MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பெங்களூருவில் கன்னட மொழி பேசாவிட்டால் கன்னடர்களின் நெஞ்சில் இடமில்லை! வைரலாகும் ட்வீட்!

பெங்களூருவில் கன்னட மொழி பேசாவிட்டால் கன்னடர்களின் நெஞ்சில் இடமில்லை! வைரலாகும் ட்வீட்!

இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகரான பெங்களூரு கன்னடர்களுக்கு சொந்தமானது என்ற எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது. லட்சுமி தன்மயி என்ற ட்விட்டர் பயனர் இட்ட பதிவு, கன்னடர்கள் மற்றும் வெளியாட்கள் என்ற விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. லட்சுமி தன்மய்யின் பதிவில் என்ன இருக்கிறது? 

2 Min read
Web Team
Published : Sep 09 2024, 04:56 PM IST| Updated : Sep 09 2024, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bangalore

Bangalore

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், வாழ்க்கை ஆகியவற்றை வழங்கியுள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்பு பெங்களூருக்கு வந்த வெளிமாநில மக்களும் இங்குள்ள கலாச்சாரத்துடன் கலந்து கன்னடர்களாக மாறிவிட்டனர் (அனைவரும் அல்ல, ஒரு சிலர் மட்டுமே).

ஆனால் தற்போது பெங்களூருவில் உள்ளூர்வாசிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் என்ற விவகாரம் மீண்டும் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இணையவாசிகள் இணையத்தில் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

25
Bangalore

Bangalore

இந்தியாவின் சிலிக்கான் சிட்டி என்று அழக்கப்படும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகரான பெங்களூரு கன்னடர்களுக்கு சொந்தமானது என்ற ட்விட்டர் வலைத்தளப் பதிவு வைரலானது. லட்சுமி தன்மயி என்ற எக்ஸ் தள பயனர் இட்ட பதிவு, கன்னடர்கள் மற்றும் வெளியாட்கள் என்ற விவாதத்திற்கு அடிகோடிட்டுள்ளது. லட்சுமி தன்மய்யின் பதிவில் அப்படி என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

'பெங்களூருவிற்கு வரும் அனைவருக்கும், நீங்கள் கன்னடம் பேசவில்லை என்றால் அல்லது கன்னடம் பேச முயற்சிக்கவில்லை என்றால் உங்களை வெளியாட்களாகவே நடத்துவோம். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அனைவருக்கும் தெரிவியுங்கள். நாங்கள் விளையாடவில்லை. பெங்களூரு கன்னடர்களுக்கு சொந்தமானது' என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

35
Bangalore

Bangalore

இந்த பதிவை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், 6,000க்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்து பெரிய ஆன்லைன் போரே நடத்தியுள்ளனர். 3,500 பேர் இதை மறுபதிவு செய்துள்ளனர், 9,000க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர், 1,500 பேர் புக்மார்க் செய்துள்ளனர். இங்கு பரஸ்பர ஆதரவு மற்றும் எதிர்ப்பு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பெங்களூரு அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது, உள்ளூர் கலாச்சாரத்தை மதிப்பது முக்கியம்தான், ஆனால் அதுவே உயர்ந்தது என்று நடிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மொழியை மதிப்பது முக்கியம். ஆனால் மொழி என்ற பெயரில் மக்களை பிரிப்பது எதிர்மறை எண்ணங்களை தூக்கி நிறுத்துவதைப் போன்றது. பெங்களூரு நகரம் பல்லாயிரம் ஆண்டுகளாக பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது, எல்லா இடங்களிலிருந்தும் மக்களை வரவேற்றுள்ளது. எனவே நாம் பன்முகத்தன்மையை கொண்டாட வேண்டும், எல்லாவற்றுக்கும் வரம்புகளை விதிக்கக்கூடாது என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

45
Bangalore

Bangalore

மேலும் சிலர் இங்கு வாழ்வதற்கு எளிதாக பழகுவதற்கு கன்னடம் கற்றுக்கொள்ளுமாறு கன்னடர்கள் அல்லாதவர்களிடம் கேட்டுள்ளனர். பெங்களூருவில் IBM-ல் பணிபுரிந்தபோது நான் 4 மாதங்கள் மட்டுமே தங்கியிருந்தேன். அப்போது நான் கன்னட மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சித்தேன். மக்களிடம் கன்னடத்தில் பேச முயற்சித்தேன். இதற்காக ஆங்கிலம்-கன்னடம் பாக்கெட் அகராதியை எடுத்துச் சென்றேன்.

இப்போது எனக்கு கொஞ்சம் கன்னடம் பேசத் தெரியும், சில கன்னட வார்த்தைகள் தெரியும். ஆர்வம், மரியாதை இதுதான் அவர்கள் உண்மையில் எதிர்பார்க்கிறார்கள் என்று கன்னடர் அல்லாத ஒருவர் தான் கன்னடம் கற்ற கதையையும், பெங்களூரு கன்னட மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் கன்னடர்கள் அல்லாதவர்களுக்கு விளக்க முயற்சித்துள்ளார்.

Tirupati Temple: இனி திருப்பதியில் பக்தர்களுக்கு இலவசம்! மீண்டும் அதிரடியாக களத்தில் இறங்கிய தேவஸ்தானம்!
 

55
Bangalore

Bangalore

மேலும் உடற்பயிற்சியாளரான பிரியங்கா லஹரி என்பவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், பெங்களூருவில் எனக்கு கன்னடம் தெரியாது என்றாலும் யாரும் என்னை மோசமாக நடத்தியதில்லை, கடந்த 8 ஆண்டுகளாக நான் பெங்களூருவில் இருக்கிறேன். எனக்கு கன்னடம் கற்றுக்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் எல்லா வகையான மக்களும் இருக்கிறார்கள். நீங்கள் திறந்த மனதுடன் வந்தால் நல்ல கன்னடர்களை சந்திக்க நேரிடும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக இந்த எக்ஸ் தளப் பதிவு ட்விட்டரில் ஒரு பெரிய ஆன்லைன் போரை உருவாக்கியுள்ளது, கன்னட ஆர்வலர்கள் மற்றும் கன்னடம் கற்க விருப்பமில்லாதவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
 

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
பெங்களூரு
சமூக ஊடகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved