MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Sinjara festival: மருதாணி வச்சா கல்யாணம் நடக்குமா? ஜெய்ப்பூர் சிஞ்சாரா விழாவின் சுவாரஸ்ய நம்பிக்கை!

Sinjara festival: மருதாணி வச்சா கல்யாணம் நடக்குமா? ஜெய்ப்பூர் சிஞ்சாரா விழாவின் சுவாரஸ்ய நம்பிக்கை!

Sinjara festival: சிஞ்சாரா பண்டிகை என்றால் என்ன? ஜெய்ப்பூர் மோதி டூங்க்ரி கோவிலின் சிறப்புகள் என்ன? இந்த கோவிலில் மருதாணியை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதன் பின்னணி என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 20 2026, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிஞ்சாரா பண்டிகை என்றால் என்ன?
Image Credit : pinterest

சிஞ்சாரா பண்டிகை என்றால் என்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற மோதி டூங்க்ரி கணேஷ் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிஞ்சாரா விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் முக்கிய சிறப்பே, விநாயகருக்கு மருதாணி (Mehendi) சமர்ப்பிப்பதும், பின்னர் அந்த மருதாணியை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதுதான். இந்த பாரம்பரியம் சுமார் 200 ஆண்டுகளாக தொடர்வதாக நம்பப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மோதி டூங்க்ரி கோவிலின் சிறப்பு
Image Credit : pinterest

மோதி டூங்க்ரி கோவிலின் சிறப்பு

ஜெய்ப்பூரின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக மோதி டூங்க்ரி விநாயகர் கோவில் கருதப்படுகிறது. இந்திய அரசின் சுற்றுலா தள தகவலின்படி, இந்தக் கோவில் 1761ஆம் ஆண்டு சேத் ஜெய் ராம் பாலிவால் என்பவரால் கட்டப்பட்டது. ஜெய்ப்பூர் நகரின் மையப்பகுதியில், மோதி டூங்க்ரி மலையின் அடிவாரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

மோதி டூங்க்ரி என்பதற்கு ‘முத்து மலை’ என்று பொருள். மலை பார்ப்பதற்கு முத்து போன்ற தோற்றம் கொண்டிருப்பதால் இந்தப் பெயர் வந்ததாக ராஜஸ்தான் சுற்றுலாத்துறை குறிப்பிடுகிறது.

பாரம்பரியக் கதை

இந்தக் கோவிலுடன் தொடர்புடைய ஒரு பிரபலமான பாரம்பரியக் கதையும் உள்ளது. மேவார் மன்னர் ஒருவர் நீண்ட பயணத்திற்குப் பிறகு திரும்பி வரும்போது, விநாயகர் சிலையை மாட்டு வண்டியில் எடுத்துச் சென்றதாகவும், அந்த வண்டி எந்த இடத்தில் முதன்முறையாக நின்றதோ, அங்கேயே விநாயகருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று அவர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வண்டி மோதி டூங்க்ரி மலையின் அடிவாரத்தில் நின்றதாக நம்பப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே தற்போதைய கோவில் அமைந்ததாக வரலாற்றுக் கதை தெரிவிக்கிறது.

34
விநாயகருக்கு ஏன் மருதாணி?
Image Credit : pinterest

விநாயகருக்கு ஏன் மருதாணி?

உள்ளூர் மத நம்பிக்கையின்படி, சிஞ்சாரா விழாவில் விநாயகருக்கு அர்ப்பணிக்கப்படும் சிறப்பு மருதாணியைப் பெற்று கைகளில் இட்டுக்கொண்டால், திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது அப்பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது.

இதன் காரணமாக, திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சிஞ்சாரா விழாவில் வழங்கப்படும் மருதாணி பிரசாதத்தை ஆர்வத்துடன் பெற்றுக்கொள்கின்றனர்.

44
2026-ல் என்ன நடந்தது?
Image Credit : Gemini AI

2026-ல் என்ன நடந்தது?

2026 செப்டம்பர் 13 அன்று நடைபெற்ற சிஞ்சாரா விழாவில் விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு மருதாணியைப் பெற ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். இந்த ஆண்டு மட்டும் சுமார் 3,500 கிலோ மருதாணி பிரசாதமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மருதாணியை முதலில் மாலை நேரத்தில் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பக்தர்களின் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகரித்ததால், கோவில் நிர்வாகம் திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே விநியோகத்தைத் தொடங்கியது. இருந்தபோதிலும், சுமார் 3,500 கிலோ மருதாணியும் மூன்று மணி நேரத்திற்குள் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

முக்கிய குறிப்பு: திருமணத் தடைகள் நீங்கும் அல்லது திருமணம் விரைவில் நடைபெறும் என்பது மத நம்பிக்கையின் அடிப்படையிலான கருத்தாகும். இதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் இருப்பதாகக் கருதக்கூடாது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
திருவிழாக்கள்
ஆன்மீகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Subsidy: LPG சிலிண்டர் வாங்க அக்டோபர் 1 முதல் ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்.. மானியம் கிடைக்குமா..?
Recommended image2
Education Loan: கல்விக்கடன் பெறுவது எப்படி? அரசு மானியம் கிடைக்குமா? முழு விவரம் இதோ!
Recommended image3
Women Home Business: பெண்கள் வீட்டிலிருந்தே தொழில் தொடங்க அரசு கடன், மானியம்! எப்படி பெறுவது?
Related Stories
Recommended image1
Venus Transit: சுக்கிரன் பெயர்ச்சி..காதல், திருமணம், பண விஷயங்களில் என்ன மாற்றம்?
Recommended image2
Oscars 2027: ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் செல்லும் மராத்தி படம் 'கோந்தல்'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved