MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ரயிலில் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! முன்பதிவில்லா பெட்டிகளில் புதிய மாற்றம்!

ரயிலில் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! முன்பதிவில்லா பெட்டிகளில் புதிய மாற்றம்!

இந்திய ரயில்வே, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில் முன்பதிவில்லா பெட்டிகளில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலைக் குறைக்க ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.

2 Min read
Author : SG Balan
| Updated : Jul 17 2025, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்திய ரயில்வேயின் புதிய திட்டம்
Image Credit : Getty

இந்திய ரயில்வேயின் புதிய திட்டம்

இந்திய ரயில்வே, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு, முன்பதிவில்லா பெட்டிகளில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இனி ஒரு பெட்டிக்கு அதிகபட்சமாக 150 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்ற புதிய திட்டம் சோதனை அடிப்படையில் புதுடெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

25
கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி
Image Credit : Getty

கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவம், முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. ஒரே நேரத்தில் அதிக டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதே இந்த சம்பவத்திற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நீண்ட தூர ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவில்லா பெட்டிகளில், இனி ஒரு பெட்டிக்கு தலா 150 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.

Related Articles

Related image1
ரயில் பயணிகள் இனி வாட்ஸ்அப் வழியாக புகார்களைப் பதிவு செய்யலாம்.. வெளியான நல்ல செய்தி
Related image2
சொந்த ஊர் பயணம் ரொம்ப ஈஸி: 1,035 சிறப்புப் பேருந்துகள் ரெடி!
35
புதிய திட்டத்தின் விவரங்கள்
Image Credit : Getty

புதிய திட்டத்தின் விவரங்கள்

உதாரணமாக, எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் கொல்லம், அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா 4 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் மொத்தம் 12 முன்பதிவில்லா பெட்டிகளுக்கு 1,800 டிக்கெட்டுகள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கப்படும்.

தற்போது, முன்பதிவில்லா பெட்டிகளில் 90 முதல் 100 பேர் மட்டுமே பயணிக்க இருக்கை வசதி இருந்தாலும், தினந்தோறும் 300 முதல் 350 பேர் மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் நெருக்கியடித்து பயணம் செய்து வருகின்றனர். இந்த புதிய திட்டம் பயணிகளின் அசௌகரியத்தைக் குறைத்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து சாதக, பாதகங்களை பரிசீலித்து நடைமுறைகள் வகுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

45
தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிமுறைகள்
Image Credit : Getty

தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிமுறைகள்

ஜூலை 1 ஆம் தேதி முதல், ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டுமே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியும். நேற்று முன் தினம் முதல் (ஜூலை 15) ஆதாருடன் OTP அடிப்படையிலான உறுதிப்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் பயணச்சீட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

55
கண்காணிப்பு கேமராக்கள்
Image Credit : Getty

கண்காணிப்பு கேமராக்கள்

ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 74,000 ரயில் பெட்டிகள் மற்றும் 15,000 ரயில் என்ஜின்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. என்ஜின்களில் பொருத்தப்படும் கேமராவில் மைக்ரோஃபோனுன், 6 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்கள் ரயில் 100 கி.மீ. வேகத்தில் சென்றாலும் காட்சிகளைத் துல்லியமாகப் பதிவு செய்யும் திறன் கொண்டவை.

இந்திய ரயில்வேயின் இந்த புதிய மாற்றங்கள், பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய இரயில்வே
ரயில்
பயணம்
இந்தியா
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!
Recommended image2
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: விரலில் 'மை' க்கு பதிலாக மார்க்கர் பேனாக்கள்.. பொங்கியெழுந்த எதிர்க்கட்சிகள்!
Recommended image3
ED அலுவலகத்தில் ரெய்டு நடத்திய போலீஸார்..! பாஜக அதிர்ச்சி..!
Related Stories
Recommended image1
ரயில் பயணிகள் இனி வாட்ஸ்அப் வழியாக புகார்களைப் பதிவு செய்யலாம்.. வெளியான நல்ல செய்தி
Recommended image2
சொந்த ஊர் பயணம் ரொம்ப ஈஸி: 1,035 சிறப்புப் பேருந்துகள் ரெடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved