வது இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2025 மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) புது டெல்லியில் உள்ள யசோபூமியில் தொடங்கி வைத்தார். 'மாற்றத்திற்காக புதுமைப்படுத்துதல்' (Innovate to Transform) என்ற கருப்பொருளின் கீழ் அக்டோபர் 8 முதல் 11 வரை இந்த நிகழ்வு நடைபெறும்.

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, நிதி மோசடி தடுப்பு, குவாண்டம் தொடர்பு, 6G, ஆப்டிகல் தொடர்பு மற்றும் செமிகண்டக்டர்கள் போன்ற துறைகளில் பல ஸ்டார்ட்அப்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்கின்றன என்றும் இவை இந்தியாவின் தொழில்நுட்ப திறன்களை நிரூபிக்கின்றன என்றும் கூறினார்.

23
தற்சார்பு இந்தியாவுக்கு வலிமை
Image Credit : Asianet News

தற்சார்பு இந்தியாவுக்கு வலிமை

இந்திய மொபைல் காங்கிரஸ் ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தொழில்நுட்ப மன்றமாக வளர்ந்துள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த வளர்ச்சிக்கு இந்தியாவின் தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளைஞர்கள்தான் காரணம் என்றார். ‘தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி நிதி’, 'டிஜிட்டல் தொலைத்தொடர்பு புத்தாக்கம்' போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தத் திட்டங்கள் 5G, 6G, ஆப்டிகல் கம்யூனிகேஷன் மற்றும் டெரா-ஹெர்ட்ஸ் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான நிதி மற்றும் சோதனை வசதிகளை வழங்குகின்றன.

இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடும் தொலைத்தொடர்புத் துறையில் இந்தியா பெற்றுள்ள வெற்றியும் தற்சார்பு இந்தியா என்ற பார்வையின் வலிமையை பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார்.

Related Articles

Related image1
கோபமடையச் செய்த செயல்! நீதிபதியை தாக்க முயன்றவருக்கு பிரதமர் மோடி கண்டனம்!
Related image2
பிரதமர் மோடி புத்திசாலியான தலைவர்.. மோடியை வைத்து டிரம்பை வெறுப்பேற்றும் புதின்..?
33
சவால்களை முறியடித்த ‘மேக் இன் இந்தியா’
Image Credit : Google

சவால்களை முறியடித்த ‘மேக் இன் இந்தியா’

'மேக் இன் இந்தியா' திட்டம் பற்றி நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, “ஒரு காலத்தில் 2ஜி இணைப்பிற்காகப் போராடிய நாடு, இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 5ஜி கவரேஜைக் கொண்டுள்ளது. 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மின்னணு உற்பத்தி 6 மடங்கு அதிகரித்துள்ளது, மொபைல் போன் உற்பத்தி 28 மடங்கு வளர்ந்துள்ளது, மற்றும் ஏற்றுமதி 127 மடங்கு அதிகரித்துள்ளது.” எனத் தெரிவித்தார்.

"கடந்த பத்தாண்டுகளில், மொபைல் போன் துறை கோடிக்கணக்கான நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியில் உள்ள 45 இந்திய நிறுவனங்கள் சுமார் 3.5 லட்சம் வேலைகளை உருவாக்கியுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
நரேந்திர மோடி
தொழில்நுட்பம்
நகர்பேசி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved