MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மருந்து சீட்டுகளை கன்னடத்தில் எழுதனுமா? சாட்டையடி பதிலளித்த கர்நாடகா அமைச்சர்!

மருந்து சீட்டுகளை கன்னடத்தில் எழுதனுமா? சாட்டையடி பதிலளித்த கர்நாடகா அமைச்சர்!

டாக்டர்கள், மருந்துச் சீட்டுகள் கன்னடத்தில் எழுதவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளது. ஆனாலும் இது கட்டாயமாக்கப்படவில்லை என கர்நாடக மருத்துவத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். 

2 Min read
Author : Web Team
| Updated : Sep 12 2024, 10:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கன்னட வளர்ச்சி ஆணையம் (Kannada Development Authority - KDA ) கடந்த திங்கட் கிழமை அன்று, கர்நாடக மருத்துவத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், அரசு சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியான கன்னடத்தில் மருந்துச் சீட்டு எழுதுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

KDA - கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் புருஷோத்தம் பிலிமலே, ஒவ்வொரு ஆண்டும் டாக்டர்கள் தினத்தன்று தாலுகா, மாவட்டம் மற்றும் மாநில அளவில் உள்ள மருத்துவர்கள் கன்னட மொழியின் மீதான மதிப்பையும், அன்பையும் அங்கீகரிக்கும் வகையில் அவர்களை கௌரவிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

அவ்வாறு செய்யும் பட்சத்தில், கன்னட மொழியின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், இவ்விசயத்தில் கவனம் செலுத்துமாறு இக் கடிதம் மூலம் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் புருஷோத்தம் பிலிமலே மேலும் கூறுகையில், “ மருத்துவ குறிப்புகளை கன்டத்தில் எழுதுவது குறித்து ஊடகங்களில் படித்த பிறகு, நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் தானாக முன்வந்து, மொழியைக் காப்பாற்ற கன்னடத்தில் மருந்துச் சீட்டு எழுதத் தொடங்குவார்கள் என்று தெரிவிதார். அவர்களில் பலர் கன்னடத்தில் எழுதிய மருந்துச் சீட்டுகளையும் தன்னுடன் பகிர்ந்து கொண்டதாக அவர் கூறினார்.

"மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார மையங்கள், தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மருந்துச் சீட்டு எழுதும் போது கன்னட மொழிக்கு முன்னுரிமை அளித்தால், கன்னட மொழியின் அடையாளத்தைப் பாதுகாப்பதில் அது முக்கியப் படியாக இருக்கும்," என்று பிலிமலே கூறினார். அதை எளிதாக செயல்படு்த்திவிடமுடியாது என்றாலும், மாநில அரசின் உறுதியான நிலைப்பாடு இதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவித்தார்.
 

34
Dinesh gundu rao

Dinesh gundu rao

KDA கடிதத்திற்கு பதிலளித்துள்ள அமைச்சர்!

இந்த கடிதம் குறித்து கருத்து கர்நாடக கல்வித் துறை அமைச்சர் சரணாபிரகாஷ் பாட்டீல், இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். “கன்னடத்தில் மருந்துச் சீட்டு வழங்கும் திட்டத்தில் எந்தத் தவறும் இல்லை என்றும், பெரும்பாலான மருத்துவர்களுக்கு கன்னடம் தெரியும், ஆனால் அது ஒரு வசதியான விஷயம். போதைப்பொருள் பெயர்களை கன்னடத்தில் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.

மேலும், இக் கடிதத்திற்கு பதிலளித்துள்ள கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ், "மருந்து பெயர்கள் மற்றும் மருத்துவ விதிமுறைகள் தெளிவாக புரியும் படி இருக்க வேண்டும். மருத்துவர்களுக்கு கன்னடம் தெரிந்திருந்தால், தெளிவாக எழுத முடியும். கன்னடர் அல்லாத மருத்துவர்கள் இதை செய்ய இயலாது. இந்த யோசனையை கட்டாயமாக்குவது நடைமுறையில் சாத்தியமில்லை என பதிலளித்துள்ளார்.

44

ஏற்கனவே, பெங்களூரு கன்னடர்களுக்கு சொந்தமானது என்ற எக்ஸ் பதிவு ஒன்று வைரலாகி ஆன்லைனில் ஒரு யுத்தமே நடைபெற்று வருகிறது. லட்சுமி தன்மயி என்ற ட்விட்டர் பயனர் இட்ட பதிவில், 'பெங்களூருவில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் அனைவருக்கும், நீங்கள் கன்னடம் பேசவில்லை என்றால் அல்லது கன்னடம் பேச முயற்சிக்கவில்லை என்றால் உங்களை வெளியாட்களாகவே நடத்துவோம்.

இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அனைவருக்கும் தெரிவியுங்கள். நாங்கள் விளையாடவில்லை. பெங்களூரு கன்னடர்களுக்கு சொந்தமானது' என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கன்னடர்களா? அல்லது வெளியாட்களா என்ற விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது

பெங்களூருவில் கன்னட மொழி பேசாவிட்டால் கன்னடர்களின் நெஞ்சில் இடமில்லை! வைரலாகும் ட்வீட்!

இந்நிலையில், கன்னட மொழியை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மருத்துவ குறிப்பு களை கன்னடத்தில் எழுத கோரிக்கை எழுந்துள்ளது.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
கர்நாடகா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Railway Rules: பிளாட்பாரத்துல சுத்துனா ஜெயில்? ரயில்வேயின் 'டாப் சீக்ரெட்' விதிகள்.. பயணிகள் உஷார்!
Recommended image2
CM Vijay: இம்மாத இறுதியில் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..! பிரதமருடன் முக்கிய சந்திப்பு..
Recommended image3
மொத்தமாக மாறும் விதிமுறை..? நோட்டமிடும் Income Tax.. ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved