பஹல்காம் தாக்குதல்! இந்திய விவசாயிகள் எடுத்த முடிவு! கதிகலங்கிய பாகிஸ்தான்!
கர்நாடக மாநிலம் கோலார் விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர்.

Farmers stopped exporting tomatoes to Pakistan: ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. பாகிஸ்தான் உடனான வர்த்தக தொடர்புகள் அனைத்தையும் நிறுத்தியது.
Farmers stopped exporting tomatoes to Pakistan
பாகிஸ்தானுக்கு தக்காளி நிறுத்தம்
இந்நிலையில், இந்திய விவசாயிகள் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர்.
அதாவது கர்நாடக மாநிலம் கோலார் விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். கோலாரின் APMC சந்தை ஆசியாவின் இரண்டாவது பெரிய தக்காளி சந்தை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அதனால்தான் கோலார் மாவட்டத்தில் விளையும் தரமான தக்காளி, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
900 டன் தக்காளி ஏற்றுமதி
ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் தக்காளி அறுவடை காலம். இந்த நேரத்தில், கோலாரின் தக்காளி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இதில், பாகிஸ்தானுக்கு வழக்கமாக வாரத்திற்கு 800 முதல் 900 டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டது. தக்காளி, மாம்பழம் மற்றும் பிற காய்கறிகளையும் ஏற்றுமதி செய்து வந்தனர்.
Tomatoes, Karnataka Farmers
விவசாயிகள் ஒருமனதாக முடிவு
கோலாரில் இருந்து சுமார் 42 மணி நேரப் பயணத்தில், லாரிகள் மற்றும் டெம்போக்கள் மூலம் சாலை வழியாக பாகிஸ்தான் எல்லைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து பாகிஸ்தான் மற்றும் பல்வேறு அண்டை நாடுகளுக்கு அங்குள்ள வர்த்தகர்கள் தங்கள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்று வந்தனர். இப்போது பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய படுகொலையின் பின்னணியில், இங்குள்ள விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் பாகிஸ்தானுக்கு தக்காளி விநியோகம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர் என்று CMR மண்டி உரிமையாளரும் JDS தலைவருமான CMR ஸ்ரீநாத் கூறுகிறார்.
India vs Pakistan
பாகிஸ்தானுக்கு ஒரு தக்காளியும் கொடுக்க மாட்டோம்
புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோதும் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை நிறுத்த முடிவு செய்தோம். ஆனால், மற்ற தீவிரவாதத் தாக்குதல்களின் போது மனிதாபிமான அடிப்படையில் தக்காளியைக் கொடுத்தோம். ஆனால், இப்போது எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஒரு தக்காளியைக் கூட பாகிஸ்தானுக்குக் கொடுக்க மாட்டோம்.